அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, August 15, 2017

நீர் இருக்க இவை என்ன செய்யும் ?

நீர் இருக்க இவை என்ன செய்யும் ?

சீடரை அக்கரைக்கு போக சொல்லி இக்கரையில் தனியே செபிக்க சென்றாரே

படகும், மனங்களைப் போல் காற்றினால்  அலைக்கழிக்கப் பட்டதே

வல்ல தேவன் வலிமைமிகு கடலில் தோழரை நோக்கி நடந்தாரே

ஐயோ எனத் தடுமாறிய சீடரும், இயேசுவைக் கண்டு தடம் மாறி ஓலமிட்டாரே

 துணிவு பெறுவீர்,என்னைக் கண்டு கலங்காதீர் என இயேசுவும் என உரைத்தாரே

அன்பு சீடர் பேதுருவும் அவ்வண்ணமே நடக்க விரும்பினாரே

விருப்பமறிந்த இறைவனும் வா என்றே அழைத்தாரே

துள்ளிக் குதித்த தோழரும் கடலில் நடக்கத் துவங்கினாரே

குறை நம்பிக்கை மேலோங்கவே பயத்தில் தன்னைக் காப்பாற்ற சொல்லி கதறினாரே

இயேசுவும் உடனே கையை நீட்டி நம்பிக்கை குறைபாட்டை சாடினாரே

கடலும் காற்றும் அமைதியானதே
திகிலும் பயமும் மறைந்தே போனதே

படகிலிருந்தோர் உண்மையாகவே நீர் இறைமகன் என ஆர்ப்பரித்தாரே

கடுகளவு விசுவாசம் இருந்தாலே மாமலையும் நமக்கு வசப்படுமே

திடமான நம்பிக்கை நிறைந்தாலே திட்டமெல்லாம் தித்தித்திடுமே

இறைவன் நம்மோடு பயணித்தாலே இயங்கும் யாவும். இனிதாகுமே

மத்தேயு 14: 22-33

அன்புடன்
கஸ்மீர் ரோச்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment