அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, November 18, 2017

!! பாத்திமா காட்சிகள் புத்தகத்தில் நம் ஆண்டவர் தம் அன்னைக்கு நடக்கும் நிந்தைகளை அவரே குழந்தைகளிடம் சொல்கிறார் !!

!! பாத்திமா காட்சிகள் புத்தகத்தில் நம் ஆண்டவர் தம் அன்னைக்கு நடக்கும் நிந்தைகளை அவரே குழந்தைகளிடம் சொல்கிறார் !!

தேவமாதா சர்வேசுரனின் தாய் என்ற உண்மையை மறுப்பது ?

மாதா பூமியிலுல்ல எல்லோருக்கும் தாயாக இருக்கிறார்கள் என்பதை மறுப்பவர்களை பற்றி ஆண்டவரே சொன்னது ?

பதிதரும் பிரிவினை கிறிஸ்தவர்களும் மாதா சர்வேசுரனின் தாய் என்பதை ஒரு சொல் அளவிற்க்கே ஏற்க்கிறார்கள் நடைமுறையில் அதற்க்கு நேர்மாறாக நடக்கிறார்கள் அவர்கள் உண்மையிலே சேசுவை கடவுள் என்று அங்கீகரித்து ஆண்டவருடைய மெய்யான தாயாக ஏற்றால் மாதாவை கடமைபடியே கனப்படுத்துவார்கள் ஆகவே பதிதர்கள் மாதாவை புறக்கனித்து அவர்கள் ஜென்மபாவமும் கர்மபாவமும் உடையவர்கள் என்று சொல்லும் போது சேசுவையும் அவர்கள் கடவுளாக ஏற்பதில்லை ஏனென்றால் சேசுநாதர் அவர்களுடைய கடவுளாயிருந்தால் அவருடைய தகுதி பெற்ற தாயை அவர்களால் புறக்கணிக்க முடியாது

இப்போது பிரிவினைசபைகளாக மாறிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்காண கத்தோலிக்க மக்களும் தப்பறையாளர்களுடன் தெடர்பு கொண்டு இதே தப்பறைகளையும் தாங்களும் பேசுகிறார்கள்

மேலும் மாதாவை இனணமீட்பர் சகல வரபிரசாதங்களுக்கும் மத்தியஸ்த்தி என்ற உண்மைகளை மறுக்கிற சங்கச் சபைகளும் இதே நிலையில் தான் இருக்கிறது மாதா "இணை மீட்பராய் " ஏற்றுக் கொள்ளபட அது சம்மதிக்கவில்லை அதனால் மாதா சரவேசுரனின் தாய் மனிதர்களின் தாய் என்ற உண்மைகளும் ஏற்றுகொள்ளபடுகின்றனவா என சந்தேகமாயிருக்கிறது ஆகவே நாமாவது " வாழ்க மனுக்குல இணைமீட்பர் " வாழ்க சரவேசுரனின் அன்னை என முழுமனதோடு அங்கீகரித்து மாதாவை வாழ்த்துவோமாக

இது பாத்திமா காட்சிகள் புத்தகத்தில் இருந்து பதிவு செய்ய படுகிறது

இயேசுவுக்கே புகழ் ! மாமரித்தாயே வாழ்க

No comments:

Post a Comment