வாழ்வு கடவுளை மாட்சிமைப்படுத்தட்டும்
நற்செய்தியில் நாம் வாசிக்கிற ஒவ்வொரு
பகுதியும் ஒவ்வொர் பிண்ணனியில் எழுதப்படுகின்ற ஒன்றாகும். நாம் வாசிக்கும்
நற்செய்தியின் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதன் வரலாற்றுப் பிண்ணனியும், இயேசு
கூறிய காலச்கமசூழலின் பிண்ணனியும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால்,
அதன் உண்மையான அர்த்தத்தைப்புரிந்து கொள்ளாமல், திரித்து தான் பொருள் அறிய முடியும். பிரிந்துபோன சபையினர்
செய்யக்கூடிய வேலை இந்த திரித்துக்கூறுகிற செய்தி.
நற்செய்தியில், இந்த
மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என அழைக்க வேண்டாம் என்று இயேசு சொல்கிறார்.
எதற்காக? இயேசு சொல்வதன் பொருளை தெளிவாக அறிந்து
கொள்ளவில்லையென்றால், தவறான அர்த்தத்தை தான் நாமும் புரிந்துகொள்வோம்.
இயேசு மறைநூல் அறிஞர்களுக்கும், பரிசேயர்களுக்கும் இதைச்சொல்கிறார்.
காரணம்: இவர்கள் தங்களை கடவுளுக்கு நிகரானவர்களாக காட்டிக்கொண்டார்கள். எனவேதான்,
பந்தியிலும், தொழுகைக்கூடங்களிலும், முதன்மை இருக்கைகளையும், மக்களால்
தங்களுக்கு அனைத்து மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும் எனறு வலிறுத்தினார்கள்.
இதைத்தான் இயேசு கண்டிக்கிறார்.
நம்முடைய வாழ்வு கடவுளை மகிமைப்படுத்த
வேண்டுமே தவிர, நம்மையே மகிமைப்படுத்துவதாக
இருக்கக்கூடாது. தூய இஞ்ஞாசியாரின் “எல்லாமே இறைவனின் அதிமிகு மகிமைக்கே“ என்கிற
விருதுவாக்கு இதற்கு சிறந்த உதாரணம். தூய பவுலடியாரைப்போல, நாம்
வாழ்ந்தாலும், இறந்தாலும் கிறிஸ்து மகிமை பெறட்டும்,
என்ற எண்ணம் நமக்குள்ளாக மேலோங்கியிருக்கின்றபோது, கடவுள் நம்மை உயர்த்துவார்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------
No comments:
Post a Comment