அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 21, 2017

சுயநலம் இல்லாத வாழ்வு

சுயநலம் இல்லாத வாழ்வு

நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறுகளை கடவுள் மன்னிக்க வேண்டும் என்று எண்ணுகிற நாம், மற்றவர் நமக்கெதிராகச் செய்யக்கூடிய சிறிய குற்றங்களைக்கூட மன்னிக்க மறுத்துவிடுகிறோம். இது நம்மிடம் உள்ள சுயநலத்தைக்காட்டுவதாக இருக்கிறது என்பதையே, இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு விளக்கிக்கூறுகிறது. அந்த சுயநலத்தை உடைக்கிறபோதுதான், அங்கே மன்னிப்பு பிறக்கிறது என்பதும் நமக்குத்தெரிய வருகிறது.

இன்றைய உவமையிலே, இரண்டு மனிதர்கள் வெவ்வேறு இரண்டு மனிதர்களிடம் கடன் வாங்கியிருக்கிறார்கள். முதலாவது மனிதன் அதிகமாகக் கடன் வாங்கியிருக்கிறவன். முதலாவது மனிதன் இரண்டாவது மனிதனுக்கு கொஞ்சம் கடன் கொடுத்திருக்கிறான். இரண்டு பேருமே தாங்கள் கடன் பெற்றவர்களிடம் இரக்கம் கேட்கிறார்கள். முதல் மனிதன் பெற்றுக்கொள்கிறான். ஆனால், பெற்றுக்கொண்ட மன்னிப்பை, தன்னிடம் கடன்பட்டவனுக்குக் கொடுக்க மறுக்கிறான். இங்கே, நாம் காண்பது சுயநலம். அந்த சுயநலத்திற்கான பரிசையும் அவன் பெற்றுக்கொள்கிறான்.

கடவுள் நம் அனைவருக்கும் மன்னிப்பு தருகிறார். ஆனால், கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக்கொண்ட நாம், அந்த மன்னிப்பை மற்றவர்களுக்கு வழங்கவில்லை என்றால், அதற்கான தண்டணை நிச்சயம் நமக்குக் கிடைக்கும். எனவே, சுயநலம் இல்லாது வாழ, கடவுளின் அருள் வேண்டுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment