அமைதியும், சாந்தமும் பெற…..
நான்கு நற்செய்தி நூல்களிலும் ஒட்டுமொத்தமாக ஏழு இடங்களில் இயேசு ஓய்வுநாளில் குணப்படுத்திய நிகழ்ச்சிகள் காணப்படுகிறது. சீமோனின் மாமியார் குணமடைதல்(லூக்கா 4: 38), பதினெட்டு ஆண்டுகளாக உடல் நலமற்றிருந்த பெண் (லூக்கா 13: 13) கைசூம்பிப்போனவர் குணமடைதல் (லூக்கா 6: 6) முடக்குவாதமுற்ற நபர் குணமடைதல் (யோவான் 5: 9), பார்வையற்றவன் குணமடைதல் (யோவான் 9: 14) மற்றும் பேய் பிடித்திருந்தவர் குணமடைதல் (மாற்கு 1: 21).
இத்தனைபேர் குணமடைந்ததைக் கேள்விப்பட்ட யாரும் மகிழ்ச்சிதான் அடைவார்களே ஒழிய, கேள்வி கேட்டு தொந்தரவு செய்ய மாட்டார்கள். இத்தனை ஆண்டுகளாக யாராலும் குணப்படுத்த முடியாதவற்றை இயேசு செய்திருக்கிறார் என்பதைக்கேட்டு இயேசுவைப்புகழ்வார்கள். ஆனால், பரிசேயர்கள் அப்படி இல்லை. அதில் குற்றம் கண்டுபிடித்தார்கள். ஓய்வுநாள் அன்று சமைத்தலும் வேலை செய்வதற்கு ஒப்பானது என்பதால், வெள்ளிக்கிழமையே யூதர்கள் சனிக்கிழமைக்கான உணவைத்தயாரித்து வைத்தார்கள். சனிக்கிழமை உணவை இலேசாக சூடுபடுத்திக்கொள்ளலாம். அன்றைய நாளில் இயேசு விருந்துக்கு அழைக்கப்படுகிறார். நீர்க்கோவை நோயுள்ள ஒருவரைக்குணப்படுத்துகிறார். தான் மற்றவர்களால் கவனிக்கப்படுவது தெரிந்தாலும், இயேசு ஓய்வுநாளில் குணப்படுத்துகிறார். அதற்கு அவர் உதாரண நிகழ்வையும் காரணமாக வைக்கிறார். பொதுவாக, பாலஸ்தீனத்தில் திறந்தவெளிக்கிணறுகள் அதிகம். அடிக்கடி, கால்நடைகள் இந்த கிணற்றுக்குள் விழுந்துவிடுவது வழக்கம். அதை ஓய்வுநாள் என்றும் பாராமல் மக்கள் வெளியே எடுத்தனர். விலங்குகளுக்கே இவ்வளவு முக்கியத்துவம் என்றால், படைப்பின் சிகரமாகிய மனிதர்களுக்கு கேட்கவே வேண்டியது இல்லை என்பதுதான் இயேசுவின் வாதம்.
எத்தனை சோதனைகள், இடர்பாடுகள் வந்தாலும் சாந்தமும், அமைதியும் இயேசுவின் முகத்தில் இழையோடுவதை நாம் பார்க்கலாம். எந்தவொரு நிகழ்வும் இயேசுவின் முகத்திலிருந்த அந்த சாந்தத்தை, அமைதியை குலைக்க முடியவில்லை. அதுதான் இயேசுவின் பலம். தந்தையிடமிருந்து செபத்தின் மூலமாக பெற்றுக்கொண்ட பலம். அத்தகைய பொறுமையான, சாந்தமான, அமைதியான மனநிலையைப்பெற இறைவனிடம் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
நான்கு நற்செய்தி நூல்களிலும் ஒட்டுமொத்தமாக ஏழு இடங்களில் இயேசு ஓய்வுநாளில் குணப்படுத்திய நிகழ்ச்சிகள் காணப்படுகிறது. சீமோனின் மாமியார் குணமடைதல்(லூக்கா 4: 38), பதினெட்டு ஆண்டுகளாக உடல் நலமற்றிருந்த பெண் (லூக்கா 13: 13) கைசூம்பிப்போனவர் குணமடைதல் (லூக்கா 6: 6) முடக்குவாதமுற்ற நபர் குணமடைதல் (யோவான் 5: 9), பார்வையற்றவன் குணமடைதல் (யோவான் 9: 14) மற்றும் பேய் பிடித்திருந்தவர் குணமடைதல் (மாற்கு 1: 21).
இத்தனைபேர் குணமடைந்ததைக் கேள்விப்பட்ட யாரும் மகிழ்ச்சிதான் அடைவார்களே ஒழிய, கேள்வி கேட்டு தொந்தரவு செய்ய மாட்டார்கள். இத்தனை ஆண்டுகளாக யாராலும் குணப்படுத்த முடியாதவற்றை இயேசு செய்திருக்கிறார் என்பதைக்கேட்டு இயேசுவைப்புகழ்வார்கள். ஆனால், பரிசேயர்கள் அப்படி இல்லை. அதில் குற்றம் கண்டுபிடித்தார்கள். ஓய்வுநாள் அன்று சமைத்தலும் வேலை செய்வதற்கு ஒப்பானது என்பதால், வெள்ளிக்கிழமையே யூதர்கள் சனிக்கிழமைக்கான உணவைத்தயாரித்து வைத்தார்கள். சனிக்கிழமை உணவை இலேசாக சூடுபடுத்திக்கொள்ளலாம். அன்றைய நாளில் இயேசு விருந்துக்கு அழைக்கப்படுகிறார். நீர்க்கோவை நோயுள்ள ஒருவரைக்குணப்படுத்துகிறார். தான் மற்றவர்களால் கவனிக்கப்படுவது தெரிந்தாலும், இயேசு ஓய்வுநாளில் குணப்படுத்துகிறார். அதற்கு அவர் உதாரண நிகழ்வையும் காரணமாக வைக்கிறார். பொதுவாக, பாலஸ்தீனத்தில் திறந்தவெளிக்கிணறுகள் அதிகம். அடிக்கடி, கால்நடைகள் இந்த கிணற்றுக்குள் விழுந்துவிடுவது வழக்கம். அதை ஓய்வுநாள் என்றும் பாராமல் மக்கள் வெளியே எடுத்தனர். விலங்குகளுக்கே இவ்வளவு முக்கியத்துவம் என்றால், படைப்பின் சிகரமாகிய மனிதர்களுக்கு கேட்கவே வேண்டியது இல்லை என்பதுதான் இயேசுவின் வாதம்.
எத்தனை சோதனைகள், இடர்பாடுகள் வந்தாலும் சாந்தமும், அமைதியும் இயேசுவின் முகத்தில் இழையோடுவதை நாம் பார்க்கலாம். எந்தவொரு நிகழ்வும் இயேசுவின் முகத்திலிருந்த அந்த சாந்தத்தை, அமைதியை குலைக்க முடியவில்லை. அதுதான் இயேசுவின் பலம். தந்தையிடமிருந்து செபத்தின் மூலமாக பெற்றுக்கொண்ட பலம். அத்தகைய பொறுமையான, சாந்தமான, அமைதியான மனநிலையைப்பெற இறைவனிடம் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
No comments:
Post a Comment