அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, November 21, 2017

இறைவன் கொடுத்த தாலந்தை நாம் என்ன செய்தோம்?

இறைவன் கொடுத்த தாலந்தை நாம் என்ன செய்தோம்? -  லூக்கா  19: 11-28


ஆங்கிலேய ஆட்சியில் கடைசி வைஸ்ராயாக இருந்தவர் மவுண்பேட்டன் பிரபு அவர்கள். தனது சாதூயர்த்திற்கும், புத்திக்கூர்மைக்கும் பேர்போனவர். எப்படிப்பட்ட பிரச்சனையையும் தனது புத்திக்கூர்மையால் தீர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்.
ஒருமுறை பத்திரிக்கையாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்விகேட்டார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் அவர் மிகவும் பொறுமையாக, அறிவுத்தெளிவோடு பதிலளித்தார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் எழுந்து நின்று அவரை வாழ்த்திவிட்டு கேட்டார், “ உங்களுடைய இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?” என்று.
அதற்கு அவர், “நான் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய பெற்றோர்கள்கூட விவசாயிகள்தான். ஆனால் என்னுடைய இந்த வெற்றிக்குக் காரணமாக இருப்பது என்னுடைய கடின உழைப்புதான். உழைப்பால்தான் நான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறேன்” என்றார்.
அதைக் கேட்ட பத்திரிக்கையாளர்கள் அவரை வெகுவாக வாழ்த்திவிட்டுச் சென்றனர்.
ஒருமுறை ரஷ்ய அதிபர் லெனின் இவ்வாறு சொன்னார், “நாடு முன்னேறத் தேவையான மூன்று: உழைப்பு, கடின உழைப்பு, ஓயாத உழைப்பு இவைதான்” என்று. ஒருமனிதன் தன்னுடைய வாழ்வில் கடுமையாக உழைத்தால் மட்டுமே உயர முடியும் என்பதை இந்நிகழ்வுகள் நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மினா உவமையைக் குறித்துப் பேசுகிறார். (மத்தேயு நற்செய்தியில் இது தாலந்து உவமையாக வருகின்றது). உயிர்குடிமகன் ஒருவர் தன்னுடைய பணியாளர்களை அழைத்து அவர்களிடம் பத்து மினாக்களைக் கொடுத்துவிட்டு தொலைதூரம் செல்கிறார். சில நாட்களுக்குப் பிறகு தன்னுடைய பணியாளர்களை அழைத்து, அவர்களிடம் கணக்குக் கேட்கிறபோது ஒருவன் பத்து மினாக்களையும், இன்னொருவன் ஐந்து மினாக்களையும் ஈட்டியதாக கொண்டுவந்து தருகிறான். கடைசியில் வந்தவனோ தலைவன் தனக்குக் கொடுத்த மினாவை கைகுட்டையில் முடிந்துவைத்து அப்படியே கொடுக்கிறான். இதனால் தலைவனுடைய சினத்துக்கு ஆளாகிறான்.
இங்கே மினா – தாலந்து – என்பதை கடவுள் நமக்குக் கொடுத்தாக திறமைகள், வாய்ப்பு, வசதிகள் என்பதாக புரிந்துகொள்ளலாம். கடவுள் யாரையுமே திறமையற்றவராகவோ அல்லது ஜடமாகவோ படைக்கவில்லை. அதை நாம் எசா 43:4 ல் வாசிக்கின்றோம், “என் (கடவுள்) பார்வையில் நீ விலையேற்றப் பெற்றவன்; மதிப்பு மிக்கவன்” என்று. ஆம், நாம் ஒவ்வொருவரும் திறமையானவர்கள், ஆற்றல்மிக்கவர்கள்.
ஆனால் பலர் இன்று தங்களிடம் இருக்கும் திறமையை உணராமல்; தங்களுடைய மதிப்பை அறியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். “உன்னையே நீ அறிவாய்” என்பான் தத்துவஞானி சாக்ரடிஸ். நாம் நம்மிடம் என்ன திறமை இருக்கிறது, என்ன ஆற்றல் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டால் வாழ்வில் உயர்ந்த இலட்சியங்களை அடையலாம். உவமையில் வரும் முதல் இரண்டு பணியாளர்களும் தங்களிடம் இருந்த திறமையை, உழைப்பைப் பயன்படுத்தி பத்து, ஐந்து மினாக்கள் முறையே ஈட்டினார்கள். அதனால் அவர்கள் தங்களுடைய தலைவரிடமிருந்து அதற்கான வெகுமதியைப் பெற்றார்கள். நாம் நமது திறமையை, உழைப்புப் பயன்படுத்தினால் என்றும் உயர்வுதான்.
அதேவேளையில் உழைக்காமல் சோம்பித்திரிவது என்பது கடவுளின் தண்டனைக்கு உரியதாக கருதப்படுகிறது. உவமையில் வரும் கடைசிப் பணியாளர் தலைவன் தனக்குக் கொடுத்த மினாவை வைத்து மேலும் செல்வம் ஈட்டாமல் கைகுட்டையில் பொதிந்து வைத்திருக்கிறான். அதனால் தலைவனின் சினத்திற்கு உள்ளாகிறான். நாமும்கூட பலவேளையில் உழைக்காமல், ஏனோதானோ என்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். “சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவர், அது நின்றாலும் ஓடினாலும் ஒன்றுதான்” என்பார் கூப்பர் என்ற அறிஞர். ஆம், சோம்பேறி ஒன்றுக்கும் உதவாதவன். அதனால் அவன் அழிவையே சந்திப்பான்.
ஆதலால் கடவுள் நமக்குக் கொடுத்த தாலந்துகளை, திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தி வாழ்வோம். அதன்வழியாய் இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.


No comments:

Post a Comment