அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 26, 2017

ஏன் நீங்கள் விசுவாச அறிக்கை செய்யவில்லையா?

திருத்தூதர் பேதுரு, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று விசவாச அறிக்கையிட்ட பின், உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்.

ஏன் நீங்கள் விசுவாச அறிக்கை செய்யவில்லையா? ஆமாம். தினமும் செய்கிறீர்கள். ஆகவே நீங்களும் பாறைதான். அந்த பாறையின் ஒரு பகுதிதான்.உங்கள் விசுவாசம் உறுதியாக இருந்தால், நீங்களும் பாறைதான். உங்களை யாரும் எதுவும் அசைக்க முடியாது. எந்த தீங்கும் உங்களை அணுகாது. தீண்டாது. மேற்கொள்ளாது.அந்த பாறையிடம் வழங்கப்பட்ட ஆற்றல் அனைத்திலும் உங்களுக்கும் பங்கு உண்டு. அந்த பாறையிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு அனைத்திலும் உங்களுக்கும் பங்கு உண்டு.

விண்ணரசின் திறவுகோல்களை நான் உங்களிடம் கொடுத்துள்ளார். இறை ஆட்சியில் பங்கு கொள்வது முற்றலும் உங்கள்பொறுப்பு.அதே வேளையில் நாம் அனைவரும் ஒன்றாக ஒரே குடும்பமாக, ஒரே ஆட்சியின் பங்காளிகளாகவும் இருப்பதால் ஒருவருக்கொருவர்கூட்டுறவில் வாழ்வின் முழுமையை அடைகிறோம். இனிது வாழுங்கள்.

-ஜோசப் லீயோன்

No comments:

Post a Comment