அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, November 21, 2017

அனைத்திற்கும் மேலாக இறைவனைப் தேடுவோம்.

அனைத்திற்கும் மேலாக இறைவனைப் தேடுவோம். 

குருநாதர் சிவானந்தார். மிகப்பெரிய ஞானி. இருநூறு நூல்களுக்கும் மேல் எழுதிய ஓர் அறிஞரும் கூட.

ஒருமுறை அவரிடத்தில் ஒர் இளைஞன் வந்து, “குருவே! நீங்கள் நிறைய தத்துவங்களைப் பேசி இருக்கிறீர்கள். ஏராளமான நூல்களை எழுதியிருக்கிறீர்கள். இவற்றில் நான் எதைப் பின்பற்றுவது, ஒரே குழப்பாக இருக்கிறது” என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினான். அதற்கு குரு, “என்னுடைய போதனைகளை இரண்டு வார்த்தைகளில் சொல்கிறேன் கவனமாகக் கேள்” என்று சொல்லிவிட்டுச் ‘பிரித்தல், சேர்த்தல்’” என்றார்.

வந்தவன் அதைக்கேட்டு குழம்பிப்போனான். அப்போது அவர், “உலக இச்சைகளிலிருந்து பிரிந்து சென்று, இறைவனோடு சேர்த்தல்” என்று விளக்கமளித்தார். இதைக் கேட்ட அந்த இளைஞன் குருவிற்கு நன்றி சொல்லிவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு” என்பார் அய்யன் திருவள்ளுவர். உலக செல்வங்களிலிருந்து நம்மையே நாம் விடுவிடுத்துக் கொண்டு, உண்மைச் செல்வமாகிய கடவுளைப் பற்றிக்கொண்டு வாழவேண்டும் என்பதுதான் இக்குறளின் விளக்கமாக இருக்கின்றது. மேலே சொல்லப்பட்ட கதையும்கூட நாம் உலக செல்வங்களைத் துறந்து, இறைவனைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனையை வழங்குகின்றது.

லூக்கா  14: 15-24 நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறையாட்சியை பெரிய விருந்து ஒன்றுக்கு ஒப்பிடுகின்றார். அரசன் ஒருவன் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்கின்றான். அவ்விருந்துக்கு ஏற்கனவே தான் அழைப்பு விடுத்திருந்தோரை அழைக்கின்றான். ஆனால் அவர்களில் ஒருவர் வயலுக்குச் செல்லவேண்டும் என்றும், இன்னொருவன் ‘புதிதாக வாங்கி இருக்கும் ஐந்து மாடுகளை மேய்க்கவேண்டும்’ என்றும், வேறொருவன் ‘இப்போதுதான் திருமணம் ஆகி இருக்கிறது’ என்று சொல்லி போக மறுத்துவிடுகிறார்கள். இதனால் சினம்கொண்ட அந்த அரசன் சாதாரண வறியோரையும், எளியோரையும் விருந்துக்கு அழைக்கின்றார்.

இங்கே சிந்தித்துப் பார்க்கவேண்டிய காரியம், இறைவனின் இறையாட்சியில் பங்குகொள்வது, யாருக்குமே கிடைக்காத பேறு. ஆனால் நாமோ அதனை சாதாரண காரியங்களுக்காகத் தட்டிக் கழிக்கின்றோம். திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்ற ஒருவன், “நான் வயலுக்குப் போகவேண்டும்” என்று சொல்கிறான். வயல் என்பது உணவு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உணவுக்காக, அடிப்படைத் தேவைகளுக்காக நம்முடைய வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்துவிட்டு, இறைவனை மறந்தவர்களாக மாறிவிடுகின்றோம். இயேசு சொல்லும் பணக்காரன், ஏழை லாசர் உவமையில் பணக்காரன் எப்போதுமே அறுசுவை உணவுஉண்டு கொழுத்துப்போய் இருக்கிறான். அதனாலே அவன் அழிவைச் சந்திக்கிறான்.

அடுத்ததாக இயேசு கூறும் இந்த உவமையில் ஒருவன், “புதிதாக ஐந்து மாடுகளை வாங்கி இருக்கிறேன். அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன்” என்று சொல்கிறான். ஐந்து மாடுகள் என்பது நமது ஐந்து புலன்களைக் குறிக்கின்றது. இன்றைக்கு மனிதர்கள் புலனடக்கம் இல்லாமல் கண்களாலும், காதுகளாலும், தவறு இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது உடலே இறைவன் கொடுத்த பிச்சை என்பதை மறந்து நமது மனம் போன போக்கில் வாழுந்துகொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலும் ஆசைப் பட்டு, அதனை அடையமுடியாமல் தவிக்கின்றோம்.

“கூரை செம்மையாக வேயப்பட்ட வீட்டினுள் மழைநீர் இறங்காததுபோல, நன்னெறிப் பண்புள்ள மனதிலும் ஆசைகள் நுழையவே முடியாது” என்பார் புத்தர். நமது புலன்களை – உடலை – ஆசைகள் எல்லாவற்றிலும் இருந்து விடுவித்து இறைவனிடம் கையளிப்போம். இறைவன் நம்மை ஆளட்டும்.

மேலும் இந்த உவமையில் ஒருவன், “எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று, அதனால் என்னால் வரமுடியாது” என்கிறான். திருமணம் என்பது நமது உறவுகளைச் சுட்டிக்காட்டுகிறது. மத் 10:37 ல் இயேசு கூறுவார், “என்னைவிடத் தன் தாய் தந்தையிடமோ, சகோதர, சகோதரிகளிடமோ அன்பு செலுத்துவோர் என் சீடராக இருக்க முடியாது” என்று. ஆகையால் இயேசுவைத் தவிர வேறு யாருக்கும் அதிக முக்கியத்துவம் தருகிறவர், அவருடைய சீடராக இருக்க முடியாது என்பதே இங்கே உணர்த்தப்படும் செய்தி.

எனவே இயேசு தரும் இறையாட்சி என்னும் விருந்தில் கலந்துகொள்ள இறைவனுக்கு நமது வாழ்வில் முதலிடம் கொடுத்து வாழ்வோம். அப்படி வாழும்போது இறைவன் நம்மை நிறைவாய் அசிர்வதிப்பார். இறையருள் நிரம்பத் தருவார். - Fr. Palay Maria Antonyraj, Palayamkottai.

 

No comments:

Post a Comment