அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, August 17, 2017

இறை அழைத்தல் பெருக வேண்டுதல்

இறை அழைத்தல் பெருக வேண்டுதல்
 
இயேசுவே ! ஆன்மாக்களின் தெய்வீக ஆயரே !
அன்று மீன் பிடிப்போரை, மனிதரைப் பிடிப்போராக்கிய ஆண்டவரே !
இன்று ஆர்வமும் தாராளமனமும் கொண்டுள்ள இளைஞரை
உம்மைப் பின்பற்றுபவர்களாகவும், உம் திருப்பணியாளர்களாகவும் ஆக்கியருளும்.
அனைத்துலக மக்களின்மீட்புக்காக உமக்கிருக்கும் தாகத்தில்
அவர்களும் பங்குபெறச் செய்தருளும்.
இந்த மீட்புக்காகவே ஒவ்வொரு நாளும் பலி மேடையில்
திருப்பலியைநீர் புதுப்பித்து வருகின்றீர்.

இயேசுவே ! எங்கள் ஆண்டவரே !
எங்களுக்காகப் பரிந்துரைக்க, எங்களிடம் எப்பொழுதும் வாழ்கின்றீர்.
 உண்மையின் ஒளிக்காக, அன்பின்அனலுக்காக ஏங்கும் அனைத்து
 மக்களின் மீதும் உமது மாட்சியின் எல்லையை விரிவடையச் செய்யும்.
இளைஞர் பலர் உமது அழைப்பை ஏற்றுஉமது திருப்பணியைத் தொடர்ந்து புரியவும்
 உமது மறையுடலாகிய திருச்சபைக்கு அணிகலனாகத் திகழவும்,
உலகின் உப்பாகவும், ஒளியாகவும்விளங்கவும் அருள் செய்யும்.

ஆண்டவரே ! உமது அன்பின் அழைப்பைத் தூய உள்ளமும்,
தாராளமனதுள்ள பெண்கள் பலருக்குத் தந்தருளும்.
நன்னெறியில் வளர அவர்கள்கற்றுக் கொள்வார்களாக.
அயலாரின் சேவைக்காகவும், அவர்கள் தங்களை அர்ப்பணம் செய்ய அருள்புரியும் ,
ஆண்டவரே. -ஆமென்.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment