அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 25, 2018

கன்னி மரியாளின் பிறப்பு

நாள்: செப்டம்பர் 8


வகை: விழா

இறைவனின் தாயான கன்னி மரியாளின் பிறப்பைக் கொண்டாடும் இந்த விழா செப்டம்பர் 8ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது. எருசலேம் நகரில் வாழ்ந்த யோவாக்கிம் – அன்னா ஆகியோரின் மகளாக மரியாள் பிறந்தது தொடர்பான நிகழ்வுகளை இந்த விழா நினைவூட்டுகிறது.

பின்னணி
“இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்” (லூக்கா 1:68,72-73) என்ற செக்கரியாவின் வார்த்தைகள், மரியாளின் பிறப்புக்கான காரணத்தை விளக்குகின்றன. முதுமை வரை குழந்தைப் பேறில்லாமல் இருந்த யோவாக்கிம் – அன்னா ஆகியோரின் மன்றாட்டின் பலனாக, உலக மீட்பரின் தாய் அவர்களின் மகளாக பிறந்தார் என்பதை இந்த விழாவில் கொண்டாடுகிறோம்.
வரலாறு
கி.பி.150ல் எழுதப்பட்ட ‘யாக்கோபின் முதல் நற்செய்தி’ என்ற நூல், மரியாளின் பிறப்பு மற்றும் இளமைப்பருவம் பற்றியத் தகவல்களைத் தருகிறது. கன்னி மரியாள் செப்டம்பர் 8ந்தேதி பிறந்தார் என ஆங்கர்ஸ் ஆயரான புனித மவுரில்லியுஸ் 425ஆம் ஆண்டு அறிவித்தார். இதையடுத்து, கன்னி மரியாளின் பிறப்பை விழாவாக கொண்டாடும் வழக்கம் தோன்றியது. 6ஆம் நூற்றாண்டில் எருசலேம் புனித அன்னா ஆலயம் கட்டப்பட்ட வேளையில், இந்த விழா கீழைத் திருச்சபை முழுவதற்கும் விரிவடைந்தது. 7ஆம் நூற்றாண்டில், ரோம் உள்பட பைசாந்திய பேரரசின் மேற்கத்தியப் பகுதிகளுக்கும் இந்த விழா பரவியது.
எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேத்து ஆயரான புனித ஆண்ட்ரூ, தமது மறையுரைகளில் மரியாளின் பிறப்பு விழா பற்றி குறிப்பிடுகிறார். 799ஆம் ஆண்டு கூடிய சால்ஸ்பர்க் சங்கத்தின் 10வது விதியில், செப்டம்பர் 8ந்தேதி மரியாளின் பிறப்பு விழா இடம் பெற்றுள்ளது. 13ஆம் நூற்றாண்டு முதல், கன்னி மரியாளின் பிறப்பு எண்கிழமையுடன் இணைந்த பெரிய விழாவாக கொண்டாடப்பட்டது. 1969ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்ட திருவழிபாட்டு நாள்காட்டி, இதை விழாக்களின் வரிசையில் சேர்த்துள்ளது. வேளாங்கண்ணியில் மரியன்னையின் காட்சிகள் செப்டம்பர் 8ந்தேதி நிகழ்ந்ததன் காரணமாக, அங்கு இந்நாளில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment