*தனது பரிசுத்த செபமாலையின் மேல் பக்தி கொண்டிருந்த குழந்தைக்கு குழந்தை சேசுவை கொஞ்சும் வரம் அளித்த நமதாண்டவள்*
சகோதரிகளான சிறுமியர் இருவர் அவர்களது வீட்டின் முன்னால் இருந்து மிகவும் பக்தியுடன் செபித்துக் கொண்டிருந்தனர். திடீரென மிகவும் அழகான பெண்ணொருவர் அவர்களுக்குத் தோன்றி, ஆறு அல்லது ஏழு வயது நிரம்பிய இளைய சிறுமியை நோக்கி சென்று, அவளை தனது கரங்களில் ஏந்திக்கொண்டு மறைந்து போனார்கள்.
மூத்த சகோதரி மிகவும் அதிர்ச்சியுற்று, தனது சகோதரியை அனைத்து இடங்களிலும் தேடினாள். கடைசியாக அவளை கண்டு பிடிக்க முடியாமல், அழுதுகொண்டே வீட்டிற்க்குச் சென்று தனது பெற்றோரிடம், தங்கையை யாரோ கடத்தி விட்டார்கள் என்று சொன்னாள்.
மூன்று நாட்களாக அலைந்து திரிந்தும் தனது மகளைக் காணாமல் அந்த தாயும் தந்தையும் தவித்தனர். மூன்றாம் நாள் முடிவில், வீட்டின் வாசல் முன்பு அளவிட முடியா மகிழ்ச்சியுடனும், மன திருப்தியுடனும் இருந்த தனது மகளைக் கண்டார்கள்.
அவளிடம் இத்தனை நாளும் எங்கேயிருந்தாய் என்று அவர்கள் ஆச்சர்யத்துடன் வினவின போது, அச்சிறுமி பதிலுரையாக, தான் செபமாலை ஒப்புக்கொடுக்கும் அந்த தலைமகள் தன்னை மிக அற்புதமான ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்றதாகவும், அங்கு உண்பதற்கு இன்சுவை மிகுந்த உணவினை தனக்கு தந்ததாகவும் கூறினாள்.
மேலும் அவள், அந்த ஆண்டவள் தனது கரங்களில் ஏந்த மிகவும் அழகான ஒரு ஆண் குழந்தையைப் தந்ததாகவும், அக்குழந்தையை அவள் மீண்டும் மீண்டும் முத்தமிட்டதாகவும் கூறினாள். அந்த உடனே சமீபத்தில் மனமாற்றம் அடைந்து கத்தோலிக்க விசுவாசத்தில் ஊன்றிய அந்த தாயும் தந்தையும், தங்களுக்கு கத்தோலிக்க விசுவாசத்தைப் போதித்தவரும், பரிசுத்த செபமாலைப் பக்தியைக் கற்பித்தவருமான சேசுசபைக் குருவானவரிடம் சென்றார்கள்.
அந்த குருவானவரிடம் நடந்தது அனைத்தையும் விவரித்தார்கள். அக்குருவானவரே இந்த நிகழ்ச்சியை தனக்கு கூறியதாக என்று புனித லூயிஸ் தே மோன்ட்போர்ட் எழுதியுள்ளார்கள்.. இது நடந்தது பராகுவே நாட்டில்.
*சிந்தனை*
“கிறிஸ்துவினுடைய மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...”
“அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" (மத் 1:21). நமதாண்டவர் மெய்யான இறைவனும் மெய்யான மனிதனுமாய் இருக்கின்றார். ஞானம், அறிவு, தயை,தாழ்ச்சி, இரக்கம், சாந்தம், பிறர் சிநேகம் போன்ற கடவுளின் கொடைகளுக்கு ஊற்றும் ஊரணியுமாய் இருக்கின்றார்.
ஆதிப்பெற்றோரால் நமக்கு வந்தடைந்த பாவ வாழ்வை, சாவின் கொடுக்கினை தனது மாசற்ற திரு இரத்ததினால் வென்று தினமும் திருப்பலியின் வழியாக தனது கல்வாரிப்பலியை தந்தையாம் இறைவனுக்கு படைத்து இவ்வுலகிற்கு வாழ்வளித்து வருகின்றார்.
“வாழ்பவர் நாமே” என்று இஸ்ராயலேருக்கு அளித்த வாக்குறுதியினால், அவர்களை மட்டுமன்றி, இவ்வுலக மாந்தர் அனைவரின் மீட்பாக நமதன்னையின் திரு உதரத்தில், இஸ்பிரித்து சாந்துவினால் கருவாகி நம்மை சாத்தான் பிடியில் இருந்து விடுதலை அளித்தார். ஆனால் நமது பாவ வாழ்வின் வழியாக நாம் மீண்டும் மீண்டும் அவரை மறுதலிக்கின்றோம்.
அவரது அன்புக்கட்டளைகளை மீறி, அவரது சிநேகத்தினை இழந்து, அதனை உதறித் தள்ளிவிட்டு, சாத்தானின் பிடியில் சிக்கி சீரழிவதைக் காட்டிலும் நன்றி கெட்ட தனம் வேறு இருக்கமுடியுமா?? நம்மை விட அறிவீனர்கள் வேறு இருக்க முடியுமோ?
அவரை விட்டு விலகி வாழ்கின்றதைக் கூட உணராமல், நமது விருப்பப்படி நமது கத்தோலிக்க விசுவாசத்தையும் அவரது மானுட இரகசியத்தையும், அன்னை மாமரித்தாயின் அமல உற்பவத்தினையும் இவ்வுலக அறிவைக் கொண்டு கேள்வி கேட்பது தகுமோ?
நமது இரட்சணியத்திற்காக எல்லாம் வல்ல இறைவனால் பாதுகாக்கப்பட்ட, அர்பணிக்கப்பட்ட, அமல உற்பவியான, சிருஷ்டிகளில் மேன்மை மிகுந்த நமதாண்டவளை அவளது செபமாலையின் வாயிலாக வேண்டி, அவளது பரிந்துரையை நாடும் போது எண்ணிலடங்கா அருள் வரங்களை தமத்திருத்துவத்திடமிருந்து பெற்றுத் தருகின்றார்கள். அவளை நோக்கி அவளின் பரிந்துரைய வேண்ட நாம் தயாரா?
சேசுவுக்கே புகழ்!!!மாமரித்தாயே வாழ்க!!!
சகோதரிகளான சிறுமியர் இருவர் அவர்களது வீட்டின் முன்னால் இருந்து மிகவும் பக்தியுடன் செபித்துக் கொண்டிருந்தனர். திடீரென மிகவும் அழகான பெண்ணொருவர் அவர்களுக்குத் தோன்றி, ஆறு அல்லது ஏழு வயது நிரம்பிய இளைய சிறுமியை நோக்கி சென்று, அவளை தனது கரங்களில் ஏந்திக்கொண்டு மறைந்து போனார்கள்.
மூத்த சகோதரி மிகவும் அதிர்ச்சியுற்று, தனது சகோதரியை அனைத்து இடங்களிலும் தேடினாள். கடைசியாக அவளை கண்டு பிடிக்க முடியாமல், அழுதுகொண்டே வீட்டிற்க்குச் சென்று தனது பெற்றோரிடம், தங்கையை யாரோ கடத்தி விட்டார்கள் என்று சொன்னாள்.
மூன்று நாட்களாக அலைந்து திரிந்தும் தனது மகளைக் காணாமல் அந்த தாயும் தந்தையும் தவித்தனர். மூன்றாம் நாள் முடிவில், வீட்டின் வாசல் முன்பு அளவிட முடியா மகிழ்ச்சியுடனும், மன திருப்தியுடனும் இருந்த தனது மகளைக் கண்டார்கள்.
அவளிடம் இத்தனை நாளும் எங்கேயிருந்தாய் என்று அவர்கள் ஆச்சர்யத்துடன் வினவின போது, அச்சிறுமி பதிலுரையாக, தான் செபமாலை ஒப்புக்கொடுக்கும் அந்த தலைமகள் தன்னை மிக அற்புதமான ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்றதாகவும், அங்கு உண்பதற்கு இன்சுவை மிகுந்த உணவினை தனக்கு தந்ததாகவும் கூறினாள்.
