புனித ஹோர்மிஸ்தாஸ் Pope Saint Hormisdas
திருவிழா நாள் : ஆகஸ்ட் 6
அமைதி ஏற்படுத்துதல்
போப்
ஏறத்தாழ ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு செல்வக் குடும்பத்தில் ஹோர்மிஸ்தாஸ் பிறந்தார். இளம் வயதினரான அவருக்கு திருமணமாகி அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தது. ஆனால் அவரது மனைவி இறந்தபோது, அவர் மறையியல் படிப்பு படித்து ஒரு குருவானவராக நினைத்தார். உரோமில் அவர் பணியாற்றிய போது, ஹோர்மிஸ்தாஸ் தனது அரசியல் செயல் திறமுடைய திறமைகளைப் பயன்படுத்தி போப் சைமாக்ஸின் ஆதரவாளர்களையும் போப்பின் எதிரி வாரன்ஸின் ஆதரவாளர்களையும் ஒன்றுபடத்த முயற்சித்தார். என்றாலும், திருச்சபையில் இது மட்டுமே விவாதத்திற்குரியதாக இருக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன், கான்ஸ்டான்டி நோபிளின் மதகுரு அகாஸியஸ், இயேசுவுக்கு இறைத்தன்மை மட்டுமே உண்டு என்கிற ஓரியல்பு கோட்பாடான முரண்சமயக் கருத்தை அனுமதித்திருந்தார். இந்த அகாஸியன் கோட்பாடு, கிழக்கு மற்றும் மேற்கு திருச்சபையினரிடையே ஒரு நீண்டநாள் பிளவாக இருந்து, இந்த முரண்பாடு, ஹோர்மிஸ்தஸ் உரோமையில் இருந்தபோது உச்சநிலையை அடைந்தது.
திருத்தந்தையும் அமைதி ஏற்படுத்துபவரும் :
514 ஆம் ஆண்டில், போப் சைமாக்ஸ் இறந்தபோது, ஹோர்மிஸ்தஸ் போப் ஆனார். மேலும் திருச்சபையிலிருந்த முரண்பாடுகளைக் களைய தனது சக்தியைச் செலவழித்தார். கிழக்கு மற்றும் மேற்கு திருச்சபைகள் சமாதானம் அடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் 519 ஆம் ஆண்டு ஹோர்மிஸ்தஸ் விதிமுறை என்னும் நம்பிக்கை அறிக்கை ஒன்று இணைந்து உருவாக்கினார். இதன் மூலம் அகாஸியன் முரண்சமயக் கருத்தைக் கண்டித்தார். பேரரசர் ஜஸ்டின் 1 என்பவர் ஹோர்மிஸ்தஸின் விதிமுறையை ஏற்றுக்கொண்டார். கான்ஸ்டான்டின் நோபிளின் குடிமுதல்வரும் நூற்றுக்கணக்கான கிழக்குத் திருச்சபை பொறுப்பாளர்களும் ஒப்புதல் அளித்துக் கையயாப்பம் இட்டனர். சிறிது காலம், கிழக்கு மேற்கு திருச்சபைக்குள்ளான வேறுபாடுகள் முடிவுக்கு வந்தன. 523 ஆம் ஆண்டு, ஒரு நிலையான விருப்புரிமைக் கொடை விட்டு விட்டு ஹோர்மிஸ்தஸ் இறந்தார். ஹோர்மிஸ்தஸ் மறைந்த ஒரு பத்து ஆண்டுகள் கழித்து அவரது மகன் போப் சில்வராஸாக முடிசூட்டப்பட்டார். மேலும் அவரும் குறிப்பிட்ட சூழ்நிலையில், நிகழ்கிற தருணத்தில் ஒரு புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
செபம் :
தந்தையே, உமது அமைதியின் தூதராக, என்னை மாற்றும். எங்கு வெறுப்பு உள்ளதோ, நான் அங்கே அன்பை விதைக்கச் செய்யும். எங்கே காயம் ஏற்படுகிறதோ, அங்கே மன்னிப்பை அருளும். எங்கே ஐயப்பாடு நிலவுகிறதோ, அங்கே உறுதியையும், எங்கே அவமானம் நிலவுகிறதோ அங்கே நம்பிக்கையையும், எங்கே இருள் சூழ்ந்திருக்கிறதோ அங்கே வெளிச்சத்தையும், எங்கே வருத்தம் இருக்கிறதோ அங்வே மகிழ்ச்சியையும் விதைக்க அருள்புரியும். மகிமை நிறை தலைவரே, நான் ஆறுதல் பெறுவதற்காக, ஆறுதலை தேடி அலையவிடாதேயும். புரிந்து கொள்ளப்படுவதற்காக, புரிந்து கொள்ளச்செய்யும். பிறரை அன்பு செய்வதற்காக என்னை அன்பு செய்யும். ஏனெனில், கொடுப்பதில்தான் நாம் பெறுகிறோம். மன்னிப்பதில்தான், நாம் மன்னிக்கப்படுகிறோம். நமது இறப்பில்தான், விண்ணகவாழ்விற்குப் பிறக்கிறோம். ஆமென்.
அவரது அடிச்சுவட்டில் :
ஹோர்மிஸ்தஸ் திருத்தந்தையாக (போப்) இருந்தபோது கிழக்கு மற்றும் மேற்கு திருச்சபைகளுக்குள் இருந்த பிளவு, உலக அமைதிக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இன்று வல்லரசு நாடுகளுக்கிடையே நிகழும் போட்டிகளும், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருக்கும் நிலையும் உலக அமைதிக்கு பெரும் ஆபத்தாக உள்ளன. இந்த உலகைப் பாதுகாக்க ஹோர்மிஸ்தஸ் அயராது உழைத்தது போல இன்று, அவரது அமைதி நிலைநிறுத்தும் கூட்டமைப்பு அமெரிக்காவிலும், ஐக்கிய நாடுகளிலும் அரசியல் திறம் மாற்றம் கொண்டுவர பாடுபட்டு வருகிறது. அதனுடைய செயல்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன. 1957 ல் நியூயார்க் 7 டைம்ஸ் என்ற பத்திரிக்கையில், அணுஆயுத போரின் ஆபத்துக்களை விளக்கி அணுசக்தி கொள்கைக்காக அது ஒரு விளம்பரம் கொடுத்தது. அதன்பிறகு ஐக்கிய நாடுகள் சபையும் சோவியத் யூனியனும் அணுஆயுத சாதனங்களை சோதிப்பது தொடர்பாக கடன்களைக் காலந்தாழ்த்திக் கொடுப்பதற்கான இசைவு ஒன்றை வெளியிட்டது.
1978 ல் எம் எக்ஸ் மொபைல் மிசைல் டிப்ளாய்மெண்ட்க்கு எதிராக ஒரு வெற்றிகரமான போராட்டத்தை முன்னெடுத்தது.
1980 ல் அதனுடைய அணுஆயுதக் குறைப்பு முகாம், அணுஆயுத கருவிகள் தயாரிப்பை நிறுத்தத் தொடங்குவதற்கு ஊக்கமளித்தன.
மக்கள் அமைதிக்காக உழைத்து, செபம் செய்தால் அமைதி கைக்கூடும்.
No comments:
Post a Comment