அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, November 19, 2017

பேரரசனுக்குப் பேரிரக்கம்!

இறை இரக்க கட்டுரைகள்

 கட்டுரை-6   பேரரசனுக்குப் பேரிரக்கம்!

அருட்தந்தை தம்புராஜ் சே.ச.

பேரரசர் ஒருவருக்குப் பேரிரக்கத்தை இறைவன் காட்டிய நிகழ்ச்சியை 2சாமு வேல் 11 மற்றும் 12 ஆம் அதிகாரங்களில் படிக்கின்றோம்:

பேரரசரான தாவீதுக்கு எல்லா வகையிலும் கடவுள் ஆசியையும், வளமையையும் அளித்தார். ஆனால், தாவீதோ தனது பலவீனத்தால் பெரும் பாவத்தைக் கட்டிக் கொள்கின்றார்.

போர்க்களத்தில் இருக்க வேண்டியவர், அக்களத்தை விட்டு விட்டுத் தன் அரண்மனைக்குத் திரும்புகிறார். ஒரு நாள் மதிய நேரத்தில் பெத்சபா என்ற அழகான பெண் குளித்துக் கொண்டிருப்பதைக் காண்கின்றார். அவள் யார் என அறிந்து கொள்ள தனது பணியாளர்களிடம் வினவுகின்றார். அவள் உரியாவின் மனைவி என்று அறிந்தும், அவளை அழைத்து வரச்சொல்லித் தனது உடல் இச்சைக்கு அடிமையாகி, அவளோடு உடல் உறவு கொள்கின்றார். சில மாதங்களுக்குப் பிறகு அவள் கர்ப்பிணி ஆன செய்தியை பெத்செபா தாவீதுக்கு அறிவிக்கின்றாள்.

பிறக்கப் போகும் குழந்தைக்கு உரியாதான் பொறுப்பு என்ற சுமையைச் சுமத்த, உரியாவைப் போர்க்களத்தினின்று அழைத்து வந்து அவனுக்கு விருந்தும், நன்கொடைகளும் கொடுத்து, தன் மனைவியிடம் செல்ல பணிக்கின்றார். ஆனால் உரியாவோ அக்காலச் சட்டப்படிப் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது எவரும் தன் மனைவியோடு மகிழ்ச்சியாய் இருக்கக்கூடாது என்பதைப் பின்பற்றி அவன் தன் மனைவியிடம் போகாமல் தாவீதின் அரண்மனையிலேயே தங்கிவிடுகின்றார். இதைக் கேள்விப்பட்ட தாவீது அரசன் உரியாவை மீண்டும் அழைத்து விருந்தளித்து நன்றாக அவனைக் குடிக்கக் கட்டாயப்படுத்துகின்றார். ஆனால் உரியாவோ தனது இல்லத்திற்குச் செல்ல மறுத்துவிடுகின்றார். அப்பொழுது வேறொரு திட்டத்தைத் தீட்டுகிறார் தாவீது அரசர். போர்க்களத்தில் போரின் தளபதியாக இருந்த யோவாபுக்கு ஒரு கடிதம் எழுதி, உரியாவைப் போர்க்களத்தின் முன்னிலையில் நிறுத்தி அவனைக் கொன்றுவிட ஆணையிடுகின்றார். அக்கடிதத்தை உரியாவிடமே கொடுத்தனுப்புகிறார்.

ஓராண்டிற்குப் பின் நாத்தான் என்ற இறைவாக்கினர், ஓர் உவமையின் வழியாக தாவீது அரசர் செய்த மிகப்பெரும் பாவத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்.

அப்போது, தாவீது அரசர், தான் செய்த பாவத்திற்காக மனமுருகி கண்ணீர் வடித்து இறைவனிடம் மன்னிப்புக் கோருகின்றார். இச்சமயத்தில் தான் தாவீது திருப்பாடல் 51-ஐ எழுதுகின்றார்:

கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினைமுற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும். என் பாவம் அற்றுப் போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். கடவுளும் தமது பேரிரக்கத்திற்கேற்ப தாவீதை மன்னித்து அவருக்கு எல்லாவிதமான வளங்களையும், வெற்றியையும் தருகின்றார்.

அவரைப் பற்றித் தான் வைத்திருந்த மதிப்பைக் கடவுள் மாற்றவில்லை: ஈசாயின் மகனான தாவீது என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன். என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான் என்று சான்று பகர்ந்தார் (திப 13:22).


ஆகவே, நாம் எத்துணை பெரிய பாவிகளாய் இருந்தாலும், இறைவன் நம்மைத் தமது மகனாக, மகளாக ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையில் நிலைத்திருப்போம்!.--ஆமேன்

No comments:

Post a Comment