மேலும் அவள், அந்த ஆண்டவள் தனது கரங்களில் ஏந்த மிகவும் அழகான ஒரு ஆண் குழந்தையைப் தந்ததாகவும், அக்குழந்தையை அவள் மீண்டும் மீண்டும் முத்தமிட்டதாகவும் கூறினாள். அந்த உடனே சமீபத்தில் மனமாற்றம் அடைந்து கத்தோலிக்க விசுவாசத்தில் ஊன்றிய அந்த தாயும் தந்தையும், தங்களுக்கு கத்தோலிக்க விசுவாசத்தைப் போதித்தவரும், பரிசுத்த செபமாலைப் பக்தியைக் கற்பித்தவருமான சேசுசபைக் குருவானவரிடம் சென்றார்கள்.
அந்த குருவானவரிடம் நடந்தது அனைத்தையும் விவரித்தார்கள். அக்குருவானவரே இந்த நிகழ்ச்சியை தனக்கு கூறியதாக என்று புனித லூயிஸ் தே மோன்ட்போர்ட் எழுதியுள்ளார்கள்.. இது நடந்தது பராகுவே நாட்டில்.
*சிந்தனை*
“கிறிஸ்துவினுடைய மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...”
“அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" (மத் 1:21). நமதாண்டவர் மெய்யான இறைவனும் மெய்யான மனிதனுமாய் இருக்கின்றார். ஞானம், அறிவு, தயை,தாழ்ச்சி, இரக்கம், சாந்தம், பிறர் சிநேகம் போன்ற கடவுளின் கொடைகளுக்கு ஊற்றும் ஊரணியுமாய் இருக்கின்றார்.
ஆதிப்பெற்றோரால் நமக்கு வந்தடைந்த பாவ வாழ்வை, சாவின் கொடுக்கினை தனது மாசற்ற திரு இரத்ததினால் வென்று தினமும் திருப்பலியின் வழியாக தனது கல்வாரிப்பலியை தந்தையாம் இறைவனுக்கு படைத்து இவ்வுலகிற்கு வாழ்வளித்து வருகின்றார்.
“வாழ்பவர் நாமே” என்று இஸ்ராயலேருக்கு அளித்த வாக்குறுதியினால், அவர்களை மட்டுமன்றி, இவ்வுலக மாந்தர் அனைவரின் மீட்பாக நமதன்னையின் திரு உதரத்தில், இஸ்பிரித்து சாந்துவினால் கருவாகி நம்மை சாத்தான் பிடியில் இருந்து விடுதலை அளித்தார். ஆனால் நமது பாவ வாழ்வின் வழியாக நாம் மீண்டும் மீண்டும் அவரை மறுதலிக்கின்றோம்.
அவரது அன்புக்கட்டளைகளை மீறி, அவரது சிநேகத்தினை இழந்து, அதனை உதறித் தள்ளிவிட்டு, சாத்தானின் பிடியில் சிக்கி சீரழிவதைக் காட்டிலும் நன்றி கெட்ட தனம் வேறு இருக்கமுடியுமா?? நம்மை விட அறிவீனர்கள் வேறு இருக்க முடியுமோ?
அவரை விட்டு விலகி வாழ்கின்றதைக் கூட உணராமல், நமது விருப்பப்படி நமது கத்தோலிக்க விசுவாசத்தையும் அவரது மானுட இரகசியத்தையும், அன்னை மாமரித்தாயின் அமல உற்பவத்தினையும் இவ்வுலக அறிவைக் கொண்டு கேள்வி கேட்பது தகுமோ?
நமது இரட்சணியத்திற்காக எல்லாம் வல்ல இறைவனால் பாதுகாக்கப்பட்ட, அர்பணிக்கப்பட்ட, அமல உற்பவியான, சிருஷ்டிகளில் மேன்மை மிகுந்த நமதாண்டவளை அவளது செபமாலையின் வாயிலாக வேண்டி, அவளது பரிந்துரையை நாடும் போது எண்ணிலடங்கா அருள் வரங்களை தமத்திருத்துவத்திடமிருந்து பெற்றுத் தருகின்றார்கள். அவளை நோக்கி அவளின் பரிந்துரைய வேண்ட நாம் தயாரா?
சேசுவுக்கே புகழ்!!!மாமரித்தாயே வாழ்க!!!
No comments:
Post a Comment