ஜெபமாலை

அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.
ஆரம்ப ஜெபம்
அளவில்லாத சகல நன்மையும் சுரூபியாயிருக்கிற சர்வேசுவரா சுவாமி நீச மனிதருமாய் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள் மட்டில்லாத மகிமைப் பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திரு சந்நிதியிலே இருந்து செபம் பண்ண பாத்திரமாகாதவர்களாயிருந்தாலும் தேவரீருடைய அளவில்லாத தயையை நம்பிக் கொண்டு, தேவரீருக்கு ஸ்துதி வணக்கமாகவும் புனித தேவமாதாவுக்குத் தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணிச் செபம் பண்ண ஆசையாயிருக்கிறோம். இந்தச் செபத்தை பக்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசை கட்டளை பண்ணியருளும் சுவாமி . ஆமென் .
பரிசுத்த ஆவி ஜெபம் :
தரித்தர்களுடையே பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும்.
உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்தின் சுகமே, வெயிலின் குளிர்ச்சியே, அழுகையின் தேற்றரவே எழுந்தருளி வாரும்.
வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கின்ற பிரகாசமே உமது விசுவாசிகளுடைய இதயங்களின் உற்பனங்களை நிரப்பும்.
உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை.
அசுத்தமாயிருக்கிரதைச் சுத்தம் பண்ணும்.
உலர்ந்ததை நனையும்.
நோவாயிருக்கிரதைக் குணமாக்கும்.
வணங்காதை வணங்கப் பண்ணும்.
குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும்.
தவறினதை செம்மையாய் நடத்தும்.
உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும்.
புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோசத்தையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
1. பாடுபட்ட சிலுவையில்: நம்பிக்கை அறிக்கை
(பிறந்தார் எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்)
இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் படுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித , கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்
2. பெரிய மணியில்: இயேசு கற்பித்த செபம்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப் போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். –ஆமென்.
3. மூன்று சிறிய மணியில்:
1. பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
#அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசீ பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீ பெற்றவரே
புனித மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
2. திருமகனாம் இறைவனுக்குத் தாயாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் நம்பிக்கை வளரும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
#அருள் நிறைந்த....
3. தூய ஆவியாராகிய இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவராய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் அன்பு வளரும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
#அருள் நிறைந்த....
4. மூன்று சிறிய மணிகளுக்குப் பின்: திருத்துவப் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாகஃ தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
5. ஒவ்வொரு மறை உண்மைகளைச் சொல்லி தியானிப்போம்:
ஒரு பரலோக மந்திரம், 10 அருள் நிறைந்த மந்திரம் மற்றும் ஒரு திரித்துவத் துதி சொல்வோம்.
6. ஒவ்வொரு பத்து மணிகள் முடிந்ததும்:
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும்.
எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும்.
உமது இரக்கம் யார் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களை மோட்சம் கொண்டு சேர்த்தருளும்.
இறுதி செபம்
அதிதூதரான தூய மிக்கேலே, வானதூதர்களான தூய கபிரியேலே, இரஃபேலே திருத்தூதர்களான தூய பேதுருவே, பவுலே, யோவானே, யாக்கோபே, நாங்கள் எத்தனை பாவிகளாய் இருந்தாலும், நாங்கள் மன்றாடிய இந்த ஐம்பத்து மூன்று மணி செபத்தையும் உங்கள் புகழ்ச்சியோடு ஒன்றாகச் சேர்த்துத் புனித அன்னை மரியாவின் திருப்பாதத்தில் காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம் – ஆமென்
மறை உண்மைகள்
மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்: (திங்கள், சனி)

1. கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக! (லூக்கா 1:30,38)
2. கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக. (லூக் 1:41-42)
3. இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக! (லூக் 2:6-7)
4. இயேசு கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக! (லூக் 2:22)
5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக! (லூக் 2:49-50)
துயர் மறை உண்மைகள்: ( செவ்வாய், வெள்ளி)
1.இயேசு இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக மனத்துயர் அடைய செபிப்போமாக! - (மத்தேயு 26:42)
2.இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டதைத் தியானித்து, புலன்களை அடக்கி வாழும் வரம் கேட்போமாக! - (மாற்கு 15:15 )
3.இயேசு முள்முடி தரித்ததைத் தியானித்து, நம்மையே ஒடுக்கவும், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்கவும் செபிப்போமாக! - (மத்தேயு 27:29-30)
4.இயேசு சிலுவை சுமந்து சென்றதைத் தியானித்து, வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழச் செபிப்போமாக! - (யோவான் 19:16-17)
5.இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததைத் தியானித்து, இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும் வரம் கேட்போமாக! - (யோவான் 19:30 )
மகிமை நிறை மறை உண்மைகள்: ( புதன், ஞாயிறு )
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசத்துடன் வாழ செபிப்போமாக! - (மத்தேயு 28:5-6)
2. இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக! - (லூக்கா 24:50-51)
3. தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக! - (திருப்பாடல் 2:4)
4. இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக! - (திருவெளிப்பாடு 12:1)
5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக! - (லூக்கா 1:49,52)
ஒளி நிறை மறை உண்மைகள்: (வியாழக் கிழமை)
1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றதை தியானிப்போமாக! - (மத்தேயு 3:16-17)
2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதை தியானிப்போமாக! - (யோவான் 2:11)
3. இயேசு விண்ணரசைப் பறைசாற்றியதை தியானிப்போமாக! - (மாற்கு 1:14-15)
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதை தியானிப்போமாக! - (மாற்கு 9:3,7)
5. இயேசு கடைசி இரா விருந்துண்டதையும் நற்கருணை ஏற்படுத்தியதையும் தியானிப்போமாக! - (மத்தேயு 26:26-28 )
புனித தேவமாதாவின் பிராத்தனை
சுவாமி கிருபையாயிரும் (2)
கிறிஸ்துவே கிருபையாயிரும் (2)
சுவாமி கிருபையாயிரும் (2)
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய ஆவியாராகிய சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தம திருத்துவமாகிய ஏக சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
புனித மரியே – எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சர்வேசுரனுடைய புனித மாதாவே …
கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே …
கிறிஸ்துவினுடைய மாதாவே…
தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே…
மகா பரிசுத்த மாதாவே…
அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே..
பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே…
கன்னி சுத்தங்கெடாத மாதாவே…
மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே…
ஆச்சரியத்துக்குரிய மாதாவே…
நல்ல ஆலோசனை மாதாவே,,,
சிருஷ்டிகருடைய மாதாவே…
இரட்சகருடைய மாதாவே…
மகா புத்தியுடைத்தான கன்னிகையே…
மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே…
பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே…
சக்தியுடையவளாயிருக்கிற கன்னிகையே…
தயையுள்ள கன்னிகையே…
விசுவாசியாயிருக்கிற கன்னிகையே….
தருமத்தின் கண்ணாடியே…
ஞானத்துக்கு இருப்பிடமே…
எங்கள் சந்தோஷத்தின் காரணமே…
ஞானப் பாத்திரமே…
மகிமைக்குரிய பாத்திரமே…
அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே…
மறை பொருளை கொண்ட ரோஜா மலரே
தாவீது இராஜாவுடைய உப்பரிகையே…
தந்த மயமாயிருக்கிற உப்பரிகையே…
சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே…
வாக்குத்தத்தத்தின் பெட்டகமே…
பரலோகத்தினுடைய வாசலே…
விடியற்க்காலத்தின் நட்சத்திரமே…
வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே…
பாவிகளுக்கு அடைக்கலமே…
கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவே…
கிறிஸ்தவர்களுடைய சகாயமே…
சம்மனசுக்களுடைய இராக்கினியே…
பிதா பிதாக்களுடைய இராக்கினியே…
இறைவாக்கினர்களுடைய இராக்கினியே…
அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே…
மறைசாட்சிகளுடைய இராக்கினியே…
துதியர்களுடைய இராக்கினியே…
கன்னியர்களுடைய இராக்கினியே…
அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே…
ஜென்ம பாவமின்றி உற்பவித்த இராக்கினியே…
பரலோகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே…
திருச் செபமாலையின் இராக்கினியே…
சமாதானத்தின் இராக்கினியே…
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே (3)
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி
எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்குப் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே! சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும்..
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி,
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக:
இறைவா! முழுமனதோடே தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்த குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னியான மரியாளுடைய வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். –ஆமென்
கிருபை தயாபத்து மந்திரம்:
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதனின்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே!
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி,
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக: சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரமும் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். – ஆமென்.
மிகவும் இரக்கமுள்ள தாயே!
மிகவும் இரக்கமுள்ள தாயே! தூய கன்னி மரியே! இதோ.. உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து சரணடைந்து உமது அருட்காவலை மன்றாடிய ஒருவரையும் நீர் கைவிட்டதாக உலகில் ஒருபோதும் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்தருளும் கன்னியருடைய அரசியான கன்னிகையே
தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் நான் தூண்டபெற்று அடியேன் உம் திருப்பாதம் அண்டி வருகிறேன். பாவியாகிய நான் உம் திருமுன் துயரத்தோடு உமது இரக்கத்திற்காக காத்து நிற்கிறேன். மனுவுருவான திருமகனின் தாயே! எம் மன்றாட்டைப் புறக்கணியாமல் எனக்காக தயாவாய் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயே பாவிகளுக்கு அடைக்கலமே இதோ உமது அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிரும் எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். (.3-முறை)
No comments:
Post a Comment