அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, August 20, 2017

புது மனப்பான்மை

🔴🔴🔴🔴🔴புது மனப்பான்மை🔴🔴🔴🔴🔴

3 யோவான் 1:2
அன்புக்குரியவரே, நீர் ஆன்ம நலந்தோடியிருப்பது போல் உடல் நலத்தோடு இருக்கவும் அனைத்தும் இனிதே நிகழவும் வேண்டுகிறேன்.

நம் விருப்பத்திற்க்கு மேலாக இயேசு நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார் ஆனால் அதே நேரத்தில் நம் எல்லைலக்கு மீறி ஆசீர்வாதம் வரும் போது நாம் பெருமையில் வீழ்ந்து விடாதபடியம்,அதனால் தேவ நாமம் மகிமை படாத சூழ்நிலை உருவாகத சூழ்நிலை உருவாகத படி நம்மை ஆசீர்வதிப்பதில் கவனமாக இருக்கிறார்.

பொறாமை, பகைமை ,கேலி செய்தல் என்பது சிறுபிள்ளைத் தனமாகும் .அது ஆவிக் குரிய வாழ்கை இல்லை ஆனால் அது நம் வாழ்வின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விடுகிறது
ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியும் தன் சிந்தனைகளை சீர்தூக்கி பார்க்க வேண்டும் .உங்கள் உள்ளத்தோடு நீங்கள் பேச வேண்டும் பிறர் மேல் பொறாமை கொள்வதினால் எனக்கு என்ன பயன் ?அதனால் எனக்கு தேவ ஆசீர்வாதம் கிடைக்காது கடவுள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திட்டங்களை வைத்து இருக்கிறார் அவர் எனக்கு சிறந்ததை செய்யும்படி நான் அவர் மேல் நம்பிக்கை வைக்க போகிறேன் .பிறருக்கு எதை செய்தாலும் எனக்கு கவலை இல்லை ,அது என் வேலையுமல்ல அவர்களையும் கடவுள் ஆசீர்வதிக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன் என்று ஜெபிபோம்

நம் நினைவுகள் நல்லவைகளாக இருக்க வேண்டுமென்றே கடவுள் விரும்புகிறார் நம் நினைவுகளை அவர் அறிந்தும் இருக்கிறார் . நாம் எண்ணங்களின் படி தான் நமக்கு உடல் நலமும், ஆன்ம நலமும் இருக்கு பொறாமை கொள்வதால் நமக்கு எந்த பயனும் இல்லை அதனால் நமக்கு நிம்மதி இல்லாமல் போய்விடுகிறது

உரோமையர் 12:2,3
 உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

இன்றைய உலகில் பலர் இந்த பொறாமைக்கு அடிமையாக இருக்கிறார்கள் தன் சகோதரன், நண்பர்கள், உறவுகள் தம்மை விட அதிக ஆசீர்வா தத்தை பெற்றால் அவர்கள் முன் நடித்து விட்டு பொறாமை என்னும் எரிச்சலோடு தன் வாழ்வையும் எரித்துக் கொண்டு நோய்வாய் பட்டே வாழ்வை கழிக்கிறார்கள்

மனமே நீ மனம் மாறு

ஆமென் ஆமென் ஆமென்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment