அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, August 18, 2017

நன்றி இயேசுவே

நன்றி இயேசுவே

எபிரேயர் 13:15
ஆகவே, அவர் வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப்பலியைச் செலுத்துவோமாக, அவருடைய பெயரை அறிக்கையிடுவதன் வழியாக நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலியாகும்.

நாம் எப்போது ஸ்தோத்திர பலி செலுத்துகிறோம்? எல்லா வேலைகளிலும் செலுத்த வேண்டும் எல்லா சூழ்நிலைகளிலும் செலுத்த வேண்டும் எல்லாக் காரியங்களிலும் செலுத்த வேண்டும் அப்படி செய்வதன் மூலமாய் சாத்தான் நம்மை கட்டுப்படுத்த முடியாத வெற்றிகரமான வாழ்வுக்குள் நாம் வாழ்கிறோம் .

நமது சூழ்நிலைகள் எந்நிலையில் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் நாம் கடவுளுக்கு நன்றி சொல்லி சந்தோசமா இருக்கும் போது ஒரு போதும் சாத்தான் நம்மை நெருங்க முடியாது .நம் எதிரியான சாத்தானை விரட்ட நமக்கு ஒரே ஆயுதம் ஸ்தோத்திர பலி தான்

உங்கள் மனம் புதிதாக மாறும்  போது பிசாசால் அதை தாங்கிக் கொள்ள முடியாது அவன் அந்த ஆசீர்வதத்தை எதிர்ப்பான் ஆனால் நீங்கள் இடைவிடாமல் வேதம் வாசிப்பது ,ஜெபமாலை சொல்வது, நற்கருணை சந்திப்பது என்று தொடர்ந்து முன்னேறும் போது நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்

திருப்பாடல்கள் 34:1,2,3
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

பல புனிதர்கள் வெற்றி வாழ்வு வாழ்ந்தத்தின் அர்த்தம் இப் பூமியில் வாழ்ந்த நாளெல்லாம் இறைவனுக்கு நன்றி உள்ள இருதயதத்தெடும்,புகழ்ச்சி உள்ள இருதயதத்தெடும் வாழ்ந்தது தான் ஆமென்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment