அன்னை மாமரித்தாயை மகிழ்விக்கும் மந்திரம்
ஒருநாள், புனித மெக்டில்டே செபித்துக்கொண்டிருந்த வேளையில், பரிசுத்த கன்னி மாமரியின் மேல் தான் கொண்டிருந்த அன்பினை, முன்பை விட அதிகமாக வேறு எந்த வகையில் வெளிப்படுத்தலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த பொழுது, பேரானந்தத்தில் மூழ்கினார்.
நமதாண்டவள், தனது மார்பினில் ‘அருள் நிறைந்தவளே வாழ்க’ என்ற தேவதூதரின் வாழ்த்தொலியை, தங்க எழுத்துக்களால் பொறித்த வண்ணம் புனிதைக்குத் தோன்றி, ”என் மகளே, மிகவும் பரிசுத்த தமத்திருத்துவம் எனக்களித்த வாழ்த்தொலியை கூறுவதைக் காட்டிலும் மேலாக எதனைக் கொண்டும் என்னை மகிழ்விக்க முடியாது என்பதனை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதன் வாயிலாகவே நான் இறைவனின் தாய் என்ற மேன்மை நிலைக்கு உயர்த்தப்பட்டேன்” என்று கூறினார்கள்.
மேலும்,
“ஆவே(வாழ்க) என்ற வார்த்தை, கடவுள் படைத்த ஆதிப்பெண் ஏவாளைக் குறிப்பதாகும். இந்த வார்த்தையின் வாயிலாக, தந்தையாம் கடவுள் தனது முடிவில்லா வல்லமையினால், முதல் பெண்ணாம் ஏவாளின் கீழ்படியாமையால் மனுக்குலம் பெற்றுக்கொண்ட அனைத்து பாவங்களில் இருந்தும், அவற்றின் ஆதிக்கத்தில் இருந்தும் என்னை பத்திரமாக பாதுகாத்தார் என்று உணர்ந்து கொள்கிறேன்.”
“மரியாள் என்ற பெயரின் பொருள் ’ஒளியின் ஆண்டவள்’, தந்தையாம் கடவுள், பரலோகத்தையும் பூலோகத்தையும் ஒளிர்விக்க, ஒளியால் நிரப்ப, என்னை சுடர் விட்டு ஒளிரும் விண்மீனைப் போன்று, ஞானத்திலும் ஒளியிலும் நிரப்பியுள்ளார் என்பதனைக் காட்டுகின்றது.”
“ ’அருள் நிறைந்தவள்’ என்ற வார்த்தையானது, எவ்வாறு திவ்ய இஸ்பிரித்து சாந்து என் மேல் எண்ணிலடங்கா அருள் வரங்களைப் பொழிந்துள்ளார் என்பதனையும், என்னை நோக்கி பக்தியுடன் தியானித்து, என்னிடம் உதவி வேண்டும் அன்பர்களுக்கு, அந்த அருள் வரங்களைப் அபரிமிதமாக நான் அளிக்கமுடியும் என்பதனை நினைவுபடுத்துகின்றது.”
“மக்கள் ‘ஆண்டவர் உம்முடனே’ என்று கூறும்பொழுது, நித்திய வார்த்தையானவர் என்னுடைய கருவில் மனுவுரு எடுத்த பொழுது, நான் அடைந்த வார்த்தைகளால் விவரிக்கமுடியாத பேரானந்தத்தை எனக்கு மீண்டும் மீண்டும் அளிக்கின்றனர்.”
“ ‘பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே’ என்று நீங்கள் செபிக்கும் பொழுது, என்னை படைப்புக்கள் அனைத்திலும் உயர்ந்த பேற்றினை அளித்து இத்தகைய பேருவகை அடையச் செய்த தந்தையாம் கடவுளின் இரக்கத்திற்காக அவரைப் புகழ்ந்து பாடுகின்றேன்.”
“ ‘உமது திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே’ என்று நீங்கள் செபிக்கும் பொழுது, விண்ணவர் அனைவரும் என்னோடு இணைந்து, எனது மகன் சேசுகிறிஸ்து மனுக்குலத்தை மீட்டதால் ஆராதிக்கப்படுவதையும், மகிமைப் படுத்தப்படுவதையும் கண்டு அக்களிப்படைகின்றனர்.”
என்று கூறினார்கள்.
*சிந்தனை*
“சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே!!! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்”
“ ‘இதோ என் உடல், இதோ என் இரத்தம்’ என்று குருக்கள் திருப்பலியில் கூறுகின்ற வசீகர வார்த்தைகளை முழு உரிமையோடு கூற அன்னை மாமரி ஒருவருக்கே உரிமையுண்டு, ஏனெனில் அன்னை மாமரி தன் இரத்தத்திலிருந்தும், உடலிலிருந்தும், திவ்ய இஸ்பிரித்து சாந்துவின் துணையோடு தேவ சுதனைப் பெற்ற தாய் என்பதால் தான்’ என்று புனித அகுஸ்தினார் கூறுகின்றார்.
கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே, அன்னை மாமரி இறைவனின் தாய் என்று கிருஸ்தவர்கள் ஏற்று வாழ்ந்து வந்தனர். திருச்சபையின் முதுபெரும் தந்தையரில் ஒருவரான ஆரிஜென் (origen) என்பவர்தான் நமதன்னைக்கு இந்த புகழ் மாலையைச் சூட்டினார்.
ஆனால் 5 ஆம் நூற்றாண்டில் ஆரியுஸ் மற்றும் நேஸ்தொரியுஸ் போன்றவர்கள் மரியாள் இறைவனின் தாய் அல்ல என்று தப்பறைகளைப் போதித்தனர். இதனை திருத்தந்தை செலேஸ்டின் அவர்களின் பிரதிநிதியான புனித சிரில் அவர்களின் தலைமையில் 431 ஆம் ஆண்டு கூடிய எபேசு பொதுச்சங்கம் மிகவும் உறுதியாக மறுத்துரைத்து,” அர்ச் மரியாள் மெய்யாகவே இறைவனின் தாய்” என்ற சத்தியத்தைப் பிரகடனப் படுத்தியது.
இறைவனே தனது தூதர் வாயிலாக,” இஸ்பிரித்து சாந்து உமது மேல் எழுந்தருளி வருவார்; உன்னதருடைய வல்லபமானது உமக்கு நிழலிடும், ஆதலால் உம்மிடம் பிறக்கும் பரிசுத்தர் தேவசுதன் எனப்படுவார்” (லுக். 1:35) இந்த சத்தியத்தை வெளிப்படுத்தினார். அது மட்டுமின்றி, எலிசபெத்தம்மாள் இஸ்பிரித்து சாந்துவினால் நிரப்பப்பட்டு ”என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் எழுந்தருளிவர எனக்கு கிடைத்ததெப்படி”(லூக். 1:43) என்று இந்த தேவரகசியத்தை உறுதிபடுத்துகின்றார்.
தேவசுதனாகிய சேசு கிறிஸ்து ஆள் ஒருவரே ஆனால் தேவ சுபாவம் மற்றும் மனித சுபாவம் என்னும் இருவகை சுபாவங்களை கொண்டிருந்தார். தந்தையாகிய இறைவனும், இஸ்பிரித்து சாந்துவும் உறுதிபடுத்திய தேவரகசியத்தினை நாம் மறுக்கலாமோ? தேவசுதனைப் பெற்றேடுத்த அன்னை மாமரி “இறைவனின் தாய், தேவதாய், சர்வேசுரனுடைய மாதா என்பதில் நமக்கென்ன சந்தேகம்?
இயேசுவுக்கே புகழ்!!!மாமரித்தாயே வாழ்க!!!
ஒருநாள், புனித மெக்டில்டே செபித்துக்கொண்டிருந்த வேளையில், பரிசுத்த கன்னி மாமரியின் மேல் தான் கொண்டிருந்த அன்பினை, முன்பை விட அதிகமாக வேறு எந்த வகையில் வெளிப்படுத்தலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த பொழுது, பேரானந்தத்தில் மூழ்கினார்.
நமதாண்டவள், தனது மார்பினில் ‘அருள் நிறைந்தவளே வாழ்க’ என்ற தேவதூதரின் வாழ்த்தொலியை, தங்க எழுத்துக்களால் பொறித்த வண்ணம் புனிதைக்குத் தோன்றி, ”என் மகளே, மிகவும் பரிசுத்த தமத்திருத்துவம் எனக்களித்த வாழ்த்தொலியை கூறுவதைக் காட்டிலும் மேலாக எதனைக் கொண்டும் என்னை மகிழ்விக்க முடியாது என்பதனை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதன் வாயிலாகவே நான் இறைவனின் தாய் என்ற மேன்மை நிலைக்கு உயர்த்தப்பட்டேன்” என்று கூறினார்கள்.
மேலும்,
“ஆவே(வாழ்க) என்ற வார்த்தை, கடவுள் படைத்த ஆதிப்பெண் ஏவாளைக் குறிப்பதாகும். இந்த வார்த்தையின் வாயிலாக, தந்தையாம் கடவுள் தனது முடிவில்லா வல்லமையினால், முதல் பெண்ணாம் ஏவாளின் கீழ்படியாமையால் மனுக்குலம் பெற்றுக்கொண்ட அனைத்து பாவங்களில் இருந்தும், அவற்றின் ஆதிக்கத்தில் இருந்தும் என்னை பத்திரமாக பாதுகாத்தார் என்று உணர்ந்து கொள்கிறேன்.”
“மரியாள் என்ற பெயரின் பொருள் ’ஒளியின் ஆண்டவள்’, தந்தையாம் கடவுள், பரலோகத்தையும் பூலோகத்தையும் ஒளிர்விக்க, ஒளியால் நிரப்ப, என்னை சுடர் விட்டு ஒளிரும் விண்மீனைப் போன்று, ஞானத்திலும் ஒளியிலும் நிரப்பியுள்ளார் என்பதனைக் காட்டுகின்றது.”
