அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, November 19, 2017

அருப்பொழிவு செய்யப்பட்டவருக்கு இரக்கம்

இறை இரக்க கட்டுரைகள்

 கட்டுரை-7  அருப்பொழிவு செய்யப்பட்டவருக்கு இரக்கம்

அருட்தந்தை தம்புராஜ் சே.ச.

இஸ்ரயேல் மக்களின் முதல் அரசர் சவுல். சாமுவேல் என்ற இறைவாக்கினரால் இவர் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டவர். இவர் தாவீதை மிகவும் நேசித்தார். சவுல் தீய ஆவியால் பீடிக்கப்பட்டு மனநிலையில் இறுக்கம் ஏற்பட்டப் போதெல்லாம் தாவீது இசைக்கருவியை மீட்டுவார். அரசர் சவுல் குணமடைவார்.

தாவீது கோலியாத்தை வென்று நாடு திரும்பியபொழுது, பெண்கள் ஆடிப்பாடி, சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார். தாவீதோ பதினோராயிரம் பேரைக் கொன்றார் என்று பாடினர். இது சவுல் அரசருக்குப் பிடிக்கவில்லை. தாவீதின் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டார். தாவீதைக் கொல்ல பலமுறை எத்தனிக்கின்றார்.

ஆனால், அவரது கையினின்று தப்பிப் பல முறை ஓடி ஒளிந்து கொள்கின்றார் தாவீது. சில ஆண்டுகள் தாவீது பாதுகாப்பான இடத்தில், அதுவும் வனாந்தரத்தில் அலைந்து திரிகின்றார். தாவீது எங்கே சென்றாரோ, அங்கெல்லாம் அவரைத் துரத்திக்கொண்டு சவுல் அரசர் போகின்றார். தாவீதுக்கு அரசனைக் கொல்ல இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், தாவீது அவர்மீது இரக்கம் காட்டுகின்றார். காரணம் அவர் கூறுவது போல திருப்பொழிவு செய்யப்பட்டவர் மீது நாம் கை வைக்கக்கூடாது என்பதே.

முதல் வாய்ப்பு: அரசர் இயற்கைக் கடன் கழிப்பதற்காக ஒரு குகையில் நுழைகின்றார். அப்பொழுது தாவீதும், அவர்தம் ஆட்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர். அவரது ஆட்கள் அவரைக் கொல்ல தாவீதைத் தூண்டினர். அதற்கு தாவீது ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எதிராக நான் அவர்மேல் கை வைக்கக்கூடாது என்று கூறி சவுல் அரசனுக்கு இரக்கம் காட்டினார்.

இரண்டாவது வாய்ப்பு: ஒருமுறை சவுலுக்குப் பயந்து அக்கியலா குகையில் ஒளிந்திருந்தார். அச்சமயம் அரசர் சவுல், அக்குகையின் அருகில் பாளையம் இறங்கி ஓய்வெடுத்தார். சவுல் கூடாரத்தினுள் தூங்கினார். அப்னேரும், படைவீரர்களும் அவரைச் சுற்றிலும் படுத்து உறங்கினர். அபிசாய் தாவீதோடு அங்கே வந்தார். அபிசாய் தாவீதிடம் இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார். ஆதலால் இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதியக்குத்தப் போகிறேன் என்றான். ஆனால், தாவீது அபிசாயை நோக்கி, அவரைக் கொல்லாதே. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்? என்று சொல்லித் தடுத்தார். இவ்வாறு தாவீது சவுல் அரசர்மீது இரக்கம் காட்டினார்.

கடவுளின் மறுபெயர் இரக்கம். தாவீது சவுலுக்கு இரக்கம் காட்டியதுபோல் நாமும் நமக்குத் தீங்கு எண்ணுவோரையும், தீங்கு செய்பவர்களையும் மன்னித்து இரக்கம் காட்ட வேண்டும். இயேசுவின் போதனைகளுள் தலைசிறந்த போதனை மன்னிப்பைப் பற்றியே. இரக்கத்தைப் பற்றியே. பேதுரு இயேசுவிடம் எனது சகோதரர், சகோதரி எனக்கு எதிராகப் பாவம் செய்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? என்று கேட்ட பொழுது, இயேசு ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழு முறை என்று பதிலிறுத்தார். கடவுளின் இரக்கத்தைப் பெற்றவன் ஒருவனே பிறருக்கு இரக்கம் காட்ட முடியும். கடவுள் என்றும் எப்பொழுதும் மன்னிக்கின்றார். பிறருக்கு நாம் இரக்கம் காட்டும் பொழுது, கடவுளுடைய இயல்பை, சாயலை நாம் போர்த்திக் கொள்கின்றோம் --ஆமேன்

தொடரும்

No comments:

Post a Comment