அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, November 19, 2017

மன்னிக்கும் கடவுள்!

இறை இரக்க கட்டுரைகள்

 கட்டுரை-2 - மன்னிக்கும் கடவுள்!

அருட்தந்தை தம்புராஜ் சே.ச.

யோனா என்ற இறைவாக்கினருக்கு, நினிவே மக்கள் மனம் மாறாவிட்டால் அழிந்து போவார்கள் என்ற செய்தியை அறிவிக்க வேண்டுமென்று கடவுள் பணிக்கின்றார். ஆனால், யோனா, நினிவேக்குப் போகாமல், அதன் எதிர் திசையிலிருக்கும் தார்சீசுக்குச் செல்கின்றார்.

அவர் படகில் இருக்கும் பொழுது, பெரும் புயல் காற்று வீசுகின்றது. படகில் இருந்த வேற்றினத்தார் மன்றாடுகின்றனர். பிறகு, இப்புயலுக்குக் காரணமாயிருந்தவர் யோனா என்று கண்டு கொள்கின்றனர். அவரைக் கடலில் வீசி எறிந்தவுடன் புயல் அமைதியாகின்றது.

ஒரு திமிங்கலம் யோனாவை விழுங்குகிறது. அது நினிவே நகர் கரையில் அவரைக் கக்குகின்றது. கடவுள் யோனாவைப் பார்த்து இரண்டாம் முறையாக நினிவே மக்களிடம் சென்று இறைவாக்குரைக்கப் பணிக்கின்றார். இறைவாக்கைக் கேட்ட மக்கள் - மன்னர் முதல் மிருகங்கள் வரை - சாக்குடை தரித்துத் தங்கள் தவறுகளை எண்ணி மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கின்றனர். உடனே கடவுள் அவர்களை மன்னிக்கின்றார்.

தனது இறைவாக்கு நிறைவேறவில்லை என்று தனது ஆணவத்தால் யோனா கடவுள்மீது கோபம் கொள்கின்றார். அவர் மன இறுக்கத்தோடு தரையில் அமர்ந்திருக்கும் பொழுது, ஓர் ஆமணக்குச் செடியை வளரச் செய்து, வெயிலிலிருந்து அவரைக் காப்பாற்றுகின்றார். யோனாவிற்கு ஒரு சோதனை. ஆமணக்குச் செடியை அழித்துத் தின்ன ஒரு புழுவை அனுப்புகிறார் கடவுள். புழு அந்த ஆமணக்குச் செடியை அழித்ததும் மீண்டும் யோனா கடவுள்மீது கோபங்கொண்டு தான் மரணத்தைச் சந்திப்பதே மேல் என்று கடவுளிடம் முணுமுணுக்கின்றார், முறையிடுகின்றார்.

அது மட்டுமல்ல, வாழ்வதைவிடச் சாவதே எனக்கு நல்லது என்று அவர் சொல்லி, தமக்குச் சாவு வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அப்பொழுது கடவுள் யோனாவை நோக்கி, ஆமணக்குச் செடியைக் குறித்து நீ இவ்வாறு சினம் கொள்வது முறையா? என்று கேட்டார். அதற்கு யோனா, ஆம், முறையேதான், செத்துப் போகும் அளவுக்கு நான் சினங்கொள்வது முறையே என்று சொன்னார்.

ஆண்டவர் அவரை நோக்கி, அந்தச் செடி ஓர் இரவில் முளைத்தெழுந்து, மறு இரவில் முற்றும் அழிந்தது. நீ அதற்காக உழைக்கவும் இல்லை, அதை வளர்க்கவும் இல்லை. அதற்கு இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே. இந்த நினிவே மாநகரில் இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள் . வலக்கை எது? இடக்கை எது என்றுகூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களும், அவர்களோடு எண்ணிறந்த கால்நடைகளும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா? என்றார்.

ஆம், அன்பார்ந்தவர்களே, கடவுளின் கருணைக்கு அன்பும் இல்லை, எல்லையும் இல்லை. கனிவு காட்டுவதில் நல்லார்- பொல்லார் என்று அவர் வேற்றுமை பாராட்டுவதும் இல்லை. அடித்தலைவிட, அணைத்தலே அவரது இயல்பாகும்.

மனிதன் மறக்கவும் மாட்டான், மன்னிக்கவும் மாட்டான். ஆனால், கடவுள் அப்படியல்ல. உதரத்திலிருந்தே உங்களைத் தாங்குபவன் நான், கருவிலிருந்தே உங்களைச் சுமப்பவர் நான். உங்கள் முதுமை வரைக்கும் நான் அப்படியே இருப்பேன். நரை வயது வரைக்கும் நான் உங்களைச் சுமப்பேன். உங்களை உருவாக்கிய நானே உங்களைத் தாங்குவேன். நான் உங்களைச் சுமப்பேன். நானே விடுவிப்பேன்... (எசா 46:3-4).


நாமும் இந்த தவக்காலத்தில் இறை இரக்க இயல்பை வளர்ப்போம். மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுவோம்.

No comments:

Post a Comment