“ ’அருள் நிறைந்தவள்’ என்ற வார்த்தையானது, எவ்வாறு திவ்ய இஸ்பிரித்து சாந்து என் மேல் எண்ணிலடங்கா அருள் வரங்களைப் பொழிந்துள்ளார் என்பதனையும், என்னை நோக்கி பக்தியுடன் தியானித்து, என்னிடம் உதவி வேண்டும் அன்பர்களுக்கு, அந்த அருள் வரங்களைப் அபரிமிதமாக நான் அளிக்கமுடியும் என்பதனை நினைவுபடுத்துகின்றது.”
“மக்கள் ‘ஆண்டவர் உம்முடனே’ என்று கூறும்பொழுது, நித்திய வார்த்தையானவர் என்னுடைய கருவில் மனுவுரு எடுத்த பொழுது, நான் அடைந்த வார்த்தைகளால் விவரிக்கமுடியாத பேரானந்தத்தை எனக்கு மீண்டும் மீண்டும் அளிக்கின்றனர்.”
“ ‘பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே’ என்று நீங்கள் செபிக்கும் பொழுது, என்னை படைப்புக்கள் அனைத்திலும் உயர்ந்த பேற்றினை அளித்து இத்தகைய பேருவகை அடையச் செய்த தந்தையாம் கடவுளின் இரக்கத்திற்காக அவரைப் புகழ்ந்து பாடுகின்றேன்.”
“ ‘உமது திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே’ என்று நீங்கள் செபிக்கும் பொழுது, விண்ணவர் அனைவரும் என்னோடு இணைந்து, எனது மகன் சேசுகிறிஸ்து மனுக்குலத்தை மீட்டதால் ஆராதிக்கப்படுவதையும், மகிமைப் படுத்தப்படுவதையும் கண்டு அக்களிப்படைகின்றனர்.”
என்று கூறினார்கள்.
*சிந்தனை*
“சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே!!! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்”
“ ‘இதோ என் உடல், இதோ என் இரத்தம்’ என்று குருக்கள் திருப்பலியில் கூறுகின்ற வசீகர வார்த்தைகளை முழு உரிமையோடு கூற அன்னை மாமரி ஒருவருக்கே உரிமையுண்டு, ஏனெனில் அன்னை மாமரி தன் இரத்தத்திலிருந்தும், உடலிலிருந்தும், திவ்ய இஸ்பிரித்து சாந்துவின் துணையோடு தேவ சுதனைப் பெற்ற தாய் என்பதால் தான்’ என்று புனித அகுஸ்தினார் கூறுகின்றார்.
கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே, அன்னை மாமரி இறைவனின் தாய் என்று கிருஸ்தவர்கள் ஏற்று வாழ்ந்து வந்தனர். திருச்சபையின் முதுபெரும் தந்தையரில் ஒருவரான ஆரிஜென் (origen) என்பவர்தான் நமதன்னைக்கு இந்த புகழ் மாலையைச் சூட்டினார்.
ஆனால் 5 ஆம் நூற்றாண்டில் ஆரியுஸ் மற்றும் நேஸ்தொரியுஸ் போன்றவர்கள் மரியாள் இறைவனின் தாய் அல்ல என்று தப்பறைகளைப் போதித்தனர். இதனை திருத்தந்தை செலேஸ்டின் அவர்களின் பிரதிநிதியான புனித சிரில் அவர்களின் தலைமையில் 431 ஆம் ஆண்டு கூடிய எபேசு பொதுச்சங்கம் மிகவும் உறுதியாக மறுத்துரைத்து,” அர்ச் மரியாள் மெய்யாகவே இறைவனின் தாய்” என்ற சத்தியத்தைப் பிரகடனப் படுத்தியது.
இறைவனே தனது தூதர் வாயிலாக,” இஸ்பிரித்து சாந்து உமது மேல் எழுந்தருளி வருவார்; உன்னதருடைய வல்லபமானது உமக்கு நிழலிடும், ஆதலால் உம்மிடம் பிறக்கும் பரிசுத்தர் தேவசுதன் எனப்படுவார்” (லுக். 1:35) இந்த சத்தியத்தை வெளிப்படுத்தினார். அது மட்டுமின்றி, எலிசபெத்தம்மாள் இஸ்பிரித்து சாந்துவினால் நிரப்பப்பட்டு ”என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் எழுந்தருளிவர எனக்கு கிடைத்ததெப்படி”(லூக். 1:43) என்று இந்த தேவரகசியத்தை உறுதிபடுத்துகின்றார்.
தேவசுதனாகிய சேசு கிறிஸ்து ஆள் ஒருவரே ஆனால் தேவ சுபாவம் மற்றும் மனித சுபாவம் என்னும் இருவகை சுபாவங்களை கொண்டிருந்தார். தந்தையாகிய இறைவனும், இஸ்பிரித்து சாந்துவும் உறுதிபடுத்திய தேவரகசியத்தினை நாம் மறுக்கலாமோ? தேவசுதனைப் பெற்றேடுத்த அன்னை மாமரி “இறைவனின் தாய், தேவதாய், சர்வேசுரனுடைய மாதா என்பதில் நமக்கென்ன சந்தேகம்?
இயேசுவுக்கே புகழ்!!!மாமரித்தாயே வாழ்க!!!
No comments:
Post a Comment