அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, September 14, 2018

கோட்டாறு மறைமாவட்டம்

கோட்டாறு மறைமாவட்டம் (இலத்தீன்: Kottaren(sis)) என்பது கோட்டாறு புனித பிரான்சிஸ் சவேரியார் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் உட்பட்ட கத்தோலிக்க ஆட்சி பகுதியாகும். இது குளச்சல் மற்றும் கோட்டாறு ஆகிய மறைவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.மே 20, 1930ம் ஆண்டு கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து தமிழ் பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு கோட்டாறு மறைமாவட்டமாக அப்போதைய திருத்தந்தை பதினொன்றாம் பயசு அவர்களால் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் ஆயராக மேதகு ஆயர் லாரன்சு பெரைரா அவர்கள் பணிபுரிந்தார்கள். இதன் தற்போதைய ஆயர் மேதகு. நசரேன் சூசை ஆகும். இது உருவாகும் போது சுமார் 96,000 கத்தோலிக்க கிறித்தவர்கள் இம் மறைமாவட்டத்தில் வசித்து வந்தார்கள்.
கோட்டாறு மறைமாவட்டம்
Dioecesis Kottarensis
கோட்டாறு மறைமாவட்டம்

கதீட்ரல் : 
Image may contain: outdoorபுனித பிரான்சிஸ் சவேரியார் பேராலயம்
பாதுகாவலர்
புனித பிரான்சிஸ் சவேரியார்

Image may contain: 1 personஆயர்
மேதகு நசரேன் சூசை.

வரலாறு
*********
கொல்லம் மறைமாவட்டத்தின் தமிழ் வழங்கும் தென்பகுதி தனியாக பிரிக்கப்பட்டு வராப்புழை மறைமாநிலத்தின் கீழ் இணை மறைமாவட்டமாக கோட்டாறு மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது.தோவாளை, அகத்தீசுவரம்,(அழகப்பபுரம் தவிர), கல்குளம், விளவங்கோடு,(தூத்தூர் முதலிய 3 கடற்கரை கிராமங்கள் தவிர) ஆகிய நான்கு தாலுக்காக்களையும் உள்ளடக்கிய கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கோட்டாறு மறைமாவட்டத்தின் நிலப்பகுதியாக இருந்தது. இப்பகுதி 1956 நவம்பர் முதல் நாள் தமிழகத்தோடு இணைந்ததை தொடர்ந்து கோட்டறு மாவட்டம் 1963 ம் ஆண்டு அக்டோபர் 11ம் நாளிலிருந்து மதுரை மறைமாநிலத்தின் ஓர் இணை மறைமாவட்டமாக மாறிற்று.
குழித்துறை மறைமாவட்டம்
2014ஆம் ஆண்டு, திசம்பர் 22ஆம் நாள் கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து ஒரு புதிய மறைமாவட்டம் உருவாகியது. குழித்துறை மறைமாவட்டம் என்று அழைக்கப்படுகின்ற இந்த புதிய மறைமாவட்டத்தை திருத்தந்தை பிரான்சிசு உருவாக்கினார். கோட்டாறு மறைமாவட்டத்தின் திரித்துவபுரம் மற்றும் முளகுமூடு என்ற இரு பகுதிகளை உள்ளடக்கிய இந்தப் புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பேரருட்திரு ஜெரோம் தாஸ் வறுவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை மாநில சலேசிய சபையைச் சார்ந்தவர்.

மறைமாவட்ட ஆயர்கள்
*****************************
மேதகு லாரன்ஸ் பெரைரா(1930-1938)
மேதகு தாமஸ் ரோக் ஆஞ்ஞிசுவாமி(1939-1971)
மேதகு மரியானுஸ் ஆரோக்கிய சாமி(1971-1987)
மேதகு லியோன் தர்மராஜ்(05.02.1989-16.01.2007)
மேதகு பீட்டர் ரெமிஜியஸ்(24.06.2007- 20.05.2017)
மேதகு நசரேன் சூசை (20.05.2017 - )

பங்குகள் - 92
கிளைப்பங்குகள் - 38
6 மறைவட்டங்களை உள்ளடக்கிய கோட்டார் மறைமாவட்டம் அவை,

கோட்டாறு மறைவட்டம் - 22 பங்குகள் 05 கிளைப்பங்குகள்

கன்னியாகுமரி மறைவட்டம் - 12 பங்குகள் 06 கிளைப்பங்குகள்

தேவசகாயம் மவுண்ட் மறைவட்டம் - 19 பங்குகள் 18 கிளைப்பங்குகள்

குளச்சல் மறைவட்டம் - 12 பங்குகள் 04 கிளை பங்குகள்

முட்டம் மறைவட்டம் - 16 பங்குகள் 04 கிளைப்பங்குகள்


ஆலஞ்சி மறைவட்டம் - 11 பங்குகள் 01 கிளைப்பங்குகள்.

1 comment:

  1. கோட்டாறு மாவட்டம் உள்ள பங்குதந்தை பெயர் பட்டியல் கன்னியாகுமரி மாவட்டம்

    ReplyDelete