இனிய கட்டளை இரண்டு.....
அன்றொரு நாள் அண்ணல் இயேசு சதுசேயரை வாயடைத்ததாலே பரிசேயர் வெகுண்டெழுந்து குறை தேடி வந்தனரே
எல்லாம் தெரிந்த கர்வத்தில் அறிஞர் அணுகி திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது என வினவினாரே
அவரின் கேள்விக்கு பதிலாக உன் முழு இதயத்தோடும்,முழு உள்ளத்தோடும்,முழு மனதோடும் உன் கடவுளுக்கு அன்பு செலுத்தவே சொன்னாரே
இதுவே தலையான கட்டளை என்றே ஆணித்தரமாக உரைத்தாரே
உன் மீது கொண்டுள்ள அன்பைப் போன்றே அடுத்தவர்மீதும் அன்பாய் இருக்கவே பணித்தாரே
இவ்வாறு
கட்டளைகளை அழகுற வகைப்படுத்தினாரே
திருச்சட்ட நூலோ, இறைவாக்கு நூலோ இவையே அடித்தளம் என்றே பொன்மொழியாய் பதிலளித்தாரே.
வாரீர் நாமும் இனிவரும் நாளெல்லாம் இரு கட்டளைகளை நம் மனங்களில் பதித்திடுவோமே !
கடவுளை அன்பு செய்யும் வேளை அயலாரிடமும் கனிவை பகர்ந்திடுவோமே !
இரு கட்டளைகளால் நம்மை பிணைத்திடுவோமே !
மத்தேயு 22: 34-49
அன்புடன்,
கஸ்மீர் ரோச்
அன்றொரு நாள் அண்ணல் இயேசு சதுசேயரை வாயடைத்ததாலே பரிசேயர் வெகுண்டெழுந்து குறை தேடி வந்தனரே
எல்லாம் தெரிந்த கர்வத்தில் அறிஞர் அணுகி திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது என வினவினாரே
அவரின் கேள்விக்கு பதிலாக உன் முழு இதயத்தோடும்,முழு உள்ளத்தோடும்,முழு மனதோடும் உன் கடவுளுக்கு அன்பு செலுத்தவே சொன்னாரே
இதுவே தலையான கட்டளை என்றே ஆணித்தரமாக உரைத்தாரே
உன் மீது கொண்டுள்ள அன்பைப் போன்றே அடுத்தவர்மீதும் அன்பாய் இருக்கவே பணித்தாரே
இவ்வாறு
கட்டளைகளை அழகுற வகைப்படுத்தினாரே
திருச்சட்ட நூலோ, இறைவாக்கு நூலோ இவையே அடித்தளம் என்றே பொன்மொழியாய் பதிலளித்தாரே.
வாரீர் நாமும் இனிவரும் நாளெல்லாம் இரு கட்டளைகளை நம் மனங்களில் பதித்திடுவோமே !
கடவுளை அன்பு செய்யும் வேளை அயலாரிடமும் கனிவை பகர்ந்திடுவோமே !
இரு கட்டளைகளால் நம்மை பிணைத்திடுவோமே !
மத்தேயு 22: 34-49
அன்புடன்,
கஸ்மீர் ரோச்
No comments:
Post a Comment