அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, August 25, 2017

*புனித சாமிநாதர் ஆல்பிஜென்சிய தப்பறைகளை வேரறுக்க நமது மாமரி தாயிடம் இருந்து செபமாலையை பெற்ற வரலாறு*

*புனித சாமிநாதர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் ஆல்பிஜென்சிய தப்பறைகளை வேரறுக்க நமது  மாமரி  தாயிடம் இருந்து செபமாலையை பெற்ற வரலாறு*

ஆல்பிஜென்சியர்கள் மனந்திரும்புவதற்கு தடைக்கற்களாக இருந்தது மக்களிடம் பெருகியிருந்த பாவங்களே என்பதை உணர்ந்த புனித சாமிநாதர், டூலோஸ் நகரின் அருகிலிருந்த காட்டிற்குள் சென்று மூன்று நாட்கள் பகலும் மூன்று இரவும் பாராது இடையறாது மன்றாடினார்.

கடவுளுடைய கோபத்தைத் தணிப்பதற்காக அழுதுகொண்டே மன்றாடிய  அச்சமயத்தில் கடும் தவ முயற்சிகளை மேற்கொண்டதைக் தவிர வேறு ஏதும் செய்யவில்லை. எந்த அளவுக்கு தன்னைத்தானே வருத்திக்கொண்டாரெனில், சாட்டையால் தன்னைத் தானே அடித்துக்கொண்டு உடலை முழுவதும் ரணமாக்கி, கடைசியாக மயக்கமுற்று கீழே விழுந்தார்.

இந்த சமயத்தில், நமதாண்டவள் மூன்று வானதூதர்கள் புடைசூழ அவருக்குத் தோன்றி, “அன்பு மகனே சாமிநாதா, உலகத்தை சுத்திகரிக்க பரிசுத்த தமத்திருத்துவம் எந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டுமென்று விரும்புகிறார்கள் என்பதனை அறிவாயா?” என்று வினவினார்கள். அதற்கு சாமிநாதர்,” ஒ! எனதாண்டவளே, என்னை விட அதனை தங்கள் தானே நன்கு அறிவீர்கள், ஏனெனில், உமது திரு வயிற்றின் கனியாகிய சேசு கிறிஸ்துவுக்கு அடுத்தபடியாக நீங்கள் தானே எங்களது இரட்சணியத்தின் பிரதான கருவியாக இருக்கின்றீர்கள்” என்று பதிலுரைத்தார்.

பின்னர் நமதாண்டவள்,“இந்த வகையான போராட்டத்தில், எப்பொழுதும் வெற்றியை பெற்றுத்தரக் கூடிய பிரதான ஆயுதம், புதிய ஏற்பாட்டின் அடித்தளக்கல்லாகிய, தேவதூதனின் மங்கள வாழ்த்துரையே என்பதனை நீ உணர்ந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். எனவே நீ மிகவும் கடினப்பட்ட இந்த ஆன்மாக்களை, வெற்றி கொண்டு  இறைவனிடம் கொண்டு சேர்க்க எனது செபமாலையை பிரசங்கம் செய்” என்று மறுமொழி பகர்ந்தார்கள்.

தேவதாயின் இந்த அறிவுரையின் வாயிலாக, புனித சாமிநாதர், ஆறுதல் அடைந்தவராக, புது ஆற்றல் பெற்றவராக எழுந்தார். அந்த பிரதேசத்திலுள்ள மக்களை மனம் திருப்பும் பேரார்வத்தால் பற்றி எரிந்தவராய், அந்நகரத்தில் இருந்த பேராலயத்தினுள் நுழைந்தார். அக்கணமே கண்ணால் காணமுடியாத வான தூதர்கள், மக்களை வரவழைக்க கோவில் மணியினை அடித்தனர். புனித சாமிநாதர் தனது பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

அவர் தனது பிரசங்கத்தை ஆரம்பித்த உடனே, மிகவும் பயங்கரமான சூறாவளி ஓன்று உருவாகியது, பூமி அதிர்ந்தது, சூரியன் இருண்டது, தொடர்ச்சியாக இடியும் மின்னலும் காணப்பட்டன. கூடியிருந்த மக்களனைவரும் பேரச்சம் கொண்டனர். அவர்களின் இந்த திகிலை இன்னமும் அதிகரிக்கும் படியாக, பேராலயத்தின் பீடத்தில் இருந்த நமதாண்டவளின் திருவுருவப் படமானது, விண்ணகத்தை நோக்கி, மூன்று முறை தனது கரங்களை உயர்த்தி, அந்த மக்கள் மனம் திரும்பி தங்களது வாழ்க்கை முறைகளை சீர்திருத்தி, பரிசுத்த தேவமாதாவின் பாதுகாவலை நாடாவிடில், எல்லாம் வல்ல இறைவனின் தண்டனைத் தீர்ப்பினை அவர்களுக்கு அளிக்கும் படியாக வேண்டுவதைக் கண்டார்கள்.  

எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவன், இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக, புதிய பக்தி முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பரிசுத்த செபமாலையை அனைவருக்கும் அறிவிக்க திருவுளம் கொண்டார். கடைசியாக புனித சாமிநாதர் செபித்துக் கொண்டதனால், சூறாவளி முடிவுக்கு வந்தது. அவர் பிரசங்கிக்க ஆரம்பித்தார்.

பரிசுத்த செபமாலையின் முக்கியத்துவம் மற்றும் மகிமைகளைக் குறித்து அவர் மிகவும் உறுதியாகவும் தெளிவாகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் எடுத்துரைத்தததைக் கண்ட டூலோஸ் நகர மக்களைனவரும் செபமாலையை ஆர்வத்துடன் தழுவிக்கொண்டு தங்களது தவறான நம்பிக்கைகளை (தப்பறைகளை) கைவிட்டுவிட்டு மனம் திரும்பினர். மிகக் குறுகிய காலத்திலேயே, நகரில் அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் காணப்பட்டன. மக்கள் தங்களது தீய பழக்கவழக்கங்களை விட்டெறிந்து தூய கிறிஸ்துவ வாழ்வு வாழ ஆரம்பித்தனர்.

நன்றி: புனித லூயிஸ் தே மோன்ட்போர்ட் எழுதிய ஜெபமாலையின் ரகசியம் என்ற நூலில் இருந்து ரோஜா மலர் 2.

*சிந்தனை*

“திருச்செபமாலையின் இராக்கினியே!! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..”

திருச்சபையின் பாதுகாவலி, நமதாண்டவள் பரிசுத்த தேவமாதா, தனது பரிசுத்த செபமாலையின் வாயிலாக திருச்சபைக்கு எதிரான தப்பறைகளை வேரறுத்து தாய் திருச்சபையை கண்ணின் மணிபோல பாதுகாத்து வருகின்றார்கள். எப்போதெல்லாம் தாய் திருச்சபையின் மேல் அவதூறுகள் பரப்ப படுகின்றனவோ  அப்போதெல்லாம் பரிசுத்த தமத்திருத்துவத்திடம் மன்றாடி திருச்சபையை காப்பாற்றி வருகின்றார்கள்.

திருச்செபமாலை நாம் அன்னையின் பிள்ளைகள் என்பதன் அடையாளம் என்று புனித சாமிநாதர் கூறுகின்றார். திருச்செபமாலையின் வாயிலாக நாம் எண்ணற்ற அருள் வரங்களை நமதன்னையின் பரிந்துரையால் பெற்றுக்கொள்கிறோம். பரிசுத்த தமத்திருத்துவம் தனக்கு அடுத்தபடியாக மாசற்ற கன்னியாம் பரிசுத்த மாமரியை தந்துள்ளார்கள்.
கன்னி மாமரியின் வாயிலாக நாம் கேட்கும் அனைத்தையும் நமக்கு அள்ளித்தருகின்றார்கள்.

அன்னையின் ஒரு பெருமூச்சு சகல புனிதர்களுடைய பரிந்துரையை விட மேலானது என்று ஒரு புனிதர் கூறுகின்றார். செபமாலை செபிப்பதன் மூலம் நமதன்னையின் நிறை கற்பு, தாழ்ச்சி, கீழ்ப்படிதல், பொறுமை, அடிமைத்தனம் ஆகிய பண்புகளை நாம் சிறிது சிறிதாக பெற்றுக்கொள்வதுடன், பாவ வாழ்வை விட்டொழித்து ஆன்ம ஈடேற்றம் பெறுவதற்கு நமதன்னை பரிந்துரை செய்கின்றார்கள்.

“செபமாலை வழியாக நீங்கள் கேட்பதையெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள் என்றும் செபமாலை பக்தியை பரப்பும் அன்பர்களுக்கு, அவர்களின் அனைத்து தேவைகளிலும் நான் உதவி புரிவேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று முத். ஆலன் ரோச் அவர்களுக்கு நமதன்னை வாக்குறுதி அளித்துள்ளார்கள். அவர்களது வாக்கு என்றும் பொய்த்ததில்லை.

பக்தியோடு தியானித்து அன்னையின் செபமாலையை நாம் செபிக்கும் போது நமக்கு வேண்டிய அருள் வரங்களை அன்னையின் பரிந்துரையால் பெற்றுக்கொள்வோம்.

“மிகவும் இரக்கமுள்ள தாயே, உமது அடைக்கலமாக ஓடி வந்து, உம்முடைய உபகார சகாயங்களை இரந்து, உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக உலகில் ஒருபோதும் சொல்லக் கேள்விப்பட்டதில்லை....”

இயேசுவுக்கே புகழ்!!!மாமரித்தாயே வாழ்க!!!⁠⁠⁠⁠

No comments:

Post a Comment