+ அருட்சகோதரி ராணி மரியா +
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த புல்லுவாளி பகுதியைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி ராணிமரியா.
கன்னியாஸ்திரி ராணி மரியா, பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் சேர்ந்து சேவை ஆற்றி வந்தார். உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த சபையின் மடத்தில் தங்கியிருந்து இறை பணி செய்து வந்தார்.
கடந்த 1994-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள மலை கிராம மக்களுக்கு சேவை புரிந்து வந்தார். அவர்களுக்கு அரசு வழங்கும் நிதி உதவிகள் பற்றி தெரிவித்து கந்து வட்டிகாரர்களிடம் பணம் வாங்குவதற்கு பதில் அரசு நிதி உதவியை பெற உதவி செய்தார்.
இதனால் கன்னியாஸ்திரி ராணிமரியா மீது அப்பகுதி நிலச்சுவான்தாரர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. கடந்த 1995-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி உதய்நகரில் இருந்து இந்தூருக்கு கன்னியாஸ்திரி ராணிமரியா சென்றபோது ஒரு கும்பல் ஓடும் பஸ்சில் அவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச போலீசார் சமந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் ஜீவன், தர்மேந்திரா ஆகியோரை கைது செய்தனர். அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட கன்னியாஸ்திரி ராணிமரியாவின் சகோதரியும் ஒரு கன்னியாஸ்திரியாக உள்ளார். அவர், ராணி மரியாவை கொலை செய்து தண்டனை அனுபவித்து வரும் கைதி சமந்தரை ஜெயிலுக்கு சென்று பார்த்தார். அவரை ராணி மரியாவின் குடும்பத்தினர் மன்னித்து விட்டதாகவும், அவரை பரோலில் எடுக்க முயற்சி செய்வதாகவும் கூறினார்.
பின்னர் ரக்ஷாபந்தன் தினத்தன்று மீண்டும் ஜெயிலுக்கு சென்று கொலையாளி சமந்தரின் கைகளில் ராக்கி கயிறு கட்டி அவரை சகோதரராக ஏற்றுக்கொண்டார். இதனால் சமந்தரின் மனம் மாறியது.
பரோலில் வெளிவந்ததும் அவர், கன்னியாஸ்திரி ராணி மரியாவின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவரை கொலை செய்ததற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார்.
கன்னியாஸ்திரி ராணி மரியாவை கொலை செய்தவன் மனம் திருந்திய சம்பவம் மத்திய பிரதேச மலைவாழ் மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியது. அவர்கள் கன்னியாஸ்திரி ராணிமரியாவை அப்பகுதி மக்கள் புனிதராக கருதினர். இந்த தகவல் வாடிகனில் உள்ள போப் ஆண்டவருக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் மலை கிராம மக்கள், கன்னியாஸ்திரி ராணிமரியா மூலம் பெற்ற பலன்களும் பட்டியலிடப்பட்டன. இதனை பரிசீலித்த போப்பாண்டவர் இன்று கன்னியாஸ்திரி ராணி மரியாவுக்கு புனிதருக்கு முந்தைய அருளாளர் பட்டம் வழங்க முடிவு செய்தார்.
மன்னிப்பு நம்மை இயேசுவிடம் கொண்டு செல்லும்
இயேசுவுக்கே புகழ் ! மாமரித்தாயே வாழ்க
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த புல்லுவாளி பகுதியைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி ராணிமரியா.
கன்னியாஸ்திரி ராணி மரியா, பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் சேர்ந்து சேவை ஆற்றி வந்தார். உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த சபையின் மடத்தில் தங்கியிருந்து இறை பணி செய்து வந்தார்.
கடந்த 1994-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள மலை கிராம மக்களுக்கு சேவை புரிந்து வந்தார். அவர்களுக்கு அரசு வழங்கும் நிதி உதவிகள் பற்றி தெரிவித்து கந்து வட்டிகாரர்களிடம் பணம் வாங்குவதற்கு பதில் அரசு நிதி உதவியை பெற உதவி செய்தார்.
இதனால் கன்னியாஸ்திரி ராணிமரியா மீது அப்பகுதி நிலச்சுவான்தாரர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. கடந்த 1995-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி உதய்நகரில் இருந்து இந்தூருக்கு கன்னியாஸ்திரி ராணிமரியா சென்றபோது ஒரு கும்பல் ஓடும் பஸ்சில் அவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச போலீசார் சமந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் ஜீவன், தர்மேந்திரா ஆகியோரை கைது செய்தனர். அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட கன்னியாஸ்திரி ராணிமரியாவின் சகோதரியும் ஒரு கன்னியாஸ்திரியாக உள்ளார். அவர், ராணி மரியாவை கொலை செய்து தண்டனை அனுபவித்து வரும் கைதி சமந்தரை ஜெயிலுக்கு சென்று பார்த்தார். அவரை ராணி மரியாவின் குடும்பத்தினர் மன்னித்து விட்டதாகவும், அவரை பரோலில் எடுக்க முயற்சி செய்வதாகவும் கூறினார்.
பின்னர் ரக்ஷாபந்தன் தினத்தன்று மீண்டும் ஜெயிலுக்கு சென்று கொலையாளி சமந்தரின் கைகளில் ராக்கி கயிறு கட்டி அவரை சகோதரராக ஏற்றுக்கொண்டார். இதனால் சமந்தரின் மனம் மாறியது.
பரோலில் வெளிவந்ததும் அவர், கன்னியாஸ்திரி ராணி மரியாவின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவரை கொலை செய்ததற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார்.
கன்னியாஸ்திரி ராணி மரியாவை கொலை செய்தவன் மனம் திருந்திய சம்பவம் மத்திய பிரதேச மலைவாழ் மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியது. அவர்கள் கன்னியாஸ்திரி ராணிமரியாவை அப்பகுதி மக்கள் புனிதராக கருதினர். இந்த தகவல் வாடிகனில் உள்ள போப் ஆண்டவருக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் மலை கிராம மக்கள், கன்னியாஸ்திரி ராணிமரியா மூலம் பெற்ற பலன்களும் பட்டியலிடப்பட்டன. இதனை பரிசீலித்த போப்பாண்டவர் இன்று கன்னியாஸ்திரி ராணி மரியாவுக்கு புனிதருக்கு முந்தைய அருளாளர் பட்டம் வழங்க முடிவு செய்தார்.
மன்னிப்பு நம்மை இயேசுவிடம் கொண்டு செல்லும்
இயேசுவுக்கே புகழ் ! மாமரித்தாயே வாழ்க
No comments:
Post a Comment