என் கடன் பணிசெய்து கிடப்பது
மகான் ஒருவர் சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இளைஞன் ஒருவன் ஒரு மரத்திற்குக் கீழே மிகவும் சோகமாக அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்ததும் மகான் அவன் அருகே சென்று, காரணத்தைக் கேட்டார். அதற்கு அவன், “என் நண்பன் ஒருவன் நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டுக் கிடந்தான். நேற்றைய தினத்தில் அவனுக்கு உடம்புக்கு ரொம்பவும் முடியாமல் போகவே, மருத்துவமையில் சேர்த்து, அருகாமையிலே இருந்து அவனைக் கவனித்துக் கொண்டேன். இப்போதுதான் என் வீடு திரும்பினேன்” என்றான்.
உடனே மகான், “நல்ல காரியம் செய்திருக்கிறாய். உன்னுடைய நண்பன் விரைவில் குணமடைந்துவிடுவான்; நீ ஒன்றும் கவலைப்படாதே” என்று அவனைத் தேற்றினார். ஆனால் அப்போதும் அவன் சோகமாக இருப்பதைப் பார்த்த மகான் அவனிடம், “நீ உன் நண்பனுக்கு உதவிசெய்யும்போது என்ன நினைத்துக்கொண்டு செய்தாய்?” என்று வினவினார். அவன் மறுமொழியாக, “என்னுடைய நண்பனுக்கு எவ்வளவு உதவிகள் செய்கிறோம், இதேபோன்று நாம் கஷ்டப்படும்போது நமக்கு உதவி செய்வானா?” என்ற எண்ணத்தோடுதான் செய்தேன்” என்று பதிலளித்தான்.
அதற்கு அந்த மகான், “இதுதான் நீ செய்த மிகப்பெரிய தவறு. நான் என்னுடைய நண்பனுக்கு உதவி செய்வதுபோல, அவனும் எனக்கு உதவி செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்போடுதான் நீ உதவி செய்திருக்கிறாய். ஒருவேளை அவன், நீ செய்த உதவியைவிட குறைவாகச் செய்தால் ‘நான் அவனுக்கு உதவிசெய்த அளவுக்கு அவன் எனக்கு உதவி செய்யவில்லையே’ என்று குறைபட்டுக்கொள்வாய். இது உண்மையான நட்பிற்கு இலக்கணம் அல்ல” என்று சொல்லி முடித்துவிட்டு, “எந்த ஒரு எதிர்பார்ப்பின்றி செய்யப்படும் உதவிதான் உண்மையா உதவியாகும்” என்றுசொல்லி முடித்தார்.
இதைக் கேட்ட அந்த இளைஞன் மனத்தெளிவு பெற்று, மகிழ்வோடு தன் வழியில் சென்றான்.
எதையும் எதிர்பார்த்து, பிறர் நம்மைப் பாராட்டவேண்டும் எனச் செய்யப்படும் உதவி உண்மையான உதவியாகாது, மாறாக பிரதிபலன் பார்க்காமல் செய்யப்படும் உதவியே உண்மையான உதவியாகும் என்பதை இக்கதையானது நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகிறது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, வீட்டில் வேலைபார்க்கும் வேலையாள், வீட்டுத் தலைவன் தன்னைப் பாராட்டுவான் என்றோ, சன்மானம் தருவான் என்றோ வேலைபார்ப்பதில்லை. மாறாக அது தன்னுடைய கடமை என்ற உணர்வோடுதான் வேலைப் பார்ப்பான். அதேபோன்றுதான் இயேசுவின் சீடர்களாக இருக்ககூடிய நாம் ஒவ்வொருவருமே கடமையுணர்வோடு எந்த ஒரு காரியத்தையும் செய்யவேண்டும்” என்கிறார்.
1கொரி9:16 ல் பவுலடியார் கூறுவார், “நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும், அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் எது எனது கடமையாக இருக்கின்றது” என்று. ஆம், நற்செய்தி அறிவிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது. இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை.
ஆதலால் நற்செய்தி அறிவிப்புப் பணியாக இருந்தாலும் சரி, பிற சமூகமாற்றுப் பணியாக இருந்தாலும் சரி, எந்த பணியாக இருந்தாலும் நாம் கடமை உணர்வோடு செய்யவேண்டும். பிறருடைய பாராட்டைப் பெறுவதற்காகவோ அல்லது எதிர்பார்ப்போடு செய்வதோ உண்மையான பணியாகாது. “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்பர். நாம் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற மனநிலையில் பணிகளைச் செய்வோம்.
அத்தோடு “கடமையைச் செய்யும்போது மகிழ்ச்சியோடு செய்யவில்லை என்றால், அதன் முடிவும் மகிழ்ச்சியாக இருக்காது” என்ற நெப்போலியன் ஹில் என்ற அறிஞரின் வார்த்தைகளுக்கு இணங்க நாம் எத்தகைய பணியாக இருந்தாலும் அதனை கடமையுணர்வோடு, மகிழ்வோடு செய்வோம். அப்போது இறைவனும் நமக்கு எல்லா ஆசிரையும் தந்து வழி நடத்துவார். – Fr. Maria Antonyraj, Palayamkottai.
