புது தம்பதியர் புனித பெரியநாயகி மாதாவுக்கு தங்களை ஒப்புக் கொடுக்கும் ஜெபம்.
எப்பொழுதும் கன்னிகையும் மாதாவுமாயிருக்கிற புனித மரியாயே! இதோ இன்றைக்கு எங்களுடைய இராக்கினியும் எங்களுடைய பாதுகாவலியும் எங்களுடைய சிபாரிசுக்காரியுமாய் உம்மைத் தெரிந்து கொள்கிறோம். உம்மை ஒரு போதும் நாங்கள் மறுதலிப்பதில்லையென்றும் உமக்குக் கஸ்தி கொடுக்கக் கூடிய வார்த்தை ஒன்றும் சொல்லுவதில்லை என்றும் அத்தகைய கிரிகை ஒன்றும் செய்வதில்லை என்றும் உம்முடைய மகிமைக்குப் பங்கம் எவராலும் வருவிக்க விடமாட்டேன் என்றும் உறுதியான தீர்மானம் செய்கிறோம். எங்களுடைய அந்தஸ்தின் கற்பை நாங்கள் காப்பாற்றுவதிலும் எங்கள் கடமைகளை நிறைவேற்றுவதிலும் உமது வல்லப முள்ள சிபாரிசினால் பிரமாணிக்கம் உள்ளவர்களாய் இருப்போம் என்று வாக்களிக்கிறோம்.
புனித பெரிய நாயகியே, உமது சிபாரிசினாலே சர்வேசுரன் எங்களுக்குக் கொடுத்து அருளும் பிள்ளைகளை நாங்கள் தேவ பயபக்தியில் வளர்ப்போம் என்று உமக்கு முன்பாக உறுதியான தீர்மானம் செய்கிறோம்.
நாங்கள் உமது ஊழியத்தில் எப்பொழுதும் நிலைத்திருக்கும் படியாக எங்கள் சகல கிரிகைகளிலும் உதவி புரிய வேண்டுமென்றும் விசேஷமாய் எங்கள் மரண நேரத்தில் எங்களைக் கைவிடாதேயும் என்றும் உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென்.
எப்பொழுதும் கன்னிகையும் மாதாவுமாயிருக்கிற புனித மரியாயே! இதோ இன்றைக்கு எங்களுடைய இராக்கினியும் எங்களுடைய பாதுகாவலியும் எங்களுடைய சிபாரிசுக்காரியுமாய் உம்மைத் தெரிந்து கொள்கிறோம். உம்மை ஒரு போதும் நாங்கள் மறுதலிப்பதில்லையென்றும் உமக்குக் கஸ்தி கொடுக்கக் கூடிய வார்த்தை ஒன்றும் சொல்லுவதில்லை என்றும் அத்தகைய கிரிகை ஒன்றும் செய்வதில்லை என்றும் உம்முடைய மகிமைக்குப் பங்கம் எவராலும் வருவிக்க விடமாட்டேன் என்றும் உறுதியான தீர்மானம் செய்கிறோம். எங்களுடைய அந்தஸ்தின் கற்பை நாங்கள் காப்பாற்றுவதிலும் எங்கள் கடமைகளை நிறைவேற்றுவதிலும் உமது வல்லப முள்ள சிபாரிசினால் பிரமாணிக்கம் உள்ளவர்களாய் இருப்போம் என்று வாக்களிக்கிறோம்.
புனித பெரிய நாயகியே, உமது சிபாரிசினாலே சர்வேசுரன் எங்களுக்குக் கொடுத்து அருளும் பிள்ளைகளை நாங்கள் தேவ பயபக்தியில் வளர்ப்போம் என்று உமக்கு முன்பாக உறுதியான தீர்மானம் செய்கிறோம்.
நாங்கள் உமது ஊழியத்தில் எப்பொழுதும் நிலைத்திருக்கும் படியாக எங்கள் சகல கிரிகைகளிலும் உதவி புரிய வேண்டுமென்றும் விசேஷமாய் எங்கள் மரண நேரத்தில் எங்களைக் கைவிடாதேயும் என்றும் உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென்.
No comments:
Post a Comment