அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, August 25, 2017

இலக்கை நோக்கி ஓடு

 ⁠⁠⁠🏇🏇🏇🏇🏇இலக்கை நோக்கி ஓடு🏇🏇🏇🏇🏇🏇

கிறிஸ்தவ வாழ்வு என்பது ஓட்டப்பந்தயத்தை போன்றது .நம் ஊரில் ஓட்டப்பந்தயம் நடக்கும் போது முதலாவது, இரண்டாவது, மூன்றாவது வருபவர்களுக்கு மட்டுமே பரிசை பெறுவர் .ஆனால் இந்த ஆவிக்குரிய ஓட்டத்தில் யார் யார் கடைசி வரை ஓடி முடிக்கிறார்களோ அனைவருக்கும் பரிசு உண்டு .பரிசை தருபவர் இயேசு கிறிஸ்து, பரிசுப் பொருள் நித்திய கிரீடம் .

இப் பரிசை பெற எப்படி வேண்டுமானாலும் ஓடி பெற முடியாது உலகத்தை மறந்து இயேசுவை நோக்கி ஓடனும், உடலை ஒடுக்கி ஓடனும், பரிசுத்த உள்ளத்தோடு ஓடனும், வெற்றி பெறுவோம் என்கிற இலக்கோடு ஓடனும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கனும்

ஒரு இரவு இருவர் குடித்து விட்டு படகில் ஏறி மறு கரைக்கு செல்ல வேகமாக தண்டு வலித்தனர் சீக்கிரமாய் அடுத்த கரைக்கு செல்ல .இரவெல்லாம் வேகமாக தண்டு வலித்து  மறு கரைக்கு செல்ல முடியவில்லை .ஏனெனில் விடிந்த பின் தான் தெரியும் படகை கரையோடு சேர்த்து கட்டியிருந்த கயிறை அவிழ்க்க வில்லை வீணாய் போனது அவர்களின் பலன்

நாம் வேகமாக ஓடி பரிசு பெற வேண்டுமா நம்மில் இருக்கும் பாவகயிறை உபவாசம் இருந்து அறுக்கனும், கெட்ட பழக்கங்களை இயேசுவின் நாமத்தில் விரட்டி வாழணும்

1 கொரிந்தியர் 9:24
பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே, பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள்.

1 கொரிந்தியர் 9:26
நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன்.

No comments:

Post a Comment