அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, August 14, 2017

புனித லூர்து மாதா புகழ்மாலை!

புனித லூர்து மாதா புகழ்மாலை!

சுவாமி, கிருபையாயிரும்

கிறிஸ்துவே, கிருபையாயிரும்

சுவாமி, கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.

பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
திவ்விய இரட்சகரை எங்களுக்கு அளித்த அமலோற்பவ மாதாவே

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

தேவ கிருபையின் அதிசயத்துக்குரிய எத்தனமான அமலோற்பவ மாதாவே

லூர்து மலைக் கெபியில் தரிசனமான அமலோற்பவ மாதாவே

உலகத்தை வெறுத்தல் அவசியம் என்று காண்பிக்க ஏகாந்த ஸ்தலத்தில் தரிசனமான அமலோற்பவ மாதாவே

மோட்ச பிரதேசத்தின் மிகுதியைக் காண்பிக்க பூங்கதிர்களை அணிந்த திருமேனியுடன் தரிசனமான அமலோற்பவ மாதாவே

ஞான சௌந்தரியத்துக்கு மிஞ்சின சௌந்தர்யம் இல்லையென்று காண்பிக்க , அழகின் அவதாரம் போல தரிசனமான அமலோற்பவ மாதாவே

ஆத்துமா சுத்தத்திற்கு மேலான சுத்தம் இல்லையென்று காண்பிக்க , அந்த வெண்ணாடையை உடுத்தியவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே

கற்பென்பது வானோர்க்கு அடுத்த புண்ணியம் என்று காண்பிக்க மேகமற்ற வானம் போன்ற நீலக்கச்சையைக் கட்டிக் கொண்டவளாய்த்  தரிசனமான அமலோற்பவ மாதாவே

கற்புக்குக் காவல் அடக்க ஒடுக்கம் என்று காண்பிக்க, நெடுமுக்காட்டைப் போர்த்திக் கொண்டவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே

நாங்கள் நாடவேண்டிய கதி மோட்சம் என்று காண்பிக்க வானத்தை அண்ணார்ந்தவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே

ஐம்பத்து மூன்று மணி செபத்தை அடிக்கடிச் சொல்லுதல் உத்தம பக்திக் கிருத்தியம் என்று காண்பிக்க ஜெபமாலையை திருக்கரத்தில் ஏந்தியவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே

கல்லும் முள்ளும் நிறைந்த வனமாகிய இந்த உலகத்தில் தேவரீரை எங்களுக்குத் துணை என்று காண்பிக்க கற்பாறையில் படர்ந்த முள் ரோஜாச் செடியை காலாலே மிதித்தவளாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே

தாழ்ச்சியும் தரித்திரமும் உள்ளவர்கள் பேரில் தேவரீர் மிகுந்த பட்சமாயிருக்கிறார் என்று காண்பிக்க ஒரு ஏழையான சிறு பெண்ணுக்கு தரிசனமான அமலோற்பவ மாதாவே

தேவரீரை நேசித்து நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு அசாத்தியமானது ஒன்றுமில்லை என்று காண்பிக்க , அந்த சிறு பெண் மூலமாக ஒரு நீரூற்றை பிறப்பித்தருளிய அமலோற்பவ மாதாவே

தேவரீருடைய வல்லமையும் , கிருபையும் அளவிட்டுச் சொல்ல முடியாது என்று காண்பிக்க அந்த நீரூற்றைத் தாராளமாய்ச் சுரந்து வழிந்தோடவும் கணக்கற்ற வியாதியஸ்தருக்கு ஆரோக்கியத்தை அளிக்கவும் செய்தருளிய அமலோற்பவ மாதாவே

பாவிகளை நன்னெறியில் திருப்புகின்ற லூர்து நாயகியே

நீதிமான்களை ஸ்திரப்படுத்துகின்ற லூர்து நாயகியே

இறந்தவருக்கு உயிரைக் கொடுக்கின்ற லூர்து மாதாவே

குருடர்களுக்குப் பார்வை அளிக்கிற லூர்து மாதாவே

செவிடருக்குச்  செவிப்புலனைத் தருகிற லூர்து நாயகியே

சப்பாணிகளை நடக்கச் செய்கிற லூர்து மாதாவே

நோயாளிகளைக் குணப்படுத்துகிற லூர்து மாதாவே

கஸ்தியாயிருக்கிறவர்களைத் தேற்றுகின்ற லூர்து நாயகியே

சகல அவசரங்களிலும் உதவியாயிருக்கிற லூர்து நாயகியே

மேன்மேலும் மன்றாடப்படுகிற லூர்து நாயகியே

லூர்தென்னும் திருத்தலத்திற்கு கணக்கற்ற சனங்களை வரச்செய்கிற லூர்து நாயகியே

எங்கள் தாயாகிய திருச்சபைக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மாதாவே

புனித பாப்பானவருக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து  மாதாவே

பல தண்டனைகளுக்குப் பாத்திரமாயிருக்கிற எங்களுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மலை மாதாவே

எங்கள் உற்றார் , பெற்றோர் , புத்திரர் , மித்திரருக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மாதாவே

எங்கள் விரோதிகளுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மலை மாதாவே

சகல பாவிகள் , பதிதர் அஞ்ஞானிகளுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மாதாவே

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,

- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,

- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,

- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

செபிப்போமாக :

சர்வேசுரா சுவாமி ! முழு மனதோடு தொண்டனாக விழுந்து கிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் கன்னியாயிருக்கிற அமலோற்பவ லூர்து நாயகியுடைய வேண்டுதலினாலே நாங்கள் பாவ வழியை விட்டு புண்ணிய நெறியை பற்றிக்கொள்ளவும் , மரணத்தை தேவ இஷ்ட பிரசாதத்தோடு அடையவும் எங்கள் ஆண்டவராகிய இயேசு நாதருடைய திரு முகத்தை நோக்கி தயை செய்தருளும் ஆமென்

புனித லூர்து அன்னையிடம் மன்றாட்டு.

மகிமை நிறை லூர்து அன்னையே , அமல உற்பவியே , இரக்கத்தின் தாயே , உடல் நலமற்றோருக்கு ஆரோக்கியமே , பாவிகளின் அடைக்கலமே , துயருருவோரின் ஆறுதலே , உம்மைத் தேடி வந்தேன் என்மேல் மனமிரங்கும் , என் தேவைகள், தொல்லைகள் , துன்பங்கள் எல்லாம் உமக்குத் தெரியும் . உம்மிடம் நம்பிக்கையோடு வந்தவர்கள் உடல் உள்ள நலம் பெற்றுள்ளனர் . இந்த நம்பிக்கையோடு தாயன்போடு கூடிய உமது பரிந்துரைக்காக நான் வந்துள்ளேன் . என் விண்ணப்பங்களைக் கேட்டு உம் திருமகனிடமிருந்து அவற்றை எனக்குப் பெற்றுத் தந்தருளும் . உமது திருப் பண்புகளை நான் பின்பற்றவும் , உம்மோடு ஒரு நாள் மகிமையில் பங்கேற்கவும் எனக்கு அருளைப் பெற்றுத் தாரும்.
ஆமென்.

🙋‍♂ மூவொரு இறைவனுக்கே மகிமை! மரியே வாழ்க!! 🙋⁠⁠⁠⁠

No comments:

Post a Comment