அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, August 15, 2018

இறைத்திட்டத்தில் மரியாள்

வானதூதர் வழியாக அறிவிக்கப்பட்ட கடவுளின் நற்செய்தியைத் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டதால் இறைமகன் இயேசுவின் தாயாகும் பேறுபெற்றவர் கன்னி மரியா. இயேசுவின் பிறப்பு, பணி வாழ்வு, சிலுவை மரணம் போன்ற மீட்பின் நிகழ்வுகளில் மரியாவின் பங்கை விளக்கும் தகவல்களை விவிலியத்தில் காண்கிறோம். மனித மீட்புக்கான இறைத்திட்டம் தந்தையாம் கடவுளில் உருவான வேளையிலேயே மரியா முக்கியத்துவம் பெற்றிருந்தது தெளிவு.

முன் நியமனம்
இறைவனின் தாயான புனித மரியாவைக் குறித்து நூல்கள் எழுதிய திருச்சபையின் அறிஞர்கள் அனைவரும், மரியா மீட்புத் திட்டத்தில் முன் நியமனம் பெற்றவர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். உலகில் மனிதர்கள் படைக்கப்படும் முன்பே, வானதூதர்களைப் படைத்த கடவுள், தமது மீட்புத் திட்டத்தை ஏற்கும் வானதூதர்களுக்கு மட்டுமே, தமது மாட்சியின் பேரின்பத்தை அளிக்க கடவுள் விரும்பினார்.
அதன்படி ஒரு குழந்தையை ஏந்திய பெண் ஒருவரின் காட்சியைக் காண்பித்த கடவுள் வானதூதர்களிடம், “இந்த குழந்தையே உலக மக்களின் பாவங்களைப் போக்க மனிதராகப் பிறக்கப்போகும் மகனாகிய கடவுள். இப்பெண் அவரைப் பெற்று வளர்க்க இருக்கும் கன்னித் தாய். இவர்களை வணங்குங்கள்” என்றார். வானதூதர்கள் அனைவரும் இயேசுவையும் அவரது தாயையும் வணங்கச் செல்கையில், தலைவனான லூசிபர் அவர்களைத் தடுத்தான்.

வானதூதர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கடவுளின் மீட்புத் திட்டத்தைப் புறக்கணித்து, லூசிபரோடு சேர்ந்து கொண்டு கடவுளுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர். அவ்வேளையில் மிக்கேல் அதிதூதர், “கடவுளுக்கு நிகரானவர் யார்?” என்று முழங்கியவாறே, கலகம் செய்த வானதூதர்களுக்கு எதிராகப் போரைத் தொடங்கினார். இறுதியில், அதிதூதர் மிக்கேலோடு சேர்ந்து போரிட்ட வானதூதர்கள் வெற்றி பெற்றனர். மகனாகிய கடவுளையும் அவரது தாயையும் வணங்கிய அவர்களுக்கு, தமது பேரின்பத்தை கடவுள் வழங்கினார்.

முன்னறிவிப்பு
இறை ஏவுதலால் எழுதப்பட்ட தொடக்க நூலில் காணப்படும் முதல் பெற்றோர் குறித்த கதை, உலக மீட்பரின் தாய் பற்றி பேசுகிறது. ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார். (தொடக்க நூல் 3:14,15) அலகையாகிய பாம்பின் தலையைக் காயப்படுத்தும் வித்து இறைமகன் இயேசுவே என்பதால், அந்த பெண் மரியாவே என்பதில் சந்தேகமில்லை.
கி.மு. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைவாக்கினர் எசாயா, “ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவர் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்” (எசாயா 7:14) “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; அவர் திருப்பெயரோ வலிமைமிகு இறைவன், அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்” (எசாயா 9:6) என குறிப்பிடுவது இயேசுவையும் அவரது தாய் மரியாவையுமே முன்னறிவிக்கின்றன. எனவேதான் ‘இளம்பெண்’ என்று எசாயா குறிப்பிடும் இடத்தில், மத்தேயு நற்செய்தியாளர் ‘கன்னி’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

No comments:

Post a Comment