ஆண்டவராம் இயேசுகிறிஸ்துவின் பன்னிரு அப்போஸ்தலர்களில் ஒருவாராயிருக்க பேறுபெற்ற புனித தோமையாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உலக மீட்பராம் இயேசு கிறிஸ்துவை ஆவலோடும் பிரமாணிக்கத்தோடும் பின்பற்றிய புனித தோமையாரே...
வாழ்வளிக்கும் நற்செய்தியை பலநாட்டு மக்களுக்கு சிறப்பாக எங்கள் இந்திய நாட்டிற்கு அறிவிக்க வந்த புனித தோமையாரே...
ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவே வாழ்வும் வழியும் வாய்மையும் என அறிவிக்கச் செய்திட்ட புனித தோமையாரே...
ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடு சென்று உயிர்துறக்க உடன் அப்போஸ்தலர்களுக்கு ஊக்கமூட்டிய புனித தோமையாரே...
உயிர்த்த ஆண்டவரை தரிசித்து என் ஆண்டவரே என் கடவுளே என்று அவரிடம் சரணடைந்த புனித தோமையாரே...
நாங்கள் இயேசுகிறிஸ்துவின் உத்தம சீடர்களாய் என்றும் வாழ்ந்திட அருள்பெற்றுத் தரவேண்டுமென்று புனித தோமையாரே...
நாங்கள் இயேசு கிறிஸ்துவை ஒருபோதும் மறுதலியாமலிருக்க வரம் பெற்றுத்தரவேண்டுமென்று புனித தோமையாரே...
நாங்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் சொல்லாலும் செயலாலும் இயேசுவின் சாட்சிகளாய் விளங்கிட வரம் பெற்றுத்தரவேண்டுமென்று புனித தோமையாரே...
நாங்கள் இயேசுகிறிஸ்து ஒருவரே எங்கள் வாழ்வு வழி வாய்மை என்பதை கண்டுணர்ந்து அதற்கேற்ப வாழ வரம் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று புனித தோமையாரே...
கிறிஸ்துவுக்காக எதையும் தாங்கும் தியாக உள்ளத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று புனித தோமையாரே...
உயிர்த்த ஆண்டவரே, எங்களுக்கு எல்லாம் என்று ஏற்றுக்கொண்டு அவரில் சரணடையும் வரத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்தருள வேண்டுமென்று புனித தோமையாரே...
மன்றாடுவோமாக.
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, எங்கள் பாதுகாவலராகிய அப்போஸ்தலரான புனித தோமையாரை பெருமையுடன் கொண்டாடும் நாங்கள், அவரது பாதுகாவலில் ஆறுதலும், வழிநடத்துதலில் ஆதரவும், போதனையில் ஆதாரமும் பெறுவோமாக. உம் திருமகன் இயேசு கிறிஸ்துவே ஆண்டவரும் இறைவனுமானவர் என்ற அவரது விசுவாச அறிக்கையை நாங்களும் ஏற்றுக்கொண்டு எங்கள் சொல்லாலும் செயலாலும், அதற்கு சான்று பகர அருள் புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய அதே கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.
மூவொரு இறைவனுக்கே மகிமை! மரியே வாழ்க!!
No comments:
Post a Comment