எனக்கு இயேசு யார்?
பொதுக்காலம் 21வது வாரம்
(முதல் வாசகம்: எசாயா 22,19-23
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 138
இரண்டாம் வாசகம்: உரோமையர் 11,33-36
நற்செய்தி: மத்தேயு 16,13-20)
தெளிவுகள் இல்லாத போது
புரிதல்கள் ஏழாத போது
விடைகள் கிடைக்காத போது
விளக்கங்கள் கொடுக்கப்படாத போது
கேட்ட கேள்விகளுக்கே அர்த்தங்கள் இல்லாமல் போகலாம்!
விடியலைத்தேடி கண் விழிக்கும் மனங்களெல்லாம்
விந்தையான உலகத்தைக் கண்டு விழிப்பிதுங்கி நிற்கின்றது...
காரணம் நான் யார் என்று தெரியாத நிலை
நான் எதற்காக இவ்வுலகில் இருக்கிறேன் என்று உணராத நிலை
நான் ஏன் வாழ்கிறேன் என்று சிந்திக்காத நிலை
நான் எப்படிப்பட்ட வாழ்வு வாழ வேண்டுமென்று
யோசிக்காத நிலை
அடுக்குமாடி குடியிருப்பாய் அடுக்கடுக்காய் போகும்
இப்பட்டியலில் ஏதோ ஒரு இடத்தில் ஒட்டி நிற்கிறது
நம்முடைய வாழ்க்கை!
எதில் எதார்த்தம் எதில் உண்மை எதில் நியாயம் என்று
ஒன்றன்பின் மற்றொன்றாக
வாழ்வை அலசிப்பார்க்கும் சூழலில்
நான் யார் என்ற கேள்விக்குப் பதில் கொடுப்பது
சற்று சிரமமே! இருப்பினும்,
நான் யார் என்று சொல்கிறார்கள்?
நான் யார் என்று சொல்கிறீர்கள்?
இவ்விரு கேள்விகளுக்கு விடைத்தேடுவதே
இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் மையச்சிந்தனை!
இது சாதாரணமான கேள்வி.
ஆனால் சரித்திரத்தைத் திரும்பிப் பார்;க்க வைத்த கேள்வி...
உலக வரலாற்றில் எந்தத் தலைவரும் தன் சீடர்களிடம்
நான் யார் என்று கேட்டிருக்கமாட்டார்
காரணம் நான் ஏன் என் பணியாளனிடம்
கேட்க வேண்டும்?
நான் ஏன் என் வேலைக்காரனிடம் கேட்க வேண்டும்?
நான் ஏன் என் தொண்டர்களிடம் கேட்க வேண்டும்?
நான் ஏன் என்னைப் பின்பற்றுபவர்களிடம் கேட்க வேண்டும்?
நான் ஏன் என் மக்களிடம் கேட்க வேண்டும்?
இதுதான் இன்றைய தலைவர்களின் நிலை!
தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்
என்று தெரிந்துக்கொள்ள நினைப்பதில்லை...
அதன்பால் அக்கறையும் கொள்வதில்லை...
ஆனால்,
இயேசு மட்டும் ஏன் நான் யாரென்று கேட்கிறார்...
அவருக்கு அவரைப்பற்றி தெரியாதா?
அப்படில்ல அவருக்கு அவரைப் பற்றியும் தெரியும்
அவரைப் பின்பற்ற விரும்பும் நம்மைப்பற்றியும் தெரியும்
இருந்தப்போதிலும் நம்மிடத்தில் விளங்கும்
சிறுசிறு ஐயங்களை அப்புறப்படுத்த விரும்புகிறார்
இறைமகன் இயேசுகிறித்து...
உணவின் பின் ஓடிய கூட்டம் இறைவார்த்தையின் பின் ஓட வேண்டும்!
போலிகளுக்குப்பின் ஓடிய கூட்டம்
உண்மையின் சாயலான இயேசுவைக் காண வேண்டும்!
நம்பிக்கையற்ற நிலையில் நின்ற சீடர்கள் நம்பிக்கையில் வேரூன்ற வேண்டும்!
குழம்பிய நிலையில் இருந்த பேதுரு நிதானத்தில் நிம்மதியாய் வாழ வேண்டும்!
இவைகளே இயேசுவை நான் யாரென்று கேட்க வைத்தன!
இன்றைய சூழலும் நாமும் பல தருணங்களில்
இயேசுவைக் கேள்விக் கேட்க வைக்கிறோம்...
நம்முடைய அவசியமற்ற ஐயம் நம்முடைய பண ஆசை
நம்முடைய அன்பற்ற நிலை நம்முடைய பிளவுபட்ட மனம்
நம்முடைய தேவையற்ற பயம் நம்முடைய போலியான வாழ்க்கை
நம்முடைய முகமூடிப் பார்வை நம்முடைய உதட்டளவு பேச்சுகள்
இவையெல்லாம் இயேசுவைக் கேள்விக் கேட்க வைக்கின்றன...
அதற்கும் இயேசு முகம் கோணாமல் பதில் கொடுக்கிறார்...
காரணம் அவர் நம்மை அந்தளவு அன்புச் செய்கிறார்!
அவர் நம்மை முழுவதுமாய் ஏற்றுக்கொள்கிறார்!
ஆனால் நாம்? இங்கேதான் நம்முடைய வாழ்க்கை
புடமிட்டுப் பார்க்கப்படுகிறது...
இயேசுவுக்கு நான் நண்பன்
இயேசுவுக்கு நான் பிள்ளை
இயேசுவுக்கு நான் சகோதரன், சகோதரி
இயேசுவுக்கு நான் உற்ற தோழி
இவையெல்லாம் நியாயமானதே!
எனக்கு இயேசு யார்?
என்பதுதான் இங்கே மிகமிக முக்கியம்...
திருவிழாவுக்கு வருவது செபமாலை செபிப்பது
நற்கருணை ஆராதனையில் பங்கேற்பது
திருப்பலியில் தவறாமல் பங்கெடுப்பது
தர்மம் செய்வது
இப்படியாக நான் இயேசுவைப் புரிந்திருக்கின்றேனா?
அல்லது
அவருடன் உரையாடுவது அவருடன் உறவாடுவது
அவருடன் என் இன்ப, துன்பத்தைப் பகிர்வது
அவரிடத்தில் என் துயரத்தை அறிக்கையிடுவது
அவரிடத்தில் என்னையே ஒப்புக்கொடுப்பது...
இதில் எது எனக்காது?
இதில் என்னை எங்கே பொருந்திப் பார்ப்பது?
இயேசுவை நல்லவிதத்தில் நான் புரிந்துகொண்டால்....
என்னாலும் சொல்ல முடியும்
‘நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்’
தொடர்ந்து பயணிப்போம்
இயேசுவை யாரென்று கண்டுக்கொள்வோம்
எனக்கு இயேசு யாரென்றும் தெரிந்துக்கொள்வோம்...
அறிதலின் தொடக்கமே அறிவித்தலின் தொடக்கம்
இயேசுவை அறிவோம்
அவரைப் பற்றி மற்றவரிடத்தில் அறிவிப்போம்!
- ஆமென்
பொதுக்காலம் 21வது வாரம்
(முதல் வாசகம்: எசாயா 22,19-23
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 138
இரண்டாம் வாசகம்: உரோமையர் 11,33-36
நற்செய்தி: மத்தேயு 16,13-20)
தெளிவுகள் இல்லாத போது
புரிதல்கள் ஏழாத போது
விடைகள் கிடைக்காத போது
விளக்கங்கள் கொடுக்கப்படாத போது
கேட்ட கேள்விகளுக்கே அர்த்தங்கள் இல்லாமல் போகலாம்!
விடியலைத்தேடி கண் விழிக்கும் மனங்களெல்லாம்
விந்தையான உலகத்தைக் கண்டு விழிப்பிதுங்கி நிற்கின்றது...
காரணம் நான் யார் என்று தெரியாத நிலை
நான் எதற்காக இவ்வுலகில் இருக்கிறேன் என்று உணராத நிலை
நான் ஏன் வாழ்கிறேன் என்று சிந்திக்காத நிலை
நான் எப்படிப்பட்ட வாழ்வு வாழ வேண்டுமென்று
யோசிக்காத நிலை
அடுக்குமாடி குடியிருப்பாய் அடுக்கடுக்காய் போகும்
இப்பட்டியலில் ஏதோ ஒரு இடத்தில் ஒட்டி நிற்கிறது
நம்முடைய வாழ்க்கை!
எதில் எதார்த்தம் எதில் உண்மை எதில் நியாயம் என்று
ஒன்றன்பின் மற்றொன்றாக
வாழ்வை அலசிப்பார்க்கும் சூழலில்
நான் யார் என்ற கேள்விக்குப் பதில் கொடுப்பது
சற்று சிரமமே! இருப்பினும்,
நான் யார் என்று சொல்கிறார்கள்?
நான் யார் என்று சொல்கிறீர்கள்?
இவ்விரு கேள்விகளுக்கு விடைத்தேடுவதே
இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் மையச்சிந்தனை!
இது சாதாரணமான கேள்வி.
ஆனால் சரித்திரத்தைத் திரும்பிப் பார்;க்க வைத்த கேள்வி...
உலக வரலாற்றில் எந்தத் தலைவரும் தன் சீடர்களிடம்
நான் யார் என்று கேட்டிருக்கமாட்டார்
காரணம் நான் ஏன் என் பணியாளனிடம்
கேட்க வேண்டும்?
நான் ஏன் என் வேலைக்காரனிடம் கேட்க வேண்டும்?
நான் ஏன் என் தொண்டர்களிடம் கேட்க வேண்டும்?
நான் ஏன் என்னைப் பின்பற்றுபவர்களிடம் கேட்க வேண்டும்?
நான் ஏன் என் மக்களிடம் கேட்க வேண்டும்?
இதுதான் இன்றைய தலைவர்களின் நிலை!
தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்
என்று தெரிந்துக்கொள்ள நினைப்பதில்லை...
அதன்பால் அக்கறையும் கொள்வதில்லை...
ஆனால்,
இயேசு மட்டும் ஏன் நான் யாரென்று கேட்கிறார்...
அவருக்கு அவரைப்பற்றி தெரியாதா?
அப்படில்ல அவருக்கு அவரைப் பற்றியும் தெரியும்
அவரைப் பின்பற்ற விரும்பும் நம்மைப்பற்றியும் தெரியும்
இருந்தப்போதிலும் நம்மிடத்தில் விளங்கும்
சிறுசிறு ஐயங்களை அப்புறப்படுத்த விரும்புகிறார்
இறைமகன் இயேசுகிறித்து...
உணவின் பின் ஓடிய கூட்டம் இறைவார்த்தையின் பின் ஓட வேண்டும்!
போலிகளுக்குப்பின் ஓடிய கூட்டம்
உண்மையின் சாயலான இயேசுவைக் காண வேண்டும்!
நம்பிக்கையற்ற நிலையில் நின்ற சீடர்கள் நம்பிக்கையில் வேரூன்ற வேண்டும்!
குழம்பிய நிலையில் இருந்த பேதுரு நிதானத்தில் நிம்மதியாய் வாழ வேண்டும்!
இவைகளே இயேசுவை நான் யாரென்று கேட்க வைத்தன!
இன்றைய சூழலும் நாமும் பல தருணங்களில்
இயேசுவைக் கேள்விக் கேட்க வைக்கிறோம்...
நம்முடைய அவசியமற்ற ஐயம் நம்முடைய பண ஆசை
நம்முடைய அன்பற்ற நிலை நம்முடைய பிளவுபட்ட மனம்
நம்முடைய தேவையற்ற பயம் நம்முடைய போலியான வாழ்க்கை
நம்முடைய முகமூடிப் பார்வை நம்முடைய உதட்டளவு பேச்சுகள்
இவையெல்லாம் இயேசுவைக் கேள்விக் கேட்க வைக்கின்றன...
அதற்கும் இயேசு முகம் கோணாமல் பதில் கொடுக்கிறார்...
காரணம் அவர் நம்மை அந்தளவு அன்புச் செய்கிறார்!
அவர் நம்மை முழுவதுமாய் ஏற்றுக்கொள்கிறார்!
ஆனால் நாம்? இங்கேதான் நம்முடைய வாழ்க்கை
புடமிட்டுப் பார்க்கப்படுகிறது...
இயேசுவுக்கு நான் நண்பன்
இயேசுவுக்கு நான் பிள்ளை
இயேசுவுக்கு நான் சகோதரன், சகோதரி
இயேசுவுக்கு நான் உற்ற தோழி
இவையெல்லாம் நியாயமானதே!
எனக்கு இயேசு யார்?
என்பதுதான் இங்கே மிகமிக முக்கியம்...
திருவிழாவுக்கு வருவது செபமாலை செபிப்பது
நற்கருணை ஆராதனையில் பங்கேற்பது
திருப்பலியில் தவறாமல் பங்கெடுப்பது
தர்மம் செய்வது
இப்படியாக நான் இயேசுவைப் புரிந்திருக்கின்றேனா?
அல்லது
அவருடன் உரையாடுவது அவருடன் உறவாடுவது
அவருடன் என் இன்ப, துன்பத்தைப் பகிர்வது
அவரிடத்தில் என் துயரத்தை அறிக்கையிடுவது
அவரிடத்தில் என்னையே ஒப்புக்கொடுப்பது...
இதில் எது எனக்காது?
இதில் என்னை எங்கே பொருந்திப் பார்ப்பது?
இயேசுவை நல்லவிதத்தில் நான் புரிந்துகொண்டால்....
என்னாலும் சொல்ல முடியும்
‘நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்’
தொடர்ந்து பயணிப்போம்
இயேசுவை யாரென்று கண்டுக்கொள்வோம்
எனக்கு இயேசு யாரென்றும் தெரிந்துக்கொள்வோம்...
அறிதலின் தொடக்கமே அறிவித்தலின் தொடக்கம்
இயேசுவை அறிவோம்
அவரைப் பற்றி மற்றவரிடத்தில் அறிவிப்போம்!
- ஆமென்
No comments:
Post a Comment