இறுதி சடங்குகள்
திருப்பலிக்குத் தொடக்கச் சடங்குகள் போல் இறுதிசடங்குகளும் உண்டு. ஆனால் இவை மிகச் சுருக்கமாக அமைகிறது. இதில் அறிவிப்புகள், வாழ்த்தும் ஆசியும் அனுப்பி வைத்தலும் ஆகிய கூறுகள் அமைந்துள்ளன.
1.அறிவிப்புகள்
இறுதி நன்றி மன்றாட்டுக்கு பின் அருள்பணியாளரோ அல்லது வேறோருவரோ முக்கியமான தகவல்களை மக்களுக்குச் சொல்ல வேண்டியிருந்தால் அவற்றை சுருக்கமாக அறிவிப்பார். திருமண அறிவிப்புகளும் இங்கு இடபெறும்.
இந்த அறிவிப்புகளை திருபீடத்திலிருந்தோ, வாசக மேடையில் இருந்தோ கொடுக்கக் கூடாது. மாறாக “திருபீடமுற்றமும் அதன் அமைப்பும்” என்ற தலைப்பில் நாம் குறிப்பிட்டது போல் ‘அறிக்கை மேடையில்’ இருந்து அல்லது வேறோரு ஏற்புடைய இடத்திலிருந்து கொடுக்க வேண்டும். வெள்ளி பொன்விழா கொண்டாடும் அருள்பணியாளர்களுக்கும் அருள்சகோதரிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கும் நேரம் இதுவல்ல. திருப்பலி முடிந்தபின் இதை செய்ய வேண்டும்.
2. இறுதி வாழ்த்தும் ஆசியும்
இறைவாழ்த்தோடு திருப்பலியைத் தொடங்கியது போல் திருப்பலியின் முடிவிலும் “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக” என்று சொல்லி மக்களை வாழ்த்துகிறார். அவர்களுடைய பதிலுக்குப் பின் அருள்பணியாளர் தமது இறுதி ஆசிரை “எல்லா வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவராக” என்று சொல்லி வழங்குகிறார். மக்கள் பதிலாக “ஆமென்” என்று சொல்லி ஏற்றுக்கொள்கிறார்கள். பற்பல ஆண்டின் சிறப்புக்காலாம் விழாக்களுக்கு ஏற்றாற்போல் சிறப்பு ஆசீரும் இங்கு வழங்கலாம்.
3. அனுப்புதல்
திருப்பலி முடிந்ததும் தங்கள் பணிவாழ்வுக்குத் திரும்பி செல்லுமுன்“சென்று வாருங்கள் (வாழுங்கள்) திருப்பலி நிறைவேறிற்று” என்றோ “ஆண்டவருடைய நற்செய்தியை அறிவிக்க சென்று வாருங்கள்” என்றோ,
“ உங்களது வாழ்வால் ஆண்டவரை மாட்சிப்படுத்த அமைதியுடன் சென்று வாருங்கள்” என்றோ சொல்லி அனுப்பிவைக்கிறார். மக்கள் “இறைவனுக்கு நன்றி” என்று சொல்லி பதில் கூறுகிறார்கள்.
முடிவுரை
திருப்பலி வேறு, வாழ்க்கை வேறு அன்று. இரண்டுக்குமிடையே நெருங்கியத் தொடர்புண்டு. வாழ்வில் எதை நாம் விசுவசிக்கிறோமோ, எதை அனுபவிக்கிறோமோ அதையே திருப்பலியில் கொண்டாடுகிறோம். எனவே நாம் வாழ்விலிருந்து வளர்வதே வழிபாடு என உணர்வோமாக.
குறிப்பு : திருப்பலியில் மூன்று இடங்களில் ஆர்ப்பரிப்புகள் (Proclamations) உண்டு. இவை பாடபட வேண்டுமே தவிர, வாசிக்கப்படக் கூடாது.
அவையாவன.
1. நற்செய்தி பறைசாற்றும் முன் “அல்லேலூயாவும்”,
2. வசீகரத்துக்குப் பின் “நம்பிக்கையின் மறைபொருள்” என்பதும்
3. “இவர் வழியாக, இவரோடு, இவரில்..... ”என்ற இறுதி புகழுரையும்.
