அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 19, 2017

குழந்தையும் தெய்வமும்

குழந்தையும் தெய்வமும்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் "கடவுள் இன்னும் இந்த உலகைப் பொருத்த மட்டில் சலிப்படையவில்லை" என்னும் செய்தியைக் கொண்டுவருகின்றன என்கிறார் தாகூர். குழந்தைகள் இல்லாத வீடடிற்கு விருந்தாளிகள் போகக்கூடாது என்கிறார் ஒரு சமூகச் சிந்தனையாளர்.

குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில் விண்ணரசு அவர்களதே என குழந்தைகளின் புனிதத்தன்மையை பெருமைப்படுத்துகிறார் இயேசு.

இத்தனை சிறப்புமிக்க குழந்தைகள், வாழமுடியாமல், விண்ணரசுக்குள் நுழையமுடியாமல் பல்வேறு நிர்ப்பந்தங்களுக்குள்ளாவதைக் காண்கிறோம். கருத்தடை, கருக்கொலை என்று உலகில் பிறப்பதற்கே அனுமதியில்லை. சத்துதுணவின்றி, அடிப்படைக் கல்வியின்றி, உருவாகும் வாய்ப்பும் மறுக்கப்படுகிறது.
குழந்தைத்தொழில், பாலியல் கொடுமைகளால் நசுக்கப்பட்ட குழந்தைகளுக்கு விண்ணரசின் வாயிலையே அடைத்துவிடுகிறார்கள்.

நல்ல ஒழுக்கம், சிறப்பான கல்வி, தரமான மறைக்கல்வி,இறை அனுபவம் இவற்றை வழங்கி நம் குழந்தைகளை எப்பொழுதும் இயேசுவிடம் அழைத்து வருவோம். அவர்களுக்குரியதை அவர்களுக்கு கொடுப்போம்.

உங்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டுவரும் நேரம், நாட்கள், சந்தர்ப்பங்கள் எவை?
--அருட்திரு ஜேசப் லீயோன்

No comments:

Post a Comment