மகான் ஒருவர் சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இளைஞன் ஒருவன் ஒரு மரத்திற்குக் கீழே மிகவும் சோகமாக அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்ததும் மகான் அவன் அருகே சென்று, காரணத்தைக் கேட்டார். அதற்கு அவன், “என் நண்பன் ஒருவன் நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டுக் கிடந்தான். நேற்றைய தினத்தில் அவனுக்கு உடம்புக்கு ரொம்பவும் முடியாமல் போகவே, மருத்துவமையில் சேர்த்து, அருகாமையிலே இருந்து அவனைக் கவனித்துக் கொண்டேன். இப்போதுதான் என் வீடு திரும்பினேன்” என்றான்.
உடனே மகான், “நல்ல காரியம் செய்திருக்கிறாய். உன்னுடைய நண்பன் விரைவில் குணமடைந்துவிடுவான்; நீ ஒன்றும் கவலைப்படாதே” என்று அவனைத் தேற்றினார். ஆனால் அப்போதும் அவன் சோகமாக இருப்பதைப் பார்த்த மகான் அவனிடம், “நீ உன் நண்பனுக்கு உதவிசெய்யும்போது என்ன நினைத்துக்கொண்டு செய்தாய்?” என்று வினவினார். அவன் மறுமொழியாக, “என்னுடைய நண்பனுக்கு எவ்வளவு உதவிகள் செய்கிறோம், இதேபோன்று நாம் கஷ்டப்படும்போது நமக்கு உதவி செய்வானா?” என்ற எண்ணத்தோடுதான் செய்தேன்” என்று பதிலளித்தான்.
அதற்கு அந்த மகான், “இதுதான் நீ செய்த மிகப்பெரிய தவறு. நான் என்னுடைய நண்பனுக்கு உதவி செய்வதுபோல, அவனும் எனக்கு உதவி செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்போடுதான் நீ உதவி செய்திருக்கிறாய். ஒருவேளை அவன், நீ செய்த உதவியைவிட குறைவாகச் செய்தால் ‘நான் அவனுக்கு உதவிசெய்த அளவுக்கு அவன் எனக்கு உதவி செய்யவில்லையே’ என்று குறைபட்டுக்கொள்வாய். இது உண்மையான நட்பிற்கு இலக்கணம் அல்ல” என்று சொல்லி முடித்துவிட்டு, “எந்த ஒரு எதிர்பார்ப்பின்றி செய்யப்படும் உதவிதான் உண்மையா உதவியாகும்” என்றுசொல்லி முடித்தார்.
இதைக் கேட்ட அந்த இளைஞன் மனத்தெளிவு பெற்று, மகிழ்வோடு தன் வழியில் சென்றான்.
எதையும் எதிர்பார்த்து, பிறர் நம்மைப் பாராட்டவேண்டும் எனச் செய்யப்படும் உதவி உண்மையான உதவியாகாது, மாறாக பிரதிபலன் பார்க்காமல் செய்யப்படும் உதவியே உண்மையான உதவியாகும் என்பதை இக்கதையானது நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகிறது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, வீட்டில் வேலைபார்க்கும் வேலையாள், வீட்டுத் தலைவன் தன்னைப் பாராட்டுவான் என்றோ, சன்மானம் தருவான் என்றோ வேலைபார்ப்பதில்லை. மாறாக அது தன்னுடைய கடமை என்ற உணர்வோடுதான் வேலைப் பார்ப்பான். அதேபோன்றுதான் இயேசுவின் சீடர்களாக இருக்ககூடிய நாம் ஒவ்வொருவருமே கடமையுணர்வோடு எந்த ஒரு காரியத்தையும் செய்யவேண்டும்” என்கிறார்.
1கொரி9:16 ல் பவுலடியார் கூறுவார், “நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும், அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் எது எனது கடமையாக இருக்கின்றது” என்று. ஆம், நற்செய்தி அறிவிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது. இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை.
ஆதலால் நற்செய்தி அறிவிப்புப் பணியாக இருந்தாலும் சரி, பிற சமூகமாற்றுப் பணியாக இருந்தாலும் சரி, எந்த பணியாக இருந்தாலும் நாம் கடமை உணர்வோடு செய்யவேண்டும். பிறருடைய பாராட்டைப் பெறுவதற்காகவோ அல்லது எதிர்பார்ப்போடு செய்வதோ உண்மையான பணியாகாது. “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்பர். நாம் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற மனநிலையில் பணிகளைச் செய்வோம்.
அத்தோடு “கடமையைச் செய்யும்போது மகிழ்ச்சியோடு செய்யவில்லை என்றால், அதன் முடிவும் மகிழ்ச்சியாக இருக்காது” என்ற நெப்போலியன் ஹில் என்ற அறிஞரின் வார்த்தைகளுக்கு இணங்க நாம் எத்தகைய பணியாக இருந்தாலும் அதனை கடமையுணர்வோடு, மகிழ்வோடு செய்வோம். அப்போது இறைவனும் நமக்கு எல்லா ஆசிரையும் தந்து வழி நடத்துவார். – Fr. Maria Antonyraj, Palayamkottai.
No comments:
Post a Comment