* நமதாண்டவளின் செபமாலை வாயிலாக தாய்மைப்பேறடைந்து, புனிதரை மகனாகப் பெற்ற பிரான்ஸ் தேசத்து இராணி*
புனிதத்தன்மை பொருந்திய காஸ்டில்லேவின் ப்ளஞ்சே, பிரான்சின் ராணி, தனது திருமணமாகி பன்னிரண்டு ஆண்டு காலமாகியும் குழந்தையில்லாமல் இருந்ததால் மிகவும் மனம் நொந்து வருந்திக்கொண்டிருந்தார்.
புனித சாமிநாதர் ராணியைக் காண சென்றபோது, தாய்மைப்பேற்றிர்க்காக இறைவனின் இரக்கத்தை வேண்டி தினமும் செபமாலை செபிக்கும்படி அவரிடம் அறிவுறுத்தினார். புனிதரின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு இராணி அதனை உண்மையுடன் கடைப்பிடித்து வந்தார்.
1213 ஆம் ஆண்டில் இராணி, பிலிப் என்ற பெயருடைய தனது தலைமகனை பெற்றெடுத்தார். ஆனால் அந்த குழந்தை மழலைப் பருவத்திலேயே இறந்துபோனதால், இராணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமதாண்டவளின் உதவியை நாடினார். மேலும் அரசவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும், அரசாட்சிக்குட்பட்ட பல நகரங்களைச் சேர்ந்த மக்களுக்கும் செபமாலை கொடுத்து, நிறைவான தாய்மைப்பேற்றினை தனக்கு தந்து ஆசிர்வதிக்க வேண்டுமென் இறைவனிடம் மன்றாடுமாறு கூறினார்கள்.
1215 ஆம் ஆண்டு இந்த பேறு அவருக்கு அருளப்பட்டது, பிரான்ஸ் தேசத்தின் மகிமையாகவும், கிருஸ்துவ அரசர்க்கெல்லாம் முன்மாதிரியாகவும் விளங்கப்போகும் இளவரசர் புனித லூயிஸ் பிறந்தார்.
*சிந்தனை*
“மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே!!!! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்”
நமதாண்டவளின் அன்னைக்குரிய குணநலன்களில் தாயன்பு மிகவும் வல்லமை வாய்ந்தது. அந்த தாயன்பே, கானாவூர் திருமணத்தில் யாரும் கேட்காமலே உதவி செய்யவும், எலிசபெத்தம்மாளுக்கு உதவவும் விரைந்தது.
நாமும் நமது வாழ்வில் அனைத்து கதவுகளும் அடைபட்டு, திக்கு தெரியாமல் தள்ளாடும் வேளையில் தனது தாயன்பினால் நமக்காக இரிவனிடம் பரிந்து பேசி நமக்கு வேண்டிய வரங்களை பெற்றுத்தரும் மத்தியஸ்தி நமதன்னை.
நாம் எவ்வளவு அன்பு செய்கின்றோமோ அதை விட அதிகமாக நமதாண்டவள் நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கின்றார். உலக மாந்தரின் மீட்பரை உலகிற்கு பெற்றுத்தந்த நமதன்னை, மீட்பின் வழியில் அவரோடு தோள் கொடுத்து நின்று எந்த தாயாலும் தாங்க முடியாத வியாகுலங்களை நமக்காக ஏற்றுக்கொண்டார். அனைத்தும் நம்மேல் கொண்ட அன்பினால் மட்டுமே!!! அந்த அன்னைக்கு நாம் தருவது என்ன?? நம்மையே நாம் அவளிடம் ஒப்படைத்து அவள் வழியாக இறைவனின் பதம் சென்றடைந்தால் எத்துணை நலம்!!!
இயசுவுக்கே புகழ்!!!மாமரித்தாயே வாழ்க!!!
புனிதத்தன்மை பொருந்திய காஸ்டில்லேவின் ப்ளஞ்சே, பிரான்சின் ராணி, தனது திருமணமாகி பன்னிரண்டு ஆண்டு காலமாகியும் குழந்தையில்லாமல் இருந்ததால் மிகவும் மனம் நொந்து வருந்திக்கொண்டிருந்தார்.
புனித சாமிநாதர் ராணியைக் காண சென்றபோது, தாய்மைப்பேற்றிர்க்காக இறைவனின் இரக்கத்தை வேண்டி தினமும் செபமாலை செபிக்கும்படி அவரிடம் அறிவுறுத்தினார். புனிதரின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு இராணி அதனை உண்மையுடன் கடைப்பிடித்து வந்தார்.
1213 ஆம் ஆண்டில் இராணி, பிலிப் என்ற பெயருடைய தனது தலைமகனை பெற்றெடுத்தார். ஆனால் அந்த குழந்தை மழலைப் பருவத்திலேயே இறந்துபோனதால், இராணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமதாண்டவளின் உதவியை நாடினார். மேலும் அரசவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும், அரசாட்சிக்குட்பட்ட பல நகரங்களைச் சேர்ந்த மக்களுக்கும் செபமாலை கொடுத்து, நிறைவான தாய்மைப்பேற்றினை தனக்கு தந்து ஆசிர்வதிக்க வேண்டுமென் இறைவனிடம் மன்றாடுமாறு கூறினார்கள்.
1215 ஆம் ஆண்டு இந்த பேறு அவருக்கு அருளப்பட்டது, பிரான்ஸ் தேசத்தின் மகிமையாகவும், கிருஸ்துவ அரசர்க்கெல்லாம் முன்மாதிரியாகவும் விளங்கப்போகும் இளவரசர் புனித லூயிஸ் பிறந்தார்.
*சிந்தனை*
“மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே!!!! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்”
நமதாண்டவளின் அன்னைக்குரிய குணநலன்களில் தாயன்பு மிகவும் வல்லமை வாய்ந்தது. அந்த தாயன்பே, கானாவூர் திருமணத்தில் யாரும் கேட்காமலே உதவி செய்யவும், எலிசபெத்தம்மாளுக்கு உதவவும் விரைந்தது.
நாமும் நமது வாழ்வில் அனைத்து கதவுகளும் அடைபட்டு, திக்கு தெரியாமல் தள்ளாடும் வேளையில் தனது தாயன்பினால் நமக்காக இரிவனிடம் பரிந்து பேசி நமக்கு வேண்டிய வரங்களை பெற்றுத்தரும் மத்தியஸ்தி நமதன்னை.
நாம் எவ்வளவு அன்பு செய்கின்றோமோ அதை விட அதிகமாக நமதாண்டவள் நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கின்றார். உலக மாந்தரின் மீட்பரை உலகிற்கு பெற்றுத்தந்த நமதன்னை, மீட்பின் வழியில் அவரோடு தோள் கொடுத்து நின்று எந்த தாயாலும் தாங்க முடியாத வியாகுலங்களை நமக்காக ஏற்றுக்கொண்டார். அனைத்தும் நம்மேல் கொண்ட அன்பினால் மட்டுமே!!! அந்த அன்னைக்கு நாம் தருவது என்ன?? நம்மையே நாம் அவளிடம் ஒப்படைத்து அவள் வழியாக இறைவனின் பதம் சென்றடைந்தால் எத்துணை நலம்!!!
இயசுவுக்கே புகழ்!!!மாமரித்தாயே வாழ்க!!!
No comments:
Post a Comment