அனைத்திற்கும் மேலாக ஆண்டவருடைய ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்! - லூக்கா 14: 15-24
இங்கிலாந்து நாட்டின் அதிபரான வின்ஸ்டன் சர்ச்சில் ஒருநாள் லண்டனில் இருந்த தன்னுடைய நண்பருடைய வீட்டிற்கு மதிய விருந்துக்கு சென்றிருந்தார். விருந்து முடிந்து நண்பரோடு ஒருசில முக்கியமான காரியங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. அவர் சற்றென்று கடிகாரத்தைப் பார்த்தபோது நேரம் ஐந்து மணி முப்பது வினாடிகள் ஆகியிருந்து. மாலை ஆறுமணிக்கு அவர் பிபிசி வானொலி நிலையத்தில் உரையாற்றவேண்டி இருந்தது. நடந்து சென்றால் அரைமணி நேரத்திற்குள் வானொலி நிலையத்திற்குச் செல்வது என்பது இயலாத ஒன்று. எனவே, அவர் ஒரு வாடகை வாகனத்தை அமர்த்தி, அதில் வானொலி நிலையத்திற்குச் செல்லத் திட்டமிட்டார். (வின்ஸ்டன் சர்ச்சிலிடம் அவருக்கென்று வாகனம் கிடையாது என்பது இன்னொரு செய்தி).
அவர் நண்பருடைய வீட்டிலிருந்து வெளியே வந்து, பக்கத்தில் வாடகைக் கார் வைத்திருந்தவரிடம், “பிபிசி வானொலி நிலையத்திற்கு என்னைக் கொண்டு செல்ல முடியுமா?” என்று கேட்டார். அந்த வாகன ஒட்டியயோ அதற்கு முன்னதாக வின்ஸ்டன் சர்ச்சிலைப் பார்த்திராதவர். அவர் அவரிடம், “நான் ஆறு மணிக்குள் வீட்டுக்குச் சென்று, ஆறு மணிக்கு வானொலியில் ஒளிபரப்பப்படுகின்ற வின்சென்ட் சர்ச்சிலின் உரையைக் கேட்கவேண்டும்” என்றார்.
வாகன ஒட்டி இப்படிச் சொன்னதைக் கேட்ட வின்சென்ட் சுர்ச்சில் தனக்கு இப்படி ஒரு இரசிகனா என்று வியந்துபோய் நின்றார். அதே நேரத்தில் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அவன் உண்மையிலே தனக்குத் தீவிர இரசிகனா என்று சோதித்துப் பார்க்க விரும்பினார். “தம்பி! உனக்கு இன்னும் அதிகமாகப் பணம் தருகின்றேன். என்னை வானொலி நிலையத்தில் மட்டும் கொண்டுபோய் விட்டுவிடு” என்றார். பணத்தைப் பார்த்த வாகன ஒட்டி, “வின்சென்ட் சர்ச்சில் என்றால் பெரிய இவரா ... இன்றைக்கு ஒருநாள் அவருடைய பேச்சைக் கேட்காவிட்டால் என்ன குடிமூழ்கியா போய்விடப் போகின்றது” என்றார்.
வாகன ஓட்டி இப்படிச் சொன்னதைக் கேட்டு வின்சென்ட் சர்ச்சிலுக்கு மயக்கம் வராத குறைதான். பணம் கிடைத்தால் எது வேண்டுமானாலும் செய்யத் துணிகின்ற மனிதர்கள் இன்றைக்கு அதிகமாக இருகின்றார்கள் என்பதை இந்த நிகழ்வு வேதனையோடு பதிவு செய்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுள் ஒருவர், “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” என்று சொல்ல, இயேசு அவருக்கு ஓர் உவமையைச் சொல்கின்றார்.
இயேசு சொல்லக் கூடிய உவமையில் வரும் அரசர் பெரிய விருந்தொன்று படைக்கின்றார். அந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமானவர்களை அழைக்கின்றார். ஆனால் அழைப்புப் பெற்றவர்களோ சாக்குப் போக்குச் சொல்லி விருந்துக்கு வராமல் இருந்துவிடுகின்றார்கள். எனவே, இதைக் கேட்டு சினம்கொண்ட அரசன் வீதியோரங்களில் இருக்கின்ற ஏழைகள், அனாதைகள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுக்கின்றார்.
இயேசு சொல்லக்கூடிய உவமையில் வரும் அரசர்தான் கடவுள். அவர் தன்னுடைய மகிமையில் பங்கு கொள்வதற்காக, விருந்தில் கலந்து கொள்வதற்காக முதலில் யூதர்களை அழைக்கின்றார். யூதர்கள் கடவுள் கொடுத்த அழைப்பை மறுத்து வேறு வேலைக்குச் சென்றதால், கடவுள் புறவினத்தாரையும் பாவிகளையும் விருந்துக்கு அழைக்கின்றார். இயேசு இந்த உவமையின் வழியாக யூதர்கள் கடவுள் கொடுத்த வாய்ப்பினை இழந்து போனதையும், புறவினத்தார் அந்த வாய்ப்பினை பெற்றுக் கொண்டதையும் எடுத்துச் சொல்கின்றார். இவ்வாறு கூறுவதன்வழியாக யூதர்கள் மட்டுமே கடவுள் தரும் விருந்தில் கலந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தை உடைத்துப் போடுகின்றார்.
அரசன் கொடுத்த அழைப்பை மறுத்து, விருந்தில் கலந்து கொள்ளாமல் இருந்தவர்கள் சொல்லக்கூடிய சாக்குப் போக்கு நம்முடைய சிந்தனைக்குரியதாக இருகின்றது. முதலாமவன், “நான் வயல் வாங்கி இருக்கின்றேன்” என்று சொல்கிறான். இவன் வேலை வேலை என்று அலைந்து, கடவுளை மறந்துபோனவர்களைச் சுட்டிக் காட்டுபவனாக இருக்கின்றான். இரண்டாமவன், “நான் புதிதாக ஐந்து ஏற்மாடுகள் வாங்கியிருக்கின்றேன். அதனால் என்னால் மாறமுடியாது” என்று சொல்கின்றான். ஐந்து மாடுகள் ஐம்புலன்களைக் குறிக்கின்றது. எனவே, இவன் புலன் இன்பங்களுக்கு அடிமையாகி கடவுளை மறந்துபோனவர்களைக் குறிப்பவனாக இருக்கின்றேன். மூன்றாமவன், “எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று, என்னால் வரமுடியாது” என்கின்றான். இவன் கடவுளை மறந்து, மனித உறவுகளை நம்பி வாழ்பவனைக் குறிப்பவனாக இருக்கின்றான். இப்படிப்பவர்கள் எல்லாம் இறைவன் தரும் விருந்தில் கலந்து கொள்ள முடியாது என்பதுதான் நிஜம்.
இயேசு சொல்வார், “அனைத்திற்கும் மேலாக அவருடைய ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுகள். அப்போது இவையனைத்தும் உங்களுக்கு சேர்த்துக் கொடுக்கப்படும் என்று (மத் 6:33).
நாம் அனைத்திற்கும் மேலாக ஆண்டவரைத் தேடுவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.
இங்கிலாந்து நாட்டின் அதிபரான வின்ஸ்டன் சர்ச்சில் ஒருநாள் லண்டனில் இருந்த தன்னுடைய நண்பருடைய வீட்டிற்கு மதிய விருந்துக்கு சென்றிருந்தார். விருந்து முடிந்து நண்பரோடு ஒருசில முக்கியமான காரியங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. அவர் சற்றென்று கடிகாரத்தைப் பார்த்தபோது நேரம் ஐந்து மணி முப்பது வினாடிகள் ஆகியிருந்து. மாலை ஆறுமணிக்கு அவர் பிபிசி வானொலி நிலையத்தில் உரையாற்றவேண்டி இருந்தது. நடந்து சென்றால் அரைமணி நேரத்திற்குள் வானொலி நிலையத்திற்குச் செல்வது என்பது இயலாத ஒன்று. எனவே, அவர் ஒரு வாடகை வாகனத்தை அமர்த்தி, அதில் வானொலி நிலையத்திற்குச் செல்லத் திட்டமிட்டார். (வின்ஸ்டன் சர்ச்சிலிடம் அவருக்கென்று வாகனம் கிடையாது என்பது இன்னொரு செய்தி).
அவர் நண்பருடைய வீட்டிலிருந்து வெளியே வந்து, பக்கத்தில் வாடகைக் கார் வைத்திருந்தவரிடம், “பிபிசி வானொலி நிலையத்திற்கு என்னைக் கொண்டு செல்ல முடியுமா?” என்று கேட்டார். அந்த வாகன ஒட்டியயோ அதற்கு முன்னதாக வின்ஸ்டன் சர்ச்சிலைப் பார்த்திராதவர். அவர் அவரிடம், “நான் ஆறு மணிக்குள் வீட்டுக்குச் சென்று, ஆறு மணிக்கு வானொலியில் ஒளிபரப்பப்படுகின்ற வின்சென்ட் சர்ச்சிலின் உரையைக் கேட்கவேண்டும்” என்றார்.
வாகன ஒட்டி இப்படிச் சொன்னதைக் கேட்ட வின்சென்ட் சுர்ச்சில் தனக்கு இப்படி ஒரு இரசிகனா என்று வியந்துபோய் நின்றார். அதே நேரத்தில் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அவன் உண்மையிலே தனக்குத் தீவிர இரசிகனா என்று சோதித்துப் பார்க்க விரும்பினார். “தம்பி! உனக்கு இன்னும் அதிகமாகப் பணம் தருகின்றேன். என்னை வானொலி நிலையத்தில் மட்டும் கொண்டுபோய் விட்டுவிடு” என்றார். பணத்தைப் பார்த்த வாகன ஒட்டி, “வின்சென்ட் சர்ச்சில் என்றால் பெரிய இவரா ... இன்றைக்கு ஒருநாள் அவருடைய பேச்சைக் கேட்காவிட்டால் என்ன குடிமூழ்கியா போய்விடப் போகின்றது” என்றார்.
வாகன ஓட்டி இப்படிச் சொன்னதைக் கேட்டு வின்சென்ட் சர்ச்சிலுக்கு மயக்கம் வராத குறைதான். பணம் கிடைத்தால் எது வேண்டுமானாலும் செய்யத் துணிகின்ற மனிதர்கள் இன்றைக்கு அதிகமாக இருகின்றார்கள் என்பதை இந்த நிகழ்வு வேதனையோடு பதிவு செய்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுள் ஒருவர், “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” என்று சொல்ல, இயேசு அவருக்கு ஓர் உவமையைச் சொல்கின்றார்.
இயேசு சொல்லக் கூடிய உவமையில் வரும் அரசர் பெரிய விருந்தொன்று படைக்கின்றார். அந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமானவர்களை அழைக்கின்றார். ஆனால் அழைப்புப் பெற்றவர்களோ சாக்குப் போக்குச் சொல்லி விருந்துக்கு வராமல் இருந்துவிடுகின்றார்கள். எனவே, இதைக் கேட்டு சினம்கொண்ட அரசன் வீதியோரங்களில் இருக்கின்ற ஏழைகள், அனாதைகள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுக்கின்றார்.
இயேசு சொல்லக்கூடிய உவமையில் வரும் அரசர்தான் கடவுள். அவர் தன்னுடைய மகிமையில் பங்கு கொள்வதற்காக, விருந்தில் கலந்து கொள்வதற்காக முதலில் யூதர்களை அழைக்கின்றார். யூதர்கள் கடவுள் கொடுத்த அழைப்பை மறுத்து வேறு வேலைக்குச் சென்றதால், கடவுள் புறவினத்தாரையும் பாவிகளையும் விருந்துக்கு அழைக்கின்றார். இயேசு இந்த உவமையின் வழியாக யூதர்கள் கடவுள் கொடுத்த வாய்ப்பினை இழந்து போனதையும், புறவினத்தார் அந்த வாய்ப்பினை பெற்றுக் கொண்டதையும் எடுத்துச் சொல்கின்றார். இவ்வாறு கூறுவதன்வழியாக யூதர்கள் மட்டுமே கடவுள் தரும் விருந்தில் கலந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தை உடைத்துப் போடுகின்றார்.
அரசன் கொடுத்த அழைப்பை மறுத்து, விருந்தில் கலந்து கொள்ளாமல் இருந்தவர்கள் சொல்லக்கூடிய சாக்குப் போக்கு நம்முடைய சிந்தனைக்குரியதாக இருகின்றது. முதலாமவன், “நான் வயல் வாங்கி இருக்கின்றேன்” என்று சொல்கிறான். இவன் வேலை வேலை என்று அலைந்து, கடவுளை மறந்துபோனவர்களைச் சுட்டிக் காட்டுபவனாக இருக்கின்றான். இரண்டாமவன், “நான் புதிதாக ஐந்து ஏற்மாடுகள் வாங்கியிருக்கின்றேன். அதனால் என்னால் மாறமுடியாது” என்று சொல்கின்றான். ஐந்து மாடுகள் ஐம்புலன்களைக் குறிக்கின்றது. எனவே, இவன் புலன் இன்பங்களுக்கு அடிமையாகி கடவுளை மறந்துபோனவர்களைக் குறிப்பவனாக இருக்கின்றேன். மூன்றாமவன், “எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று, என்னால் வரமுடியாது” என்கின்றான். இவன் கடவுளை மறந்து, மனித உறவுகளை நம்பி வாழ்பவனைக் குறிப்பவனாக இருக்கின்றான். இப்படிப்பவர்கள் எல்லாம் இறைவன் தரும் விருந்தில் கலந்து கொள்ள முடியாது என்பதுதான் நிஜம்.
இயேசு சொல்வார், “அனைத்திற்கும் மேலாக அவருடைய ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுகள். அப்போது இவையனைத்தும் உங்களுக்கு சேர்த்துக் கொடுக்கப்படும் என்று (மத் 6:33).
நாம் அனைத்திற்கும் மேலாக ஆண்டவரைத் தேடுவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.
No comments:
Post a Comment