அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, November 19, 2017

அயலாருக்கு இரக்கம்

இறை இரக்க கட்டுரைகள்

 கட்டுரை-9    அயலாருக்கு இரக்கம்

அருட்தந்தை தம்புராஜ் சே.ச.

லூக்கா நற்செய்தியில் அதிகாரம் பத்தில் இயேசு நல்ல சமாரியன் என்ற ஓர் உவமையைத் தம் சீடர்களுக்குப் போதிக்கிறார். நிலை வாழ்வை அடைவது எப்படி? என்று திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவை வினவியபொழுது இந்த உவமையைக் கூறுகின்றார். அதோடு அந்தத் திருச்சட்ட அறிஞர் வேறு ஒரு கேள்வியையும் முன் வைக்கின்றார். எனக்கு அடுத்திருப்பவர் யார்? என்று.

கள்வர் கையில் அகப்பட்ட ஒருவன் குற்றுயிராக பாதையிலே விழுந்து கிடக்கிறான்.அவனது பரிதாப நிலையைக் கண்டும், மறுபக்கமாக குருவும், ஒரு லேவியரும் அவனை விட்டு அகன்று மறுபக்கமாய்ச் செல்கின்றனர். ஏனென்றால் அவர்கள் இருவரும் திருச்சட்டத்தைச் சரியாக நிறைவேற்றுபவர்கள்.

ஒருவேளை அந்தப் பரிதாப நிலையில் இருந்த மனிதன் இறந்துவிட்டிருந்தால், அவனை (அதாவது சவத்தைத்) தொடுவது தீட்டாகும். அப்படி ஒருவர் சவத்தைத் தொட்டு விட்டால் அவர்கள் தீட்டுப்பட்டவர்களாகக் கருதப்படுவர்.

ஏழு நாள்கள் வரை அவர் ஆலயத்திலே பணி செய்ய முடியாது. ஆகவே, இருவரும் சட்டத்தை மதித்தார்களே ஒழிய, இறந்து கொண்டிருக்கும், குற்றுயிராய்த் துடித்துக் கொண்டிருக்கும் மனிதருக்கு உதவிக்கரம் நீட்ட மனமில்லாமல் பாராமுகமாய் அவனை விட்டு அகன்று செல்கின்றனர்.

ஆனால், சமாரியன் ஒருவன் அவனைக் கண்டு பரிவு கொண்டு, அவன் காயங்களைக் கட்டித் தன் வாகனத்தின் மீது அமர வைத்து சாவடியில் ஒப்படைத்துத் தன் சொந்த பணத்தை வைத்து அவனைப் பராமரித்து, குணமளிக்கத் தேவையான எல்லா உதவிகளையும் செய்கின்றான்.

யூதர்கள் சமாரியர்களைத் தீட்டுப்பட்டவர்கள் என்று ஒதுக்கினர். சமாரியர்களை யூதர்கள் தங்கள் எதிரிகளாகவும், சட்டங்களைக் கடைப்பிடிக்காத பாவிகளாகவும் கருதினர்.

ஆனால், சமாரியனிடம் இருந்த பண்பு இரக்கம். அவன் சட்டத்தைக் கடைப்பிடிப்பவனாக இல்லாதிருந்திருக்கலாம். ஆனால், அவனது இதயத்திலே நெஞ்சுரம் இருந்தது. இரக்கம் இருந்தது. பரிவு இருந்தது.

அடிபட்டுக் கிடந்தவன் தனது எதிரியாக இருந்த யூதனாய் இருந்திருந்தாலும், எல்லாராலும் ஒதுக்கப்பட்ட சமாரியன் உதவிக்கரம் நீட்டுகின்றான். இரக்கம், பரிவு என்ற குணம் சட்டத்தின் எல்லையைத் தாண்டி அயலாரது தேவையைப் பூர்த்தி செய்வதாகும்.

அடிபட்டவனுக்குச் செலவு செய்த பணத்தைத் தான் மீண்டும் பெற முடியாமல் போகுமே என்று சமாரியன் பின்வாங்கவில்லை. யூதர்களின் சட்டப்படி, யூதரல்லாத ஒருவனுக்கு நாம் உதவி செய்ய கடமை இல்லை என்பது போதிக்கப்பட்டது. அயலான் என்பவன் யூதனே. மற்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் அயலார், தங்களுக்கு அடுத்திருப்பவர் அல்லர் என்று முழங்கியது யூதர்களின் சட்டம்.

ஆனால், சமாரியனின் உதவி, சட்டத்தையும் தாண்டி, அன்பே நமது வாழ்வின் ஆணிவேர் என்று உணர்ந்திருந்தான் நல்ல சமாரியன். பகைவரையும் அன்பு செய்யுங்கள், உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்யுங்கள் என்ற இயேசுவின் அன்புக் கட்டளையைத் தன் தலையான பண்பு என்று கருதி அதற்குச் செயல் வடிவம் கொடுப்பவரே இயேசுவின் உண்மையான சீடர்கள்.

இந்த தவக்காலத்தில் பிறர்மீது இரக்கம் காட்டி, அன்புள்ளம் கொண்டவர்களாய் வாழ்வோம்.


அன்பில் - சட்டம் எல்லாம் அடங்கி விடுகிறது... ஆமேன்

No comments:

Post a Comment