செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 23-30
அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம், ``செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்றார்.
சீடர்கள் இதைக் கேட்டு, ``அப்படியானால் யார்தாம் மீட்புப் பெற முடியும்?'' என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ``மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்'' என்றார்.
அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, ``நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?'' என்று கேட்டார்.
அதற்கு இயேசு, ``புதுப் படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நுறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர். ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்'' என்று அவர்களிடம் கூறினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
அந்த ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஆனால் அவர் மகா கஞ்சர்.
மகா கஞ்சரான அவர் தனது நண்பரைப் பார்ப்பதற்காக பேருந்தில் பயணம் போயிருந்தார். சாதாரணக் கட்டண பேருந்து என்பதால் மெதுவாகவே போனது. மதிய உணவுக்கு நண்பர் வீட்டுக்குப் போய்விடலாம் என திட்டமிட்டிருந்தார். தாமதம் ஆனதால் பசித்தது. பயணவழி உணவகத்தில் பஸ் நிற்க, உணவின் வாசத்தில் பசி இன்னும் அதிகமானது. எல்லாவற்றின் விலையும் அவரைப் பீதியடைய வைத்தது. சாலையோர உணவகங்களின் கட்டணம் அதிகம்தானே! ஒரு டீ குடித்து சமாளிக்கலாம் என போனார்.
இவர் கொடுத்தது போக மீதி காசுக்கு சில்லரை இல்லை என்றான் கடைக்காரன். பஸ் வேறு கிளம்பத் தயாராகி விட்டது. வேறு வழியின்றி, சில்லரைக்கு பதிலாக அவன் கொடுத்த இரண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கிக் கொண்டு பஸ் ஏறினார். ‘வெட்டிச் செலவு’ என வழியெல்லாம் இதை நினைத்துக் குமைந்தபடி போனார். நண்பர் வீட்டில் சாப்பிட்டபடி புலம்பினார். ஊருக்குத் திரும்பி வந்தும் புலம்பலை நிறுத்தவில்லை. இதிலேயே அவர் சோகமாகிவிட்டார்.
எதிர்பாராவிதமாக அவர் வாங்கிய ஒரு டிக்கெட்டுக்கு முதல் பரிசாக ஒரு கோடி ரூபாய் விழுந்தது. கேள்விப்பட்டதும் ஊரிலிருந்து நண்பர் கிளம்பி வந்துவிட்டார். மகா கஞ்சரான தன் நண்பனை மகிழ்ச்சிப் பூரிப்பில் பார்க்க நினைத்தவருக்கு ஆச்சரியம். இப்போதும் அதே சோக நிலையில்தான் இருந்தார் அவர். ‘‘அதான் லாட்டரியில பரிசு விழுந்துடுச்சே... இன்னும் ஏன் அதையே நினைச்சு சோகமா இருக்கே?’’ என கோபத்தை மறைத்துக்கொண்டு கேட்டார் நண்பர். ‘‘ஒரு சீட்டுக்குத்தானே விழுந்தது. இன்னொன்றை வாங்கியது வேஸ்ட்தானே’’ என்றார் அந்தக் கஞ்சர். வந்த நண்பர் தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டு வீட்டுக்குப் போனார்.
செல்வர்களிடம் எவ்வளவுதான் பணம் இருந்தாலும், அதைக்கொண்டு மகிழ்ச்சி கொள்ளாமல், வேண்டும் வேண்டும் என்ற மனநிலையிலே இருப்பார்கள் என்பதை நிகழ்வு வேதனையோடு பதிவு செய்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்று சொல்கின்றார். இயேசு ஏன் இவ்வாறு சொல்கிறார், இதற்குப் பின்னால் இருக்கும் அர்த்தமென்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
ஊசியின் காது என்பதற்கு விவிலிய அறிஞர்கள் ஒருசில விளக்கங்களைத் தருவார்கள். முதலாவது அது ஒருவகையான வழி. யூதர்கள் தங்களுடைய நகரங்களிலும் வாணிபத்திற்காகவும் மக்கள் நடமாட்டத்திற்காகவும் என்று இரண்டு விதமான வழிகளை – பாதைகளை - வைத்திருந்தார்கள். வாணிபத்திற்காக வைத்திருந்த வழியை இரவில் ஒரு குறிப்பிட்ட நேரம்வரைதான் திறந்து வைத்திருப்பார்கள். அதன்பிறகு அதனை அடைத்து விடுவார்கள். அப்போது வாணிபம் செய்வோர் தங்களுடைய பொருட்களை மக்கள் பயன்படுத்தும் பாதை வழியாகத்தான் கொண்டு செல்லவேண்டும். அந்தப் பாதையோ மிகவும் குறுகலாக இருக்கும், அதுதான் ஊசியின் காது என்று அழைக்கப்பட்டது. எனவே, மக்கள் போவதே மிகவும் கஷ்டமாக இருக்கும் அந்த குறுகலான பாதையில் – ஊசியின் காதில் – ஒட்டகம் செல்வது மிகக் கடினம். அதைத்தான் இயேசு ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எவ்வளவு கடினமோ, அவ்வளவு கடினம் செல்வம் இறையாட்சிக்கு உட்படுவது என்று கூறியிருப்பதாக விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள்.
இரண்டாவதாக கிரேக்கத்தில் ஒட்டகம் (Camilon) என்பதற்கு கப்பலை அசையாமல் இருக்கக் கட்ட பயன்படுத்தப்படும் வடம் அல்லது கயிறு என்கிற பொருள் இருக்கின்றது. இப்படி கப்பலைக் கட்டப் பயன்படுத்தப்படும் வடம் எப்படி ஒரு சிறிய ஊசியில் நுழையும். அதுபோன்றுதான் செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது கடினம் என்கிற பொருளில் இயேசு பயன்படுத்தியிருப்பதாக விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள்.
இதைவிடவும் செல்வம், தன்னால் எதையும் செய்துவிட முடியும் என்கிற மனப்பான்மையை ஒருவரிடத்தில் வளர்த்துவிடும் (திவெ 3:17); மண்ணைச் சார்ந்த வாழ்வையே வாழவைக்கும்; சுயநலத்தினை ஒருவரிடத்தில் ஏற்படுத்தும் என்பதாலும் இயேசு அவ்வாறு கூறியிருப்பார் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் இயேசு செல்வங்களுக்கு எதிரானவர் அல்ல, செல்வம் ஏற்படுத்தும் தீமைகளுக்கு எதிரானவர் என்கிற செய்தியைப் புரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் செல்வர்களில் சக்கேயு, அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பு, நிக்கதேம் போன்ற நல்லவர்களும் இருந்தார்கள்.
ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் செல்வத்தை நாம் மட்டும் பயன்படுத்தினால் அதனால் அழிவையும், அதனைப் பிறருக்குப் பயன்படுத்துகின்றபோது வாழ்வினையும் பெற்றுக்கொள்வோம் என்கிற உண்மையை உணர்வோம். அதன்படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 23-30
அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம், ``செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்றார்.
சீடர்கள் இதைக் கேட்டு, ``அப்படியானால் யார்தாம் மீட்புப் பெற முடியும்?'' என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ``மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்'' என்றார்.
அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, ``நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?'' என்று கேட்டார்.
அதற்கு இயேசு, ``புதுப் படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நுறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர். ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்'' என்று அவர்களிடம் கூறினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
அந்த ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஆனால் அவர் மகா கஞ்சர்.
மகா கஞ்சரான அவர் தனது நண்பரைப் பார்ப்பதற்காக பேருந்தில் பயணம் போயிருந்தார். சாதாரணக் கட்டண பேருந்து என்பதால் மெதுவாகவே போனது. மதிய உணவுக்கு நண்பர் வீட்டுக்குப் போய்விடலாம் என திட்டமிட்டிருந்தார். தாமதம் ஆனதால் பசித்தது. பயணவழி உணவகத்தில் பஸ் நிற்க, உணவின் வாசத்தில் பசி இன்னும் அதிகமானது. எல்லாவற்றின் விலையும் அவரைப் பீதியடைய வைத்தது. சாலையோர உணவகங்களின் கட்டணம் அதிகம்தானே! ஒரு டீ குடித்து சமாளிக்கலாம் என போனார்.
இவர் கொடுத்தது போக மீதி காசுக்கு சில்லரை இல்லை என்றான் கடைக்காரன். பஸ் வேறு கிளம்பத் தயாராகி விட்டது. வேறு வழியின்றி, சில்லரைக்கு பதிலாக அவன் கொடுத்த இரண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கிக் கொண்டு பஸ் ஏறினார். ‘வெட்டிச் செலவு’ என வழியெல்லாம் இதை நினைத்துக் குமைந்தபடி போனார். நண்பர் வீட்டில் சாப்பிட்டபடி புலம்பினார். ஊருக்குத் திரும்பி வந்தும் புலம்பலை நிறுத்தவில்லை. இதிலேயே அவர் சோகமாகிவிட்டார்.
எதிர்பாராவிதமாக அவர் வாங்கிய ஒரு டிக்கெட்டுக்கு முதல் பரிசாக ஒரு கோடி ரூபாய் விழுந்தது. கேள்விப்பட்டதும் ஊரிலிருந்து நண்பர் கிளம்பி வந்துவிட்டார். மகா கஞ்சரான தன் நண்பனை மகிழ்ச்சிப் பூரிப்பில் பார்க்க நினைத்தவருக்கு ஆச்சரியம். இப்போதும் அதே சோக நிலையில்தான் இருந்தார் அவர். ‘‘அதான் லாட்டரியில பரிசு விழுந்துடுச்சே... இன்னும் ஏன் அதையே நினைச்சு சோகமா இருக்கே?’’ என கோபத்தை மறைத்துக்கொண்டு கேட்டார் நண்பர். ‘‘ஒரு சீட்டுக்குத்தானே விழுந்தது. இன்னொன்றை வாங்கியது வேஸ்ட்தானே’’ என்றார் அந்தக் கஞ்சர். வந்த நண்பர் தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டு வீட்டுக்குப் போனார்.
செல்வர்களிடம் எவ்வளவுதான் பணம் இருந்தாலும், அதைக்கொண்டு மகிழ்ச்சி கொள்ளாமல், வேண்டும் வேண்டும் என்ற மனநிலையிலே இருப்பார்கள் என்பதை நிகழ்வு வேதனையோடு பதிவு செய்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்று சொல்கின்றார். இயேசு ஏன் இவ்வாறு சொல்கிறார், இதற்குப் பின்னால் இருக்கும் அர்த்தமென்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
ஊசியின் காது என்பதற்கு விவிலிய அறிஞர்கள் ஒருசில விளக்கங்களைத் தருவார்கள். முதலாவது அது ஒருவகையான வழி. யூதர்கள் தங்களுடைய நகரங்களிலும் வாணிபத்திற்காகவும் மக்கள் நடமாட்டத்திற்காகவும் என்று இரண்டு விதமான வழிகளை – பாதைகளை - வைத்திருந்தார்கள். வாணிபத்திற்காக வைத்திருந்த வழியை இரவில் ஒரு குறிப்பிட்ட நேரம்வரைதான் திறந்து வைத்திருப்பார்கள். அதன்பிறகு அதனை அடைத்து விடுவார்கள். அப்போது வாணிபம் செய்வோர் தங்களுடைய பொருட்களை மக்கள் பயன்படுத்தும் பாதை வழியாகத்தான் கொண்டு செல்லவேண்டும். அந்தப் பாதையோ மிகவும் குறுகலாக இருக்கும், அதுதான் ஊசியின் காது என்று அழைக்கப்பட்டது. எனவே, மக்கள் போவதே மிகவும் கஷ்டமாக இருக்கும் அந்த குறுகலான பாதையில் – ஊசியின் காதில் – ஒட்டகம் செல்வது மிகக் கடினம். அதைத்தான் இயேசு ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எவ்வளவு கடினமோ, அவ்வளவு கடினம் செல்வம் இறையாட்சிக்கு உட்படுவது என்று கூறியிருப்பதாக விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள்.
இரண்டாவதாக கிரேக்கத்தில் ஒட்டகம் (Camilon) என்பதற்கு கப்பலை அசையாமல் இருக்கக் கட்ட பயன்படுத்தப்படும் வடம் அல்லது கயிறு என்கிற பொருள் இருக்கின்றது. இப்படி கப்பலைக் கட்டப் பயன்படுத்தப்படும் வடம் எப்படி ஒரு சிறிய ஊசியில் நுழையும். அதுபோன்றுதான் செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது கடினம் என்கிற பொருளில் இயேசு பயன்படுத்தியிருப்பதாக விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள்.
இதைவிடவும் செல்வம், தன்னால் எதையும் செய்துவிட முடியும் என்கிற மனப்பான்மையை ஒருவரிடத்தில் வளர்த்துவிடும் (திவெ 3:17); மண்ணைச் சார்ந்த வாழ்வையே வாழவைக்கும்; சுயநலத்தினை ஒருவரிடத்தில் ஏற்படுத்தும் என்பதாலும் இயேசு அவ்வாறு கூறியிருப்பார் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் இயேசு செல்வங்களுக்கு எதிரானவர் அல்ல, செல்வம் ஏற்படுத்தும் தீமைகளுக்கு எதிரானவர் என்கிற செய்தியைப் புரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் செல்வர்களில் சக்கேயு, அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பு, நிக்கதேம் போன்ற நல்லவர்களும் இருந்தார்கள்.
ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் செல்வத்தை நாம் மட்டும் பயன்படுத்தினால் அதனால் அழிவையும், அதனைப் பிறருக்குப் பயன்படுத்துகின்றபோது வாழ்வினையும் பெற்றுக்கொள்வோம் என்கிற உண்மையை உணர்வோம். அதன்படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.
No comments:
Post a Comment