நற்கருணை வணக்க மணிமாலை
திருச்சிலுவை, ஐந்து மணிகள், நற்கருணைப் பதக்கம் கொண்ட இந்த மணிமாலை நற்கருணை வணக்கம் குறித்து சொல்லத்தகுந்தது. ஐந்து மணிகளை முழுதும் ஒரு முறை இயேசுவின் காயங்களைக் குறித்து ஏறுமுகமாக செபித்தும் மீண்டும் ஒரு முறை அன்னைமரியின் வியாகுலங்களைக் குறித்து இறங்குமுகமாக செபித்தும் சொல்லவேண்டும் .
கீழ்காணும் செபத்தை மணிமாலையைத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் மூன்று முறை சொல்ல வேண்டும்.
மரியாளின் மாசற்ற இருதயத்தைக் குறித்து செபம் / பெர்னதெத்தம்மாளின் செபம்:
மிகவும் இரக்கமுள்ள தாயே! இதோ உமது அடைக்கலமாக ஓடிவந்தோம். உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கவில்லை என்பதை நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியாக கன்னிகையே!
தயவுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டிவருகின்றோம்.
பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கின்ற நாங்கள் உமது தயாளத்துக்கு காத்துக்கொண்டு உமது சமூகத்திலே நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே!
எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத்தந்தருளும் தாயே! ஆமென்.
இயேசுவின் திரு இருதயத்தைக் குறித்து செபம்:
சகல நன்மைகளின் ஊற்றாகியே இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! நான் உம்மை நேசிக்கிறேன்; உம்மை ஆராதிக்கிறேன். என் பாவங்களுக்காக மனம் வருந்தி, மாசு படிந்த என் இருதயத்தை உம்மிடம் ஒப்படைக்கிறேன். தேவரீர் உமது சித்தத்துக்கு எப்பொழுதும் கீழ்ப்படியும் பொறுமையும் பரிசுத்தமும் தாழ்ச்சியும் கொண்ட இருதயமாக மாற்றும். ஓ நல்ல ஏசுவே! உம்மில், உமக்காக மட்டுமே நான் வாழச் செய்தருளும். என் ஆபத்துக் காலத்தில் அடைக்கலமாகவும், துன்ப நேரத்தில் ஆறுதலாகவும், நோயில் மருந்தாகவும், தேவையில் தீர்வாகவும், வேலைகளில் ஆசீர்வாதமாகவும் இருந்து நன் மரணத்தை எனக்குக் கட்டளையிடும். ஆமென்.
திருச் சிலுவையில் :
"நாங்கள் உம்மைப் புகழ்கிறோம் ஆண்டவரே" பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் இருப்பதாக! ஆமென்.
முதல் மணியில் : "பாவிகளின் மீட்புக்காக" அருள் நிறைந்த மரியே ......
இரண்டாம் மணியில் : "உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களின் மீட்புக்காக" அருள் நிறைந்த மரியே ......
மூன்றாம் மணியில் : "குடும்பங்களின் பாதுகாப்பிற்காக" அருள் நிறைந்த மரியே .....
நான்காம் மணியில் : "இறையழைத்தல் பெருக" கிருபை தயாபரத்து செபம்.....
ஐந்தாம் மணியில் : "குருக்கள் ,கன்னியர்களுக்காக" மிக்கேல் சம்மனசானவரை நோக்கி செபம்......
நற்கருணையின் அவசங்கைக்குப் பரிகாரமாகவும் ஐந்து திருக்காயங்களைக் குறித்தும் பதக்கத்தில் ஐந்து முறை சொல்ல வேண்டியது:
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு சதாகாலமும் ஆராதனையும் ஸ்துதியும் ஸ்தோத்திர நமஸ்காரமும் உண்டாகக் கடவது. ஆமென்.
தொடர்ந்து, மரியன்னையின் வியாகுலங்களுக்குப் பரிகாரமாக, இந்த மணிமாலையை ஒப்புக் கொடுக்கும் விதம்:
கீழ்காணும் இரு செபங்களை ஐந்து முறை சொல்லவும்
மரியாளின் மாசற்ற இருதயத்தைக் குறித்து செபம்
மிகவும் இரக்கமுள்ள தாயே! இதோ உமது அடைக்கலமாக ஓடிவந்தோம். உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கவில்லை என்பதை நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியாக கன்னிகையே! தயவுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடையதிருப்பாதத்தை அண்டிவருகின்றோம்.
பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கின்ற நாங்கள் உமது தயாளத்துக்கு காத்துக்கொண்டு உமது சமூகத்திலே நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே!
எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத்தந்தருளும் தாயே! ஆமென்.
இயேசுவின் திரு இருதயத்தைக் குறித்து செபம்
சகல நன்மைகளின் ஊற்றாகியே இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! நான் உம்மை நேசிக்கிறேன்; உம்மை ஆராதிக்கிறேன். என் பாவங்களுக்காக மனம் வருந்தி, மாசு படிந்த என் இருதயத்தை உம்மிடம் ஒப்படைக்கிறேன். தேவரீர் உமது சித்தத்துக்கு எப்பொழுதும் கீழ்ப்படியும் பொறுமையும் பரிசுத்தமும் தாழ்ச்சியும் கொண்ட இருதயமாக மாற்றும். ஓ நல்ல ஏசுவே! உம்மில், உமக்காக மட்டுமே நான் வாழச் செய்தருளும். என் ஆபத்துக் காலத்தில் அடைக்கலமாகவும், துன்ப நேரத்தில் ஆறுதலாகவும், நோயில் மருந்தாகவும், தேவையில் தீர்வாகவும், வேலைகளில் ஆசீர்வாதமாகவும் இருந்து நன் மரணத்தை எனக்குக் கட்டளையிடும். ஆமென்.
மரியன்னையின் வியாகுலங்களுக்குப் பரிகாரமாகவும், நற்கருணை ஆராதனைக்காகவும் கீழ்காணும் செபத்தை ஐந்து முறை சொல்லவும்.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு சதாகாலமும் ஆராதனையும் ஸ்துதியும் ஸ்தோத்திர நமஸ்காரமும் உண்டாகக் கடவது:
ஐந்து முறை சொன்ன பின் கீழ்காணும் செபத்தைச் சொல்லவும்
"ஓ என் ஏசுவே! பரிசுத்த ஆவியின் வரங்களை எம் மேல் பொழிந்தருளும். உம்மிடம் நாங்கள் ஒப்படைக்கும் ஆத்துமங்களை ஆசீர்வதித்து ஒளிர்விக்கச் செய்யும்"
ஐந்தாம் மணியில் : "குருக்கள் , கன்னியர்களுக்காக" நித்திய ஸ்துதிக்குரிய ..
நான்காம் மணியில் : "இறையழைத்தல் பெருக" நித்திய ஸ்துதிக்குரிய ..
மூன்றாம் மணியில் : "குடும்பங்களின் பாதுகாப்பிற்காக" நித்திய ஸ்துதிக்குரிய ..
இரண்டாம் மணியில் : "உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காக"
நித்திய ஸ்துதிக்குரிய ..
முதல் மணியில் : "பாவிகள் இரட்சிக்கப்பட"
நித்திய ஸ்துதிக்குரிய ..
திருச்சிலுவையில்: "நற்கருணை அருட்சாதன மகிமைக்காக" நித்திய ஸ்துதிக்குரிய ..
No comments:
Post a Comment