அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, August 17, 2017

நலம் தரும் பேச்சு

நலம் தரும் பேச்சு

திருப்பாடல்கள் 141:3
ஆண்டவரே! என் நாவுக்குக் காவல் வைத்தருளும்; என் இதழ்களின் வாயிலில் காவலாளியை வைத்தருளும்.

நாம் சைக்கிள், கார் ,பைக் ஓட்ட  கற்றுக் கொள்கிறோம் எதற்கு? நாம் நன்றாக ஓட்ட பழகினால் தான் விபத்து இல்லாமல்,சரியான இடத்துக்கு போக பயணம் செய்ய முடியும்
அதே நாம் நன்றாக பேச கற்றுக் கொள்ள வேண்டும் .வேதம் சொல்கிறது சொற்களின் மிகுதியால் பாவம் இல்லாமல் போகாது ,நாவை காத்துக் கொள்கிறவன் தனது ஆன்மாவை காத்துக் கொள்கிறான் என்கிறது .நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கடவுள் கவனித்து வருகிறார் .

சிலரின் பேச்சில் விஷத்தன்மை உள்ளது .அதில் கோபம் ,எரிச்சல், கோள் சொல்தல், கெடும்பு, பொய் போன்றவை வெளிப்பட்டு பிறரை காய படுத்தும் விசதன்மை கொண்டது.சிலரின் பேச்சால் குடும்பமே இரண்டாக பிரிந்து பிள்ளைகள் நடுத் தெருவில் நிற்க்கும். எப்போ பார்த்தாலும் விவாதம் பண்ணுவது ,வாய் பேச்சால் சண்டை இழுப்பது இதெல்லாம் நல்ல ஒரு கிறிஸ்தவ வாழ்வுக்கு அடையாளம் அல்ல.

நமது பேச்சில் பரிசுத்தம் இருக்கனும் .பிறரின் வாழ்வைக் கட்டி எழுப்புவது போல இருக்க வேண்டும், நமக்கு நன்மை பயக்கும் வார்த்தைகளை பேச வேண்டும் நம் பிள்ளைகளுக்கு முன் மாதிரி வாழ்வு வாழ பேசக் கற்றுக் கொடுக்கணும்

திருப்பாடல்கள் 39:1
‘நான் என் நாவினால் பாவம் செய்யாதவண்ணம் என் நடைமுறைகளைக் காத்துக்கொள்வேன்; பொல்லார் என்முன் நிற்கும் வரையில், என் வாய்க்குப் பூட்டுப் போட்டுக் காத்துக் கொள்வேன்’ என்று சொன்னேன்.

சிலர் பேசுவதால் நமக்கு கோபம் மூளும் அப்போ நம் வாய்க்கு பூட்டு போட்டு காத்துக் கொள்ள வேண்டும் .நன்மை செய்து தீமையை அனுபவிக்கும் போது நம் ஆன்மாவை காத்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் நம் இருதயத்தின் நினைவே வாய் பேசும் .இரு குடும்பங்கள் சண்டை இடும்போது இரத்த உறவுகளை சபித்து பேசி துன்பங்களை பெருக்கிக் கொள்வர்

கலாத்தியர் 5:15,16
ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!எனவே நான் சொல்கிறேன்; தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்.

நாம் நலம் தரும் நல்ல வார்த்தைகளை பேச தூய ஆவியானவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் எப்படி பிறரிடம் பேச வேண்டும் என்று தூய ஆவியானவர் கற்றுத் தருவார் நமது ஆன்மாவுக்கும்,நாவுக்கும் காவல் செயவார் .நாம் ஜெபிக்கும் போது இதை சொல்லி ஜெபிக்க வேண்டும் ஆமென்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment