திருமணத்தின் மேன்மை
இயேசுவின் காலத்தில், விவாகரத்து பற்றி, பல கேள்விகள் மக்கள் மனதில் இருந்தது. அது எளிதில் தீர்க்க முடியாததாக இருந்த, குழப்பமான தலைப்பு. யூதப்போதகர்கள் இரண்டு விதமான படிப்பினைகளைப்பின்பற்றி, இரண்டு பிரிவுகளாக இருந்தனர். முதல் படிப்பினை “ஷம்மாய்“. இதன்படி, விவாகரத்து எளிதில் பெற முடியாததாக இருந்தது. விபச்சாரத்தில் பிடிபட்டிருந்தால் மட்டுமே, ஒரு பெண்ணை விவாகரத்து செய்ய முடியும். மற்றபடி விவாகரத்து எளிதில் பெற முடியாத ஒன்றாக இருந்தது. மற்றொரு படிப்பினை ”ஹில்லல்”. இதன்படி, சாதாரண காரியத்திற்கும், ஒரு பெண்ணை விவாகரத்து மூலம் விலக்கிவிடலாம்.
இயேசுவிடத்தில், பரிசேயர்கள் விவாகரத்து பற்றிய கேள்வி கேட்கப்பட்டபோது, இந்த இரண்டு படிப்பினைகளை மனதில் வைத்துதான், கேட்டனர். இரண்டில், இயேசு எதற்கு ஆதரவு தருகிறார், அதன்மூலம் எப்படி, அவரைச்சிக்க வைக்கலாம் என்பதுதான், அவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால், இயேசு அவர்கள் எதிர்பாராத வண்ணம் அருமையான பதிலைத்தருகிறார். அவர் முதல் பெற்றோரை இங்கே குறிப்பிடுகிறார். ஆதாமும், ஏவாளும் படைக்கப்பட்டபோது, வேறு யாரும் இல்லை. அவர்கள் ஒருவர் மற்றவருக்காகவேப் படைக்கப்பட்டனர். ஒருவர் மற்றவரில்லாத உலகை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஒருவரில்லாமல் மற்றவரும் இல்லை என்ற அளவுக்கு அவர்கள் வாழ்ந்தனர். அதுதான் திருமண உறவில் பின்பற்றப்பட வேண்டும். திருமணம் என்பது புனிதமான உறவு. அது எதனாலும் முறிக்கப்பட முடியாது என்பதுதான் இயேசுவின் வாதம்.
திருமணம் கடவுள் முன்னிலையில் வாக்குறுதியாக நிறைவேற்றப்படுகிறது. இரண்டு பேரின் இணைவும், இசைவும் கடவுள் முன்னிலையில், கடவுளின் பெயரால் நடைபெறுகிறது. அதனுடைய முக்கியத்துவத்தை, திருமண உறவில் இணைக்கப்பெறும் அனைத்து தம்பதியரும் நினைவுகூற வேண்டும். அதன் மகத்துவத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
இயேசுவின் காலத்தில், விவாகரத்து பற்றி, பல கேள்விகள் மக்கள் மனதில் இருந்தது. அது எளிதில் தீர்க்க முடியாததாக இருந்த, குழப்பமான தலைப்பு. யூதப்போதகர்கள் இரண்டு விதமான படிப்பினைகளைப்பின்பற்றி, இரண்டு பிரிவுகளாக இருந்தனர். முதல் படிப்பினை “ஷம்மாய்“. இதன்படி, விவாகரத்து எளிதில் பெற முடியாததாக இருந்தது. விபச்சாரத்தில் பிடிபட்டிருந்தால் மட்டுமே, ஒரு பெண்ணை விவாகரத்து செய்ய முடியும். மற்றபடி விவாகரத்து எளிதில் பெற முடியாத ஒன்றாக இருந்தது. மற்றொரு படிப்பினை ”ஹில்லல்”. இதன்படி, சாதாரண காரியத்திற்கும், ஒரு பெண்ணை விவாகரத்து மூலம் விலக்கிவிடலாம்.
இயேசுவிடத்தில், பரிசேயர்கள் விவாகரத்து பற்றிய கேள்வி கேட்கப்பட்டபோது, இந்த இரண்டு படிப்பினைகளை மனதில் வைத்துதான், கேட்டனர். இரண்டில், இயேசு எதற்கு ஆதரவு தருகிறார், அதன்மூலம் எப்படி, அவரைச்சிக்க வைக்கலாம் என்பதுதான், அவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால், இயேசு அவர்கள் எதிர்பாராத வண்ணம் அருமையான பதிலைத்தருகிறார். அவர் முதல் பெற்றோரை இங்கே குறிப்பிடுகிறார். ஆதாமும், ஏவாளும் படைக்கப்பட்டபோது, வேறு யாரும் இல்லை. அவர்கள் ஒருவர் மற்றவருக்காகவேப் படைக்கப்பட்டனர். ஒருவர் மற்றவரில்லாத உலகை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஒருவரில்லாமல் மற்றவரும் இல்லை என்ற அளவுக்கு அவர்கள் வாழ்ந்தனர். அதுதான் திருமண உறவில் பின்பற்றப்பட வேண்டும். திருமணம் என்பது புனிதமான உறவு. அது எதனாலும் முறிக்கப்பட முடியாது என்பதுதான் இயேசுவின் வாதம்.
திருமணம் கடவுள் முன்னிலையில் வாக்குறுதியாக நிறைவேற்றப்படுகிறது. இரண்டு பேரின் இணைவும், இசைவும் கடவுள் முன்னிலையில், கடவுளின் பெயரால் நடைபெறுகிறது. அதனுடைய முக்கியத்துவத்தை, திருமண உறவில் இணைக்கப்பெறும் அனைத்து தம்பதியரும் நினைவுகூற வேண்டும். அதன் மகத்துவத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
No comments:
Post a Comment