திருப்பலிக்குத் தொடக்கச் சடங்குகள் போல் இறுதிசடங்குகளும் உண்டு. ஆனால் இவை மிகச் சுருக்கமாக அமைகிறது. இதில் அறிவிப்புகள், வாழ்த்தும் ஆசியும் அனுப்பி வைத்தலும் ஆகிய கூறுகள் அமைந்துள்ளன.
1.அறிவிப்புகள்
இறுதி நன்றி மன்றாட்டுக்கு பின் அருள்பணியாளரோ அல்லது வேறோருவரோ முக்கியமான தகவல்களை மக்களுக்குச் சொல்ல வேண்டியிருந்தால் அவற்றை சுருக்கமாக அறிவிப்பார். திருமண அறிவிப்புகளும் இங்கு இடபெறும்.
இந்த அறிவிப்புகளை திருபீடத்திலிருந்தோ, வாசக மேடையில் இருந்தோ கொடுக்கக் கூடாது. மாறாக “திருபீடமுற்றமும் அதன் அமைப்பும்” என்ற தலைப்பில் நாம் குறிப்பிட்டது போல் ‘அறிக்கை மேடையில்’ இருந்து அல்லது வேறோரு ஏற்புடைய இடத்திலிருந்து கொடுக்க வேண்டும். வெள்ளி பொன்விழா கொண்டாடும் அருள்பணியாளர்களுக்கும் அருள்சகோதரிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கும் நேரம் இதுவல்ல. திருப்பலி முடிந்தபின் இதை செய்ய வேண்டும்.
2. இறுதி வாழ்த்தும் ஆசியும்
இறைவாழ்த்தோடு திருப்பலியைத் தொடங்கியது போல் திருப்பலியின் முடிவிலும் “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக” என்று சொல்லி மக்களை வாழ்த்துகிறார். அவர்களுடைய பதிலுக்குப் பின் அருள்பணியாளர் தமது இறுதி ஆசிரை “எல்லா வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவராக” என்று சொல்லி வழங்குகிறார். மக்கள் பதிலாக “ஆமென்” என்று சொல்லி ஏற்றுக்கொள்கிறார்கள். பற்பல ஆண்டின் சிறப்புக்காலாம் விழாக்களுக்கு ஏற்றாற்போல் சிறப்பு ஆசீரும் இங்கு வழங்கலாம்.
3. அனுப்புதல்
திருப்பலி முடிந்ததும் தங்கள் பணிவாழ்வுக்குத் திரும்பி செல்லுமுன்“சென்று வாருங்கள் (வாழுங்கள்) திருப்பலி நிறைவேறிற்று” என்றோ “ஆண்டவருடைய நற்செய்தியை அறிவிக்க சென்று வாருங்கள்” என்றோ,
“ உங்களது வாழ்வால் ஆண்டவரை மாட்சிப்படுத்த அமைதியுடன் சென்று வாருங்கள்” என்றோ சொல்லி அனுப்பிவைக்கிறார். மக்கள் “இறைவனுக்கு நன்றி” என்று சொல்லி பதில் கூறுகிறார்கள்.
முடிவுரை
திருப்பலி வேறு, வாழ்க்கை வேறு அன்று. இரண்டுக்குமிடையே நெருங்கியத் தொடர்புண்டு. வாழ்வில் எதை நாம் விசுவசிக்கிறோமோ, எதை அனுபவிக்கிறோமோ அதையே திருப்பலியில் கொண்டாடுகிறோம். எனவே நாம் வாழ்விலிருந்து வளர்வதே வழிபாடு என உணர்வோமாக.
குறிப்பு : திருப்பலியில் மூன்று இடங்களில் ஆர்ப்பரிப்புகள் (Proclamations) உண்டு. இவை பாடபட வேண்டுமே தவிர, வாசிக்கப்படக் கூடாது.
அவையாவன.
1. நற்செய்தி பறைசாற்றும் முன் “அல்லேலூயாவும்”,
2. வசீகரத்துக்குப் பின் “நம்பிக்கையின் மறைபொருள்” என்பதும்
3. “இவர் வழியாக, இவரோடு, இவரில்..... ”என்ற இறுதி புகழுரையும்.
No comments:
Post a Comment