அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, November 22, 2017

வாழ்க்கை என்னும் கொடை

வாழ்க்கை என்னும் கொடை  -  லூக்கா  19: 11-28

வாழ்க்கை என்பது கடவுள் கொடுத்த கொடை. இந்த கடவுள் கொடுத்த கொடையைப் பயன்படுத்தி நாம் எந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறுகிறோம், வாழ்க்கையைப் பயனுள்ளதாக மாற்றுகிறோம், வாழ்க்கையை எப்படி வாழுகிறோம், என்பதுதான், நம் முன்னால் இருக்கக்கூடிய சவால்.
இந்த உவமையில் வரக்கூடிய மினாவை நாம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசலாம். ஒருவருடைய வாழ்வில் அவருக்கென்று பல திறமைகள் இருக்கலாம். அந்த திறமைகள் வெறுமனே புதைக்கப்பட்டு விடக்கூடாது. மாறாக, அவைகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அது இன்னும் சிறப்பாக வளர்க்கப்பட வேண்டும். அதனைப் பயன்படுத்துவோர்க்கு மட்டுமல்லாது, எல்லாருக்கும் பயன் கொடுக்கக்கூடியதாக அமைய வேண்டும். அதைத்தான் இந்த உவமை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
நாம் வாழக்கூடிய உலகம் போட்டிகள் நிறைந்த உலகம். இங்கே திறமைகளை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறி, அனைவரும் சிறப்பாக, இந்த உலகத்தை, கடவுள் கொடுத்திருக்கிற திறமைகள் மூலமாக மெருகேற்ற வேண்டும். அதற்கு நாம் முழுமையாக முயற்சி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

No comments:

Post a Comment