ஏழைகளின் கடவுள்
லூக்கா 18: 1-8 நற்செய்தியில் நேர்மையற்ற நடுவர் மற்றும் கைம்பெண் பற்றிய உவமை தரப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் நேர்மையற்ற நடுவர் கடவுளுக்கு ஒப்பிடப்படவில்லை. நேர்மையற்ற நடுவரை, நிச்சயம் நம்மால் கடவுளுக்கு ஒப்பிட முடியாது. அவரது இரக்கத்திற்கு முன்னால், இந்த நேர்மையற்ற நடுவரின் செயல், ஒரு பொருட்டே அல்ல. ஆனால், அவருக்கு எதிராக, கடவுள் ஒப்பிடப்படுகிறார். நேர்மையற்ற நடுவரே இப்படி இருந்தால், கடவுள் எப்படி இருப்பார்? என்று, எதிர்மறையான விதத்தில், நற்செய்தி சொல்லப்படுகிறது.
இந்த நற்செய்தியில் நாம் காண்கிற மற்றொரு செய்தி: ஏழைகள்பால் கடவுள் கொண்டிருக்கிற அன்பு. இன்றைய நற்செய்தியில் காணப்படும் பெண், கணவனை இழந்த பெண். அவளுக்கு ஒரு பிரச்சனை. அவளுக்கு ஒரு எதிரி. அவளுக்கு ஒரு அநீதி நடந்து விட்டது. அவளுக்கு அநீதி செய்தவன், இவள் சார்பாக யார் வர முடியும்? என்ற மமதையோடு, நடந்திருக்கிறான். அந்த பெண், நடுவரிடம் நிச்சயம் செல்வாள் என்பது, அவளது எதிர்க்கு தெரிந்திருக்கும். இருந்தபோதிலும், பணத்தைக்கொண்டு எதையும், சாதிக்கலாம் என்று, அவளுடைய எதிரி நினைத்திருந்தான். ஆனால், அவன் ஒன்றை மறந்து விட்டான். எளியவர்கள் சார்பாக, கடவுள் எப்போதும் இருப்பார், என்கிற செய்தியை அவன் முற்றிலும் புறக்கணித்துவிட்டான்.
நமது கடவுள் எளியவர்களின் கடவுள். ஏழைகளின் கடவுள். துன்பப்படுகிற மக்களின் சார்பாக இருந்து பேசுகிற கடவுள். ஏழைகளுக்காக இரங்குகிற கடவுள். ஏழைகளாக இருக்கக்கூடிய மக்கள், நமக்காக யார் இருக்கிறார்கள்? நம் சார்பாக யார் வாதாடுவார்கள்? என்று கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், கடவுள் அவர்களுக்காக இருக்கிறார்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
இந்த நற்செய்தியில் நாம் காண்கிற மற்றொரு செய்தி: ஏழைகள்பால் கடவுள் கொண்டிருக்கிற அன்பு. இன்றைய நற்செய்தியில் காணப்படும் பெண், கணவனை இழந்த பெண். அவளுக்கு ஒரு பிரச்சனை. அவளுக்கு ஒரு எதிரி. அவளுக்கு ஒரு அநீதி நடந்து விட்டது. அவளுக்கு அநீதி செய்தவன், இவள் சார்பாக யார் வர முடியும்? என்ற மமதையோடு, நடந்திருக்கிறான். அந்த பெண், நடுவரிடம் நிச்சயம் செல்வாள் என்பது, அவளது எதிர்க்கு தெரிந்திருக்கும். இருந்தபோதிலும், பணத்தைக்கொண்டு எதையும், சாதிக்கலாம் என்று, அவளுடைய எதிரி நினைத்திருந்தான். ஆனால், அவன் ஒன்றை மறந்து விட்டான். எளியவர்கள் சார்பாக, கடவுள் எப்போதும் இருப்பார், என்கிற செய்தியை அவன் முற்றிலும் புறக்கணித்துவிட்டான்.
நமது கடவுள் எளியவர்களின் கடவுள். ஏழைகளின் கடவுள். துன்பப்படுகிற மக்களின் சார்பாக இருந்து பேசுகிற கடவுள். ஏழைகளுக்காக இரங்குகிற கடவுள். ஏழைகளாக இருக்கக்கூடிய மக்கள், நமக்காக யார் இருக்கிறார்கள்? நம் சார்பாக யார் வாதாடுவார்கள்? என்று கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், கடவுள் அவர்களுக்காக இருக்கிறார்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
No comments:
Post a Comment