அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 26, 2017

புனித அந்தோணியாசும், அவரது நண்பரும்!!

புனித அந்தோணியாசும், அவரது நண்பரும்!!

பிளாரன்ஸ் நாட்டின் புகழ் பெற்ற பேராயர் புனித அந்தோனியாஸ் விவரிக்கின்றார் தாம் இருந்த தோமினிக்கான் மடத்திற்க்கு மிக நெருக்கமானவரும் பக்தியுள்ள கண்ணியருமான ஒரு நபர் இறந்த பொழுது அவரது ஆத்தும இரட்சிப்புகாக பல திருப்லிகளும் தவக்கிரியைகளும் ஒப்புக்கொடுக்கப்பட்டன

நீண்ட காலம் கடந்த பிறகு அந்த கண்ணியவானுடைய ஆன்மா கொடூர வாதையுடன் புனித அந்தோணியாஸ் அவர்கள் முன் தோன்றினார் புனிதர் அந்த நணபரிடம் கேட்டார் புனிதமான அர்பனிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வந்த நீங்கள் இன்னுமா உத்திரிக்கிற ஸ்தலத்தில்இருக்கிறீர்கள் என்று வேதனையுடன் கேட்டார்

அந்த கண்னியவான் ஆமாம் புனிதரே இன்னும் நீண்டகாலம் இருக்கவேண்டியுள்ளது நான் பூலோகத்தில் வாழ்ந்தபோது ஆன்மாக்களின் உத்திரிப்பு கடனுக்காக தவக்கிரியைகள் ஏதும் செய்யாததால் நீதியுள்ள தேவன் எனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து தவக்கிரியைகளின் பலன்களையும் நான் யாருடைய ஆத்துமங்களுக்கெல்லாம் ஜெபிக்க கடமை பட்டிருந்தேனோ அந்த ஆத்துமங்களின் உத்திரிப்புக் கடன்களுக்காக ஏற்று கொண்டுவிட்டார் இருப்பினும் கடவுள் தமது நீதியின் பொருட்டு நான் மோட்ச்சத்தில் நுழையும்போது எனது அனைத்து நற்கிரியைகளுக்கும் கைம்மாறு அளிப்பார் ஆனால் முதலில் நான் கவனமின்றி புறக்கனித்த ஆண்மாக்களுக்கு ஈடுசெய்யவேண்டியுள்ளது என்றார்

ஆமாம் எத்துணை உண்மையானவை நமது தேவனின் வார்த்தைகள் " நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும் "

இந்த தேவ வார்த்தைகளை படிப்பவர்கள் அனைவரும் அந்த பக்தியான நபருக்கு நேர்ந்ததுதான் உத்திரிக்கிற ஆண்மாக்களுக்காக ஜெபிக்க மற்றும் உதவி செய்ய மறுக்கிறவர்களுக்கு ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் --ஆமேன்

இயேசுவுக்கே புகழ் ! மாமரித்தாயே வாழ்க

No comments:

Post a Comment