அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, August 15, 2017

மாதாவின் துணை, பாதுகாப்பு, பராமரிப்பு, வழிகாட்டுதல் தேவை..

" நாம் பசாசையும் , அவன் கிரியைகளையும விட்டுவிட்டால் நமதாண்டவருக்கே முழுச்சொந்தமாக இருக்கிறோம். அவர் நம் கடவுளும் மூத்த சகோதரருமாய் இருக்கிறார். நம் இரட்சகரும் நம் நித்திய வெகுமானமாய் இருக்கிறார்.

இவைகளையெல்லாம் நாம் சிந்தித்து உணர்வதோடு சேசு கிறிஸ்தும் , கன்னி மாமரி அன்னையும் எப்படி அன்பினால் ஒரே பந்தனமாக இருக்கிறார்கள் என்னும் பரம இரகசியத்தையும் எண்ணிபபார்க்க வேண்டும்.

சேசுநாதர் மாதாவுடன் கொண்டுள்ள இனைபிரியாத தொடர்பு -  அவருடைய மனித அவதாரத்திலும், பாலத்துவத்திலும், நவரத்தின மறைந்த வாழ்விலும, இறுதியாய் கல்வாரிப்பலியிலும் இருவருக்கும் இருந்த ஏக பந்தமான உறவைச் சிந்தித்து வியந்து உணர்ந்து கொள்ள முயல வேண்டும்.

- புனித லூயிஸ் மரிய மோன்போர்ட்

நம்  இயேசு சுவாமியை முழுமையாக அன்பு செய்ய வேண்டுமானால் நாம் மாமரித்தாயின் பிள்ளைகளாக இருக்க வேண்டும்..அப்போதுதான் நம்மில் இயேசு சுவாமியானவர் வளர்வார்..நாம் அவரைப்போல் அவராக மாற முடியும்...

அதற்கு மாதாவின் துணை, பாதுகாப்பு, பராமரிப்பு, வழிகாட்டுதல் தேவை..

இந்த தப்பறைகள் நிறைந்த காலத்தில் மாதாவின் பிள்ளைகளாக இருப்பதே நமக்குப் பாதுகாப்பு...

ஆகவே நாம் இயேசு சுவாமயாக மாற வாழ  நம் தேவ தாயிடம் நம்மையே ஒப்புக்கொடுப்போம்... நம்மையே அர்ப்பணிப்போம்...

-ஆமென்...

இயேசுவக்கே புகழ் ! மரியாயே வாழ்க !⁠⁠⁠⁠

No comments:

Post a Comment