யோசேப்பு (ஆங்கில மொழி: Joseph; எபிரேயம்: יוֹסֵף, ஒலிப்பு: Yôsēp̄; "யாவே சேர்த்துத் தருவாராக"; அரபு மொழி: يوسف, Yūsuf ) என்பவர் எபிரேய விவிலியத்திலும் திருக்குர்ஆனிலும் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நபராவார். ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுவின் வழிமரபினர்கள் கானான் நாட்டிலிருந்து வெளியேறி எகிப்தில் குடிபுகும் நிகழ்வு இவர் எகிப்தில் ஆளுநராக இருந்த போது நிகழ்ந்தது. பின்நாட்களின் இஸ்ரயேலர் எகிப்தில் அடிமைப்பட இது வழிவகுத்தது.
விவிலியத்தின் தொடக்க நூலின் படி யாக்கோபுவின் 12 மகன்களில் யோசேப்பு 11ஆம் மகன் ஆவார். ராகேலின் முதல் மகனும் ஆவார். இவரின் தந்தை தன் மற்ற புதல்வரிலும் இவரை அதிகம் அன்பு செய்ததால், அவர்கள் இவரின் மீது பொறாமைப்பட்டு இவரை அடிமையாக விற்றனர். ஆனாலும் இவர் படிப்படியாக எகிப்தில் பாரோவுக்கு அடுத்த நிலைக்கு உயர்ந்தார். உலகெங்கும் கொடிய பஞ்சம் வந்த போது இவர் எகிப்து நாட்டில் ஆளுநராக இருந்தார். அப்போது எகிப்து நாட்டின் மிகவும் வளமான இராம்சேசு நிலப்பகுதியை இவர் பாரோவின் அனுமதியோடு தன் சகோதரர்களுக்கு உரிமையாகக் கொடுத்து, அங்கு அவர்களைக் குடியேற்றினார்.
No comments:
Post a Comment