அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, November 16, 2017

கல்லறை வாசகம்!

கல்லறை வாசகம்!

உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்!

உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது நல்ல வேளை இவள் பிணமானாள் இல்லாவிட்டால் இந்த கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்.

மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்...

இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு இந்த கல்லறை குழி போதுமானதாக ஆகிவிட்டது.

ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்...

இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்.

அரசியல்வாதியின் கல்லறையில்..

தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள் இவன் எழுந்தாலும் எழுந்து விடலாம்.

ஒரு விலைமகளின் கல்லறை வாசகம்...

இங்கு தான் இவள் தனியாக தூங்குகிறாள் தொந்தரவு செய்யாதீர்கள் பாவம் இனி வர முடியாது இவளால்.

இவ்வளவு தானா வாழ்க்கை?

ஆம் அதிலென்ன சந்தேகம்.

ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கி போனது அடையாளம் தெரியாமல்.

உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான்.

அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்த போது ரஷ்ய தலைநகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்கவிட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செருப்பால் அந்த பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்து கொண்டார்கள். இப்படி சொல்லி கொண்டேபோகலாம். ஆணவக்காரர்கள் அடங்கி போன கதைகளை.

நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்?

நமது பதவியா?
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது படிப்பா?
நமது வீடா?
நமது அறிவையா?
நமது பிள்ளைகளா?
எது நம்மை காப்பாற்ற போகிறது?

ரத்தம் சுருங்கி நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்ற போவதில்லை.

பசித்தவனுக்கு உணவு கொடுத்து உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து எல்லாரையும் நேசித்து மனத் தூய்மையான வாழ்க்கையை வாழ்பவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.

கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கி கொள்ளும் ஆண்களும் பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.

ஒரே ஒரு முறை வாழ போகிறோம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்ய போகிறோம்.

நல்ல செயல்களை எண்ணங்களை விதைப்போம் அளவில்லாத மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிரம் மடங்காக...

பிறரை வாழ வைத்து வாழ்வோம். 

No comments:

Post a Comment