திருப்பலி கவிதை
வாழ்விற்கும் வழிபாட்டிற்கும்
சொல்லுக்கும் செயலுக்கும்
வித்தியாசங்கள் தோற்றுமளவிற்கு
விசித்திரமான வாழ்வை
பரந்த உலகில் பத்திரமாய் பேணும்
மாந்தர்களின் வாழ்வுதனை
அலசிப் பார்த்து அக்னியில்
அவலங்களை எரித்து ஆண்டவனின்
உன்னத படைப்பாய் உலகினில் வாழ
அழைப்பு விடுகிறது இன்றைய திருவழிபாடு!
சொந்தங்களை மதித்து
உறவுகளுக்கு மரியாதை அளித்து
உரிமைகளுக்காய் போராடி
அடுத்தவரின் நலனில் அக்கறை காட்டிய
ஆழமான சிந்தனைகள்
பரவலான பேச்சுகள்
உறுதியான செயல்பாடுகள்
உள்ளத்தினிலே தோன்றிய அன்புச்சாரல்கள்
மொத்தமாய் அழிந்து உருவற்று ஊசலாடுகிறது
இப்பூவிதனிலே!
நிழல்களைத் தொழுந்து நிஜங்களை வெறுக்கும்
ஊனக்கலாச்சாரத்தில் வழிபாட்டையே
முன்னிறுத்தி வாழ்க்கையில்
வழிபாட்டைப் புகுத்தாத
அவலச் சூழலில் நகர்கின்றது
நம்முடைய வாழ்க்கை…
நானே மாவேந்தர் என்ற யாவேயின் குரல்
எப்படி கேட்காமல் இருக்கிறது…
நீர் கேட்கும் வார்த்தைகள்
மனித வார்த்தைகள் அல்ல
என்றுரைக்கும் பவுலின் குரல்
எப்படி ஒலிக்காமல் போகிறது?
அவர்கள் செய்வது போன்று
செய்யாதீர்கள் என்ற
இயேசுவின் நற்செய்தி
எப்படி நம் காதுகளுக்கு
எட்;டாமல் இருக்கிறது?
விவிலியத்தின் பக்கங்கள்
விவிலியத்தின் மாந்தர்கள்
விவிலிய வார்த்தைகள்
தன்னைப்பற்றி எண்ணுவதைவிட
மற்றவர்களைப்பற்றி நினைக்கவே
நம்மைத் தூண்டுகிறது
இதை ஏன் நாம் புரிந்துக்கொள்வதில்லை?
விருந்துகளில் முதன்மையான இடம்
ஏழையின்மீது பளுவான சுமை
அகலமாக்கப்பட்ட வாசகப்பட்டை
பெரியதாக்கப்பட்ட
அங்கியின் குஞ்சங்கள்
தொழுகைக்கூடத்தில்
முதன்மையான இருக்கை
இப்படியாய் தன்னையே
முன்னிலைப்படுத்தும்
சுயநலப் போக்கு
மற்றவர்களை மேன்மைப்படுத்திவிடுமா?
உரக்கச்சொல்லி உசுப்பிவிடும் நேரம் நெருங்கி வந்துவிட்டது…
கேட்காத கேட்க மறுத்த காதுகள்
கொஞ்சம் கேட்கட்டும்….
மானிடரே மண்ணில் தோன்றும் யாவருமே
மகத்துவத்துடன் வாழ்வதையே
கடவுள் விரும்புகிறார்
அதற்காய்தான் நாம் இருக்கின்றோம்…
தம்மையே உயர்த்திக் கொள்பவன்
மற்றவன்முன்
தாழ்வான் என்பதில் புரிதல்
பெற்றிட முற்படுவீரே…
தன்னை வெறுத்து
மற்றவரை விருப்பத்தோடு
கரை சேர்க்கும் தோணிகளாய்
வாழ்ந்திட
பாதையமைத்து வழியனுப்புகிறது
இன்றைய இறைவழிபாடு!
நம்மைவிட மற்றவரை உயர்வாய் எண்ணுவோம்
நம்மை முன்னிலைப்படுத்தாமல்
முயன்றமட்டும்
மற்றவரை முன்னிறுத்தி
அவரின் வாழ்வ
ஏற்றம் காண
ஆண்டவரிடம் மன்றாடுவோம்!
அப்போது
கடவுளின் ஆசீர்
கார்மேகத்தின் நீர்த்துளியைப் போன்று
நம் உள்ளத்தையும்
இல்லத்தையும் நிரப்பும்
நீண்டிய மகிழ்ச்சியை
மழையென பொழியும்!
வெளிவேடமின்றி
வழிபாட்டில் கலந்திட
சொல்லிற்கேற்ப
செயலில் வேரூன்றிட
சடங்கில் மூழ்கி
உள்ளத்து அன்பைச்
சிதைக்காமல் வாழ்ந்திட
வரம் வேண்டி இணைவோம்!
தனக்காய் அல்லாமல் மற்றவருக்காய்
வாழ்ந்திட முயற்சி எடுப்போம்!
ஆமென்!
வாழ்விற்கும் வழிபாட்டிற்கும்
சொல்லுக்கும் செயலுக்கும்
வித்தியாசங்கள் தோற்றுமளவிற்கு
விசித்திரமான வாழ்வை
பரந்த உலகில் பத்திரமாய் பேணும்
மாந்தர்களின் வாழ்வுதனை
அலசிப் பார்த்து அக்னியில்
அவலங்களை எரித்து ஆண்டவனின்
உன்னத படைப்பாய் உலகினில் வாழ
அழைப்பு விடுகிறது இன்றைய திருவழிபாடு!
சொந்தங்களை மதித்து
உறவுகளுக்கு மரியாதை அளித்து
உரிமைகளுக்காய் போராடி
அடுத்தவரின் நலனில் அக்கறை காட்டிய
ஆழமான சிந்தனைகள்
பரவலான பேச்சுகள்
உறுதியான செயல்பாடுகள்
உள்ளத்தினிலே தோன்றிய அன்புச்சாரல்கள்
மொத்தமாய் அழிந்து உருவற்று ஊசலாடுகிறது
இப்பூவிதனிலே!
நிழல்களைத் தொழுந்து நிஜங்களை வெறுக்கும்
ஊனக்கலாச்சாரத்தில் வழிபாட்டையே
முன்னிறுத்தி வாழ்க்கையில்
வழிபாட்டைப் புகுத்தாத
அவலச் சூழலில் நகர்கின்றது
நம்முடைய வாழ்க்கை…
நானே மாவேந்தர் என்ற யாவேயின் குரல்
எப்படி கேட்காமல் இருக்கிறது…
நீர் கேட்கும் வார்த்தைகள்
மனித வார்த்தைகள் அல்ல
என்றுரைக்கும் பவுலின் குரல்
எப்படி ஒலிக்காமல் போகிறது?
அவர்கள் செய்வது போன்று
செய்யாதீர்கள் என்ற
இயேசுவின் நற்செய்தி
எப்படி நம் காதுகளுக்கு
எட்;டாமல் இருக்கிறது?
விவிலியத்தின் பக்கங்கள்
விவிலியத்தின் மாந்தர்கள்
விவிலிய வார்த்தைகள்
தன்னைப்பற்றி எண்ணுவதைவிட
மற்றவர்களைப்பற்றி நினைக்கவே
நம்மைத் தூண்டுகிறது
இதை ஏன் நாம் புரிந்துக்கொள்வதில்லை?
விருந்துகளில் முதன்மையான இடம்
ஏழையின்மீது பளுவான சுமை
அகலமாக்கப்பட்ட வாசகப்பட்டை
பெரியதாக்கப்பட்ட
அங்கியின் குஞ்சங்கள்
தொழுகைக்கூடத்தில்
முதன்மையான இருக்கை
இப்படியாய் தன்னையே
முன்னிலைப்படுத்தும்
சுயநலப் போக்கு
மற்றவர்களை மேன்மைப்படுத்திவிடுமா?
உரக்கச்சொல்லி உசுப்பிவிடும் நேரம் நெருங்கி வந்துவிட்டது…
கேட்காத கேட்க மறுத்த காதுகள்
கொஞ்சம் கேட்கட்டும்….
மானிடரே மண்ணில் தோன்றும் யாவருமே
மகத்துவத்துடன் வாழ்வதையே
கடவுள் விரும்புகிறார்
அதற்காய்தான் நாம் இருக்கின்றோம்…
தம்மையே உயர்த்திக் கொள்பவன்
மற்றவன்முன்
தாழ்வான் என்பதில் புரிதல்
பெற்றிட முற்படுவீரே…
தன்னை வெறுத்து
மற்றவரை விருப்பத்தோடு
கரை சேர்க்கும் தோணிகளாய்
வாழ்ந்திட
பாதையமைத்து வழியனுப்புகிறது
இன்றைய இறைவழிபாடு!
நம்மைவிட மற்றவரை உயர்வாய் எண்ணுவோம்
நம்மை முன்னிலைப்படுத்தாமல்
முயன்றமட்டும்
மற்றவரை முன்னிறுத்தி
அவரின் வாழ்வ
ஏற்றம் காண
ஆண்டவரிடம் மன்றாடுவோம்!
அப்போது
கடவுளின் ஆசீர்
கார்மேகத்தின் நீர்த்துளியைப் போன்று
நம் உள்ளத்தையும்
இல்லத்தையும் நிரப்பும்
நீண்டிய மகிழ்ச்சியை
மழையென பொழியும்!
வெளிவேடமின்றி
வழிபாட்டில் கலந்திட
சொல்லிற்கேற்ப
செயலில் வேரூன்றிட
சடங்கில் மூழ்கி
உள்ளத்து அன்பைச்
சிதைக்காமல் வாழ்ந்திட
வரம் வேண்டி இணைவோம்!
தனக்காய் அல்லாமல் மற்றவருக்காய்
வாழ்ந்திட முயற்சி எடுப்போம்!
ஆமென்!
அருமை அருமை அருமை
ReplyDeleteExcellent
ReplyDelete