அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, August 25, 2017

அழைப்புப் பெற்றவர்கள் பலர், தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்

இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 45-51

அக்காலத்தில் பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, ``இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டு கொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்'' என்றார்.

அதற்கு நத்தனியேல், ``நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?'' என்று கேட்டார்.

பிலிப்பு அவரிடம், ``வந்து பாரும்'' என்று கூறினார்.

நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, ``இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்'' என்று அவரைக் குறித்துக் கூறினார்.

நத்தனியேல், ``என்னை உமக்கு எப்படித் தெரியும்?'' என்று அவரிடம் கேட்டார்.

இயேசு, ``பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்'' என்று பதிலளித்தார்.

நத்தனியேல் அவரைப் பார்த்து, ``ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்'' என்றார். அதற்கு இயேசு, ``உம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்'' என்றார்.

மேலும், ``வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று அவரிடம் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.      

  மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 24)

அழைப்புப் பெற்றவர்கள் பலர், தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்

எழுத்தாளர் வெ. இறையன்பு சொல்லக்கூடிய ஒரு கதை.

ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்துவந்த அவருக்கு மிகவும் இரக்க சுபாவம். தன்னிடமிருப்பதை எல்லாம் பிறருக்கு வாரி வழங்குவதில் ஒரு திருப்தி. கேட்டால்தான் தரவேண்டுமா? கேட்காமலே தருவதுதானே ஈகை என நினைத்தார்.

ஒருநாள் விதவிதமான பழங்களை வாங்கி வைத்துக்கொண்டு கதைவீதியில் அமர்ந்தார். “பழம் வேண்டுபவர்கள் வாருங்கள். இலவசமாய்ப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சத்தம் போட்டுக் கொப்பிட்டார். ஆனால், ஒருவர் கூட வரவில்லை. ‘இதில் ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோ’ என்றும், ‘இலவசமாய் யாராவது பழம் தருவார்களா – பழம் விற்கிற விலையில் – என்றும் ‘சுவையிருக்காதோ’ என்றும் விஷப்பழமோ’ என்றும் கூடிக்கூடிப் பேசி விலகிச் சென்றனர்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மனிதர் மாலையில் பழங்களைத் தூக்கி எறிந்துவிட்டு வந்தார். பலரும் அடித்துக்கொண்டு பொறுக்கிச் சென்றனர்.

கதையில் வரும் மனிதரைப் போன்று ஆண்டவராகிய கடவுளும் எல்லாருக்கும் தன்னுடைய அழைப்பினைத் தருகின்றார். ஆனால், மக்களோ கடவுளுடைய அழைப்பைப் புறக்கணித்துச் செல்வது – சென்றது - மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விண்ணரசை அரசன் தருகின்ற விருந்திருக்கு ஒப்பிடுகின்றார். கடுகு விதை, நிலத்தில் தோன்றிய களைகள், நிலத்தில் கிடைத்த முத்து இன்னும் பல்வேறு காரியங்களுக்கு விண்ணரசை ஒப்பிட்டுப் பேசிய இயேசு இங்கே விண்ணரசை அரசன் தருகின்ற விருந்துக்கு ஒப்பிடுகின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த உவமை நமக்கு இரண்டு உண்மைகளை மிகத் தெளிவாக விளக்குகின்றது. அவை என்னென்ன என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

உவமை சொல்லக்கூடிய முதாலவது உண்மை. கடவுள் தன்னுடைய அழைப்பை எல்லாருக்கும் விடுக்கின்றார் என்பதாகும். உவமையில் வருக்கூடிய அரசன் தான் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு வரவேண்டிய ஆட்கள் வராதபோது, அவர் தன்னுடைய பணியாளர்களிடம் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் அழைத்து வரச் சொல்கின்றார். அதாவது கடவுளின் அழைப்பு ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றது. ஆகையால், கடவுளின் பார்வையில் யாரும் கீழானவரோ அல்லது மேலானவரோ கிடையாது. கடவுளுக்கு அனைவரும் சமம் என்கிற செய்தியை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால் இன்றைக்கு சமுதாயத்தில் கடவுளின் பிள்ளைகளாகிய நாம் இனத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் பிளவுபட்டுக் கிடப்பது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நாம் அனைவரும் நம்மிடம் இருக்கின்ற பிரிவினைகளை வேரறுத்து ஆண்டவர் இயேசுவில் ஒன்றாக இணையவேண்டும் (கலா 3:28).

உவமை சொல்லக்கூடிய இரண்டாவது உண்மை, கடவுளின் அழைப்பு எல்லாருக்கும் கொடுக்கப்பட்டாலும், தகுதியானவர்கள் மட்டுமே அவர் தரக்கூடிய விருந்தில் பங்குகொள்ள முடியும் என்பது உண்மையாக இருக்கின்றது. உவமையில் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்ட ஒருவர் விருந்தினருக்கு ஏற்ற உடையில் இல்லாமல் இருப்பதைக் காணும் அரசர் அவரைப் பார்த்து, “தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?” என்று கேட்கின்றார். அவனோ வாயடைத்து நிற்கின்றான். ஆகவே, கடவுளின் அழைப்பு எல்லாருக்கும் இலவசமாகத் தரப்பட்டாலும் ஆண்டவரின் திருவிருந்தில் கலந்து கொள்ள வருகின்றபோது தகுதியான உள்ளத்தோடு வரவேண்டும். இல்லையென்றால் நாம் விருந்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவோம் என்பது உண்மையாக இருக்கின்றது.

இந்த இடத்தில் நாம் தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 11 ஆம் அதிகாரத்தில் குறிப்பிடுகின்ற செய்தியை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது. “ஆகவே, எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது கிண்ணத்தைப் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகின்றார். எனவே, ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகவேண்டும்” (27- 28) என்பார் தூய பவுல். நாம் இயேசுவின் உடலை தகுதியான உள்ளத்தோடு உள்ளத்தோடு உண்கின்றோமா? என்பது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

பல நேரங்களில் நாம் நம்முடைய உள்ளத்தில் அடுத்தவர்களைக் குறித்த பகைமை, வெறுப்பு, கேட்ட எண்ணம் இவற்றோடுதான் இயேசுவின் உடலை உட்கொள்கின்றோம். இவ்வாறு உட்கொள்வதால் நாம் செய்கிறோமே அன்றி வேறொன்றுமில்லை.

ஆகவே, ஆண்டவருடைய அழைப்பு அனைவருக்கும் உரியது என உணர்வோம். அவருடைய அழைப்பை நாம் ஏற்பதற்கு தகுதியான உள்ளத்தோடு இருப்போம், இறைவனுக்கு முன்பாக தகுதியான மனிதர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment