அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, August 16, 2017

மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும்

மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும்
-----------------------------------

யோவான் : 20 : 23 - எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.

நாம் மற்றவர்களுடைய பாவங்களை அல்லது மற்றவர் நமக்கு கொடுத்த துன்பங்களை மன்னிக்க வேண்டும் என்று கர்த்தர் நமக்கு கட்டளை கொடுத்திருக்கிறார், மற்றவர்களுடைய பாவங்களை மண்ணியாதிருக்க நமக்கு அனுமதி இல்லை.

நாம் மன்னிக்காவிட்டால் என்ன நடக்கும் ?
--------------------------------------
இயேசு தன்னை பலியாக தந்து நமது திரளான பாவங்களை நமக்கு மன்னித்திருக்கிறார் எனவே நாமும் அதுபோல மற்றவர்களை அன்புசெய்து மன்னிக்க இயேசு நமக்கு கட்டளை கொடுத்திருக்கிறார். அவ்வாறு நாம் மன்னிக்காமல் கட்டளையை மீறினால் கர்த்தர் நமது மன்னிப்பை ரத்து செய்து நம்மை வதைப்பவர் கையில் ஒப்புக்கொடுப்பார் அது நமக்கு நோய்களையும், சமாதானமின்மை மனசோர்வு , மற்ற கஷ்டங்களையும் கொண்டுவரும்

மத்தேயு 18:23-35 வசனத்தை வாசியுங்கள்

மத்தேயு : 18 : 35 - நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

இயேசு இந்த வசனங்களில் பதினாயிரம் தாலந்து கடன்வாங்கியவரை ஆண்டவர் மன்னித்து அவர் கடனை தள்ளுபடி செய்கிறார் அந்த ஊழியர் தன்னிடம் நூறு பெள்ளிப்பணம் கடன்வாங்கின மற்றவரை மன்னிக்காது விடும்போது அவரது ஆண்டவன் அவரது மன்னிப்பை தடை செய்து அவரை வதைப்பவர் கையில் ஒப்புக்கொடுக்கிறார் இதன் மூலம் மண்ணியாமல் விடுவதால் நாம் எவ்வாறு பாதிக்கப்படுகிறோம் என்பதை இயேசு சொல்கிறார்

எனவே மற்றவர்களுடைய பாவங்களை மண்ணியாதிருக்க நமக்கு அனுமதி இல்லை அவ்வாறு நாம் செய்யும் போது இயேசுவின் கற்பனைகளை நாம் மீறுகின்றோம் இந்த மீறுதல் நமக்கு நோய் மற்றும் சிறையிருப்பை கொண்டுவருகிறது

நாம் செய்ய வேண்டியது என்ன
-----------------------------

1. மற்றவர்களை மண்ணியாத பாவங்களுக்காய் இயேசுவிடம் மன்னிப்பை வேண்டுவோம்

2. இயேசுவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நமக்கு விரோதமாக மற்றவர் செய்த அணைத்து காரியங்களையும் மன்னிப்போம்

3. நமக்கு எதிராக காரியம் செய்தவர்களுக்காக தேவனிடம் வேண்டி ஜெபிப்போம் அவர்களை ஆசிர்வதிப்போம் ,  அவர்களோடு ஒப்புரவாகுவோம்

மத்தேயு : 5 : 44 - நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.


இதன்மூலம் இயேசு நம்மை ஆசிர்வதித்து நமக்கு சமாதானமும், பூரண உடல்சுகத்தயும் தந்து ஆசீர்வதிப்பாராக!!எல்லா புகழும், மகிமையும்  இயேசுக்கே ஆமென் 🙏🏻⁠⁠⁠⁠

No comments:

Post a Comment