இயேசுவின் திரு இதயத்துக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்
இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும் நினைந்து நன்றியறிந்த பட்சத்தோடு உம் திருப்பாத்தில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து கிடக்கிறோம்
நேசமுள்ள இயேசுவே எங்கள் குடும்பத்தில் உள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். நீ எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உமது திரு இதய நிழலில் நாங்கள் இளைப்பாற கிருபை செய்தருளும்.
தவறி எங்களில் யாராவது உமது திரு இதயத்தை நோகச் செய்திருந்தால் அவர் குற்றத்துக்கு நாங்கள் நிந்தை பரிகாரம் செய்கிறோம் உமது திரு இதயத்தை பார்த்து எங்கள் வேண்டுதலை ஏற்றுக் கொண்டு அவரை மன்னித்தருளும்
மேலும் உலகில் உள்ள எல்லாக குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம் பலவீனர்களுக்குப் பலமும் விருத்தாபியர்களுக்கு ஊன்றுகோலும் விதவைகளுக்கு ஆதரவும் அனாதைப் பிள்ளைகளுக்குத் தஞ்சமுமாய் இருக்கத் தயைபுரியும் ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர்தாமே விழித்து காத்திருப்பீராக!
இரக்கமுள்ள இயேசுவின் திரு இதயமே! சிறுபிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. இந்ந விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம் அவர்களை ஆசீர்வதியும் அவர்களுடைய இதயத்தில் விசுவாசத்தையும் தெய்வபயத்தையும் வளரச் செய்யும் வாழ்நாளில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண வேளையில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம்
திவ்விய இயேசுவே! முறைமுறையாய் உமது திரு ஸ்நேகத்தில் ஜீவித்து மரித்து முடிவில்லாக் காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும் சுவாமி
ஆமென்
இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும் நினைந்து நன்றியறிந்த பட்சத்தோடு உம் திருப்பாத்தில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து கிடக்கிறோம்
நேசமுள்ள இயேசுவே எங்கள் குடும்பத்தில் உள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். நீ எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உமது திரு இதய நிழலில் நாங்கள் இளைப்பாற கிருபை செய்தருளும்.
தவறி எங்களில் யாராவது உமது திரு இதயத்தை நோகச் செய்திருந்தால் அவர் குற்றத்துக்கு நாங்கள் நிந்தை பரிகாரம் செய்கிறோம் உமது திரு இதயத்தை பார்த்து எங்கள் வேண்டுதலை ஏற்றுக் கொண்டு அவரை மன்னித்தருளும்
மேலும் உலகில் உள்ள எல்லாக குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம் பலவீனர்களுக்குப் பலமும் விருத்தாபியர்களுக்கு ஊன்றுகோலும் விதவைகளுக்கு ஆதரவும் அனாதைப் பிள்ளைகளுக்குத் தஞ்சமுமாய் இருக்கத் தயைபுரியும் ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர்தாமே விழித்து காத்திருப்பீராக!
இரக்கமுள்ள இயேசுவின் திரு இதயமே! சிறுபிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. இந்ந விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம் அவர்களை ஆசீர்வதியும் அவர்களுடைய இதயத்தில் விசுவாசத்தையும் தெய்வபயத்தையும் வளரச் செய்யும் வாழ்நாளில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண வேளையில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம்
திவ்விய இயேசுவே! முறைமுறையாய் உமது திரு ஸ்நேகத்தில் ஜீவித்து மரித்து முடிவில்லாக் காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும் சுவாமி
ஆமென்
No comments:
Post a Comment