புனித பொனெவெந்தூர் பி. ச. (இத்தாலியம்: San Bonaventura; இயற்பெயர்: ஜியோவானி டி ஃபிதான்சா; 1221 – 15 ஜூலை 1274),[1] என்பவர் இத்தாலிய நடுக் கால இறையியளாலரும் மெய்யியளாலரும் ஆவார். இவர் பிரான்சிஸ்கன் சபையின் ஏழாவது தலைவராக பணியாற்றியவர். இவர் அல்பேனோவின் கர்தினல்-ஆயர். இவருக்கு புனிதர் பட்டமளிப்பு 14 ஏப்ரல் 1482இல் திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸால் அளிக்கப்பட்டது. திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் 1588இல் இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இவரை "தேவதூதரின் மறைவல்லுநர்" (இலத்தீன்: Doctor Seraphicus) எனவும் அழைப்பர்.
மேற்கோள்கள்
M. Walsh, தொகுப்பாசிரியர் (1991). Butler's Lives of the Saints. New York: HarperCollins. பக். 216.
No comments:
Post